போர்ஹேவின் சொற்கள்..
சுயம்
பிப்ரவரி 16, 2018
என் முதுகிற்கு பின்னால் உதிர்க்கபடும் வசவுகளையும்,தூற்றல்களையும் கண்டு புண்படவோ..புன்னகைக்கவோ எனக்கு நேரம் இல்லை.
ஏனெனில்..காயம் கொடியதென்றாலும்..உள்ளுக்குள் வெடிக்கக் காத்திருக்கும் கனவு பெரிது.
என்
முன்னால் நீளும் பாதையில்..
என் குதிரையின் கால்கள் பயணப்பட்டுக்கொண்டே இருக்கும்.
எனக்கு உறுதியாகத் தெரியும்.
இந்த கொடும் விதி சமைத்த பாதையில் காற்றின் வழியே கசிந்து வரும் ஏதோ ஒரு புல்லாங்குழல் என் ஆன்மாவிற்கான பிரத்யோகப் பாடலை இசைத்து என் கொந்தளிப்பை அடக்கும்.
ஏனெனில்..நான் என்னிலிருந்து விடுதலை பெற்றே தீருவதற்கான பாதையில் போவதாக மீண்டும் உறுதி செய்து கொண்டே இருட் பாதையின் ஊடே நம்பிக்கை சுரக்கும் களங்கமற்ற இலட்சிய தாகம் மினுக்கும் இலக்கினை தேடிப் பயணிக்கிறேன்.
மற்றபடி..நான் எதுவுமில்லை…
– போர்ஹே.
688 total views, 1 views today