மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

துயரக்காற்றில் அலையும் மலர்…

கவிதைகள்
1264180814thamarai-news
உணர முடியா

தருணமொன்றில்
மெளனமாய் சொட்டிக்
கொண்டே இருக்கின்றன
கருகிப் போன நம்பிக்கைகள்..

சின்னஞ்சிறு கரத்தோடு
பின்னி பிணைந்த
விரல்களின் நெருக்கமும்…
நிலாக்கால இரவுகளில்..
கதைகள் கேட்ட கதகதப்பும்..
கனவாய் தொலைந்த வலியில்
வார்த்தைகளற்று வெறித்தப்படியே…

துயரக்காற்றில்
அலைந்திருக்கும்
ஒரு மலர் உதிரவும்
முடியாமலும்..
உறங்கவும்
முடியாமலும்…..

(யார் பக்கம் தவறு இருந்தாலும்…
தண்டனையை மட்டும் அடைந்திருக்கும்
தியாகு-தாமரை மகன் சமரனிற்காக.. )

 900 total views,  1 views today