பாக்யராசன் என்ற என் வாழ்க்கை…
சுயம்
ரணத்துக்
கனத்து
நிகழ்கிற
என்
நொடிகளை
எல்லாம்.
ஒரு.
இளையராஜா
பாடல் போல
நிலா மிதக்கும்
கனாக் காலமாக
மாற்ற அவனால்
முடிந்திருக்கிறது..
ஏதோ ஒரு திசையில்..
ஒரு அலைபேசி
உரையாடலோடு
சிரித்தவாறே
அவன்
நகர்கையில்…
எதிர்பாராமல்
சந்தித்து விட்ட
விழிகளோடு
விழிகளாலேயே
ஒரு புன்னகை
கைக்குலுக்கல்
மூலமாகவே
அன்பை நகர்த்தி
விடுவதில்
அவன் அசரா
அசுரன்…
எனக்கென
அவன்
தனித்து சேமித்து
இருக்கும்
ப்ரியங்களை
அவன் சொற்களால்
காட்டியதே இல்லை..
சில சமயங்களில்
சிக்கனமான கரம்
பற்றுதலில்..
தல என்று அழைக்கும்
குழைவில் என்றெல்லாம்
அடுக்கிக் கொண்டே
போனாலும்..
அதுவல்ல எனக்கான
அவன்
என அவனுக்கும் ,எனக்கும்
தெரியும்.
விவரிக்க முடியா
பேரன்பின் அக்கறையோடு
என்னை இழுத்துக்
கொண்டே திரிகிறான்..
கடும் சுமையாய்
நான் கனத்தப் பொழுதுகளில்
கூட..
அமைதியான காட்டில்
யாரும் அறியா பெய்யும்
மழை போல..
என்னை கரைத்து இருக்கிறான்..
கரை சேர்த்து இருக்கிறான்..
அவனுக்கென
என்னிடம் சொல்ல
இதற்கும் மேலும்..
வாஞ்சை சொற்கள்
நிரம்பிய
உணர்ச்சிக்குடங்கள்
உண்டு தான்..
உடைத்துக் கொண்டே
போகலாம் தான்..
ஆனால் வாழ்க்கை இருக்கிறதே…
அவனோடு வாழ..
என் தங்கை மீராவிற்கு..
என் மருமகள் அகநகைக்கு..
எனக்கும் …
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல..
675 total views, 1 views today