நிறைவேறி விட்ட உறவில்

தேன்மொழி

மரணம் அடைகிறாள்.

நிறைவேறாத

ஏக்கத்தில் தான்

தேன்மொழி வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

உண்மையில்

தேன்மொழியை தேடி

அலைபவர்கள்

காணும் போது

தொலைத்து விடுகிறார்கள்.

சொல்லப்போனால் தொலைப்பதற்காகவே

கண்டெடுக்கப்படுகிறவள் தான்

தேன்மொழி.

மீண்டும்

மீண்டும்

அலைகள்

கரைகளை நோக்கி

வந்து கொண்டு தான்

இருக்கின்றன.

ஆனால்

செந்நிற அந்தி

ஒன்றில்

கைநழுவிப்போன

அந்த ஒரு அலை

திரும்பி வருவதே இல்லை.

நினைவின்

உயிர் கால்

நனைத்து

ஒருபோதும்

திரும்பி

வராமல் போன

அந்த அலை தான்

தேன் மொழி.

❤️