பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Month: டிசம்பர் 2007

காலச்சுவட்டின் நவீன கதாகாலட்சேபம்…

அ.மார்க்ஸ் குறித்து காலச்சுவடு நவம்பர் 07 மாத இதழில் வெந்து தணியும் அவதூறுகள் என்ற தலைப்பில் வெளிவந்த பழித்தூற்றலுக்கு எதிர்வினையாக இந்த விவாதத்தை துவக்குகிறேன்…
காலச்சுவடு கண்ணன் எதிர்பார்த்தது போலவே ஞாநிக்கு ஆதரவாக களமிறங்கி போராட துவங்கி உள்ளார்…இதில் ஆச்சர்யப்படவோ, அச்சப் படவோ ஏதுமில்லை என்றாலும் கண்ணன் இந்த முறை அளவுக்கதிகமாக கொந்தளிப்பது நடக்கும் சர்ச்சையை சுவாரசியமாக்கிக் காட்ட உதவுமே தவிர வேறு ஒன்று மில்லை…
தலித் மற்றும் சிறுபான்மை, விளிம்பு நிலை இலக்கிய பக்கங்களில் அ.மார்க்ஸ் அவர்களுக்கு தனியே ஒரு இடம் உண்டு…பெளத்த,சமண ஆய்வுகள் மூலம் இந்துத்துவாவின் தோலுறித்த அ.மார்க்ஸ்க்கு காலச்சுவடு கண்ணன் மூலம் எதிர்ப்பு வந்ததில் ஒன்றும் ஆச்சர்யமில்லைதான்…..
ஞாநியும்,கண்ணனும் அமைந்திருக்கும் சாதிக் கூட்டணி இந்த முறை அ.மார்க்ஸை தாக்க அமைந்துள்ளது…..பார்ப்பனச் சார்பு தன்மையில் காலச்சுவட்டின் முகமுடி கிழிந்து தொங்குவது குறித்து கண்ணனுக்கு திடீரென்று ஆத்திரம் பொத்துக் கொண்டு வருகிறது…..ஏற்கனவே சங்கராச்சாரி கைது சம்பவத்தின் போது எழுத்தாளர்கள் இதில் எதிர்வினை புரிய வேண்டும் என மறைந்த சுந்தர ராமசாமி கருத்து தெரிவித்தப் போதே நான் தீராநதியில் எழுதிய எதிர்வினையில் இது போன்ற சாதாரண கைது நிகழ்வை சுந்தர ராமசாமி தனக்கே உரிய குறுக்கு வழியில் பரபரப்பாக்க முயல்கிறார் என்று குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு வருகிறது.
காலச்சுவடு இந்த முறை அ.மார்க்ஸை தாக்கியுள்ளதை அ.மார்க்ஸ் என்ற தனிநபர் மீது நடந்த தாக்குதலாக நாம் கருத இயலாது. ஞாநியின் விஷம் தோய்ந்த கட்டுரை குறித்து எதிர்வினைகள் செய்த உலக தமிழ் மக்கள் அரங்கம் உறுப்பினர்கள் மற்றும் இணைய பக்கங்களில் எழுதி தன் எதிர்ப்பை பதிவு செய்த தோழர்கள், தமிழ் நாடு முழுதும் கண்டன கூட்டங்கள் நடத்திய தமிழ் படைப்பாளர்கள் ஆகியோரை உள்ளடக்கி சேர்த்து மொழிப் பற்றாளர்கள் அனைவரின் மீதும் காலச்சுவடு நடத்திய தாக்குதலாக இதை நாம் நினைக்கிறோம்…
ஞாநி மீது ரத்தபாசம் கண்ணனுக்கு வர என்ன காரணம் என்பதை நான் இங்கே விளக்கத் தேவை இல்லை.ஆனால் அதே கட்டுரையில் ஞாநி எழுதியது தவறு தான் கண்ணனே ஒத்துக் கொள்கிறார்…..அப்புறம் எதற்கு வருகிறது கோபம் என்ற கேள்விக்கு யாரும் அளிக்கலாம் விடையை…
வக்கிரம் பிடித்து, தான் என்ன எழுதுகிறோம் என்று நன்கு தெரிந்து தன்னுடைய விஷம் தோய்ந்த எழுத்துக்களால் தமிழர்களையும் ,அவர்களது பிரத்யோக ஆளுமைகளையும் தாக்கி வரும் ஞாநி குறித்து நாம் ஏற்கனவே கடுமையான விமர்சனங்களை ஞாநி தி ரைட்டர் என்ற ஞாநியின் ரசிகர்கள் நடத்தி வரும் ஆர்குட் குழுமத்தில் முன் வைத்தோம்…ஞாநியின் எழுத்துகளில் தெரியும் ஆரிய மனம் என்று துவங்கும் அந்த விவாதத்தில் ஞாநியே நேரடியாக கலந்து கொண்டு விவாதித்து ,பிறகு ஒதுங்கிக் கொண்டார்…அந்த விவாத்தின் போது நமது உலக தமிழ் மக்கள் அரங்க நிர்வாகிகள் சசி,யுவன்பிரபாகரன், பிரபாகரன், தமிழ் மற்றும் பிரின்ஸ் பெரியார், விடாது கருப்பு போன்ற தோழர்கள் என்னோடு இணைந்து அந்த விவாதத்தை சிறப்பாக முன்னெடுத்துச் சென்றனர்…..அந்த விவாதத்தில் பார்ப்பன மோசடியை, உள்ளுக்குள் அர்த்தம் புதைத்து எழுதும் மாய்மாலத்தை நம் தோழர்கள் இணைந்து அம்பலப் படுத்தினோம்…அதனால் அந்த விவாதம் அடங்கிய பத்தியே ஞாநி தி ரைட்டர் குழும நிர்வாகிகளால் நீக்கப்பட்ட்து..ஆனால் நான் அந்த விவாதத்தை முழுக்க சேகரித்து என்னுடைய வலைப்பூவான வெண்ணிற இரவுகளில் வெளியிட்டுள்ளேன்..
நம் உலக தமிழ் மக்கள் அரங்க நிர்வாகி சசி மேற்கண்ட விவாதத்தை சமூக களத்திற்கு எடுத்து சென்று அந்த விவாதத்தை ஒரு சிறிய நூலாக்கி பாவலர் அறிவுமதி அண்ணனிடம் அளிக்க அந்த தொகுப்பைதான் அ.மார்க்ஸ் கலந்துக் கொண்ட காலச்சுவடு கண்ணன் குறிப்பிட்டுள்ள ஞாநி கண்டன கூட்டத்தில் அண்ணன் அறிவுமதி வாசித்தார்….
அந்த கூட்டத்தில் பேசியவர்கள் அனைவருமே ஞாநியின் மோசடித்தனத்தையும், பார்ப்பனர்கள் எழுத்துலகிலும், இலக்கிய அரங்கங்களிலும் செய்து வரும் மாய தந்திர பொய் பித்தலாட்ட வேலைகளை சுட்டிக்காட்டி பேசினர்….உடனே கண்ணனுக்கு வந்து விட்டது கண் மண் தெரியாத கோபம்…அ.மார்க்ஸ் குறித்து தரக்குறைவான விமர்சனங்களை முன் வைத்துள்ள கண்ணன் அவரது கல்லூரி ஆசிரியர் பணி குறித்தும்,.தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்தும் மிக தவறான தகவல்களை, பொய் பரப்பும் நோக்கத்தோடு புனைந்திருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.
அரசு ஊழியர் போராட்டத்தின் போது மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து பணியில் இணைந்தாக அ.மார்க்ஸ் மீது இமாலய குற்றச்சாட்டு சுமத்தி இருக்கும் புரட்சியாளர் காலச்சுவடு கண்ணன் எத்தனை முறை போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார் என்பது அவருக்கும் ,ஞாநிக்கும் தெரிந்த ரகசியங்கள்..
அது இருக்கட்டும்….அ.மார்க்ஸ் கையெப்பமிட்டது மன்னிப்பு கடிதம் அல்ல….தொழிற்சங்கங்கள் அரசு ஊழியர்களுக்காக பொதுவாக வனைந்த விளக்க கடிதம்….அது அ.மார்க்ஸ் தயாரித்தது அல்ல…வேலைநீக்கம் செய்யப் பட்ட அனைத்து அரசு ஊழியர்களுக்காக தொழிற்சங்கங்கள் தயாரித்து அளித்தவை…….நான் கேள்விப்பட்ட வகையில் அ.மார்க்ஸ் போர்க்குணம் மிக்க தொழிற்சங்க வாதி என்பதை இங்கே பதிவு செய்கிறேன்..அது மட்டுமில்லாது தலித் மற்றும் விளிம்பு நிலை இன மாணவர்களுக்கான போராட்டங்களில்,தன் முனைப்பை காட்டியவர் அ.மார்க்ஸ் என்பதை கண்ணன் அறிந்தும் அறியாமல் இருப்பது உண்மையை ஊருக்கு மறைக்கும் செயல்…
இதே கட்டுரையில் டாக்டர் அம்பேத்காருக்கும், தந்தை பெரியாருக்கும் இடையே உள்ள இடைவெளியை காட்டுவதாக உளறிக் கொட்டி குழப்பி இருக்கிறார் கண்ணன்..அதாவது தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்கள் ஒன்று சேர்ந்து விடக் கூடாது என சர்வ கவனமாக யோசிக்கும் பார்ப்பன மூளை தான் வாழ்வதற்கான போராட்டத்திற்காக எதையும் செய்ய வல்லது என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் இருக்க முடியும்..?
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கார் இருவருமே பார்ப்பனன் வகுத்த சாதி நிலைகளை தகர்த்து மனிதன் மனிதனாக நடத்தப் பட வேண்டும் என்று போராடியவர்கள்…. ஏற்கனவே இதே போலத் தான் அறிஞர் அண்ணாவையும், தந்தை பெரியாரையும் ஒப்பிட்டு நமது கடும் எதிர்ப்பை ஞாநி சந்தித்தார் என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும்….
ஒரு வேளை தோழர்.ரவிக்குமாருக்கும், அ.மார்க்ஸ்க்கும் பிரச்சனைகள் இருப்பின் –அதற்கான தீர்வுகளையும் அவர்களே ஏற்படுத்திக் கொண்டு பார்ப்பன சாதி நிலைகளை தகர்க்கும் வேலையில் இணைந்து செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது…
அது குறித்து கண்ணன் கவலைப் பட ஏதுமில்லை…சிண்டு முடிவதை இந்த நூற்றாண்டிலாவது விடுங்கோ கண்ணன்….
சர்ச்சையை ஊதி பெரிதாக்கும் வேலையை கண்ணன் செய்து வருவதை சம்பந்தப் பட்ட இருவரும் இனி புரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு….ஞாநியின் பார்ப்பன மனோபாவத்தை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என குமுறும் காலச்சுவடு கண்ணன் கலைஞரை தரக் குறைவாக , வக்கிரமாக விவரித்து , அவரது முதுமையை வஞ்ச புகழ்ச்சி அணி தோற்றத்தில் எள்ளி நகையாடியதை ஆதரிக்கிறாரா..?
ஞாநி எழுதிய சர்ச்சை மிகுந்த அக் கட்டுரை வெளி வந்த காலக் கட்டம் சேது சமுத்திர திட்ட சர்ச்சையில் கலைஞர் உண்மையான உணர்வை வெளிப் படுத்தியதன் மூலம் இந்துத்துவ, பார்ப்பன சக்திகளின் ஒட்டு மொத்த எதிர்ப்பை சந்தித்து கொலை மிரட்டலுக்கு உள்ளான காலம்…
அந்த வக்கிர கட்டுரைக்கு வேறு என்ன நியாயமான காரணங்கள் இருக்க முடியும் ஞாநிக்கு..?
மேலும் அதே கட்டுரையில் தலித்களின் தலைவராக பெரியாரை காண முடியாது என கண்ணன் கதறுகிறார்…அது சரி…நாளை முதல் தலித்துகள் சங்கராச்சாரியை வழிபட வேண்டும் என்று கண்ணன் நினைப்பதெல்லாம் நடைபெற அவரது கனவுலகில் தான் சாத்தியம்….
திருவாளர் கண்ணன் அவர்களே….
உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்….பெரியார், அம்பேத்கார் போன்றவை உங்களுக்கு எதிரான, உங்கள் கருத்தியல்களுக்கு எதிரான ஆளுமைகள்……அவற்றில் ஏற்படும் சரிவுகளையும், சங்கடங்களையும் நாங்கள் சரி செய்து கொள்கிறோம்…..நீங்கள் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சங்கர மடத்திற்கு காவடி தூக்குவதை யாரும் தடுக்கப் போவதில்லை..
மறைந்த சுந்தர ராமசாமி அவர்களை அ.மார்க்ஸ் உயர்சாதி அகங்காரம் மிகுந்த மேட்டிமை தனம் உடைய ஆளுமை என விமர்சித்தது அடக்கவியலா வெறுப்புணர்வு என்றால், பெரியாரையும், அம்பேத்காரையும் சிண்டு முடிந்து ஆதாயம் தேட முயல்வது என்ன உணர்வு..?

பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப் பட்ட மக்களுக்கு இடையே வேறுபாடுகளை பெரிதாக்கி ஆனந்த சிரிப்பை உதிர்க்க துணியும் எண்ணம் எத்தகையது..?
சொல்லுங்கள் கண்ணன்…
பண்டைய வாழ்வியல் வரலாற்றுகளையே உங்களுக்கு சாதகமாக மாற்றி எழுதி அதை எங்களை பள்ளிகளில் படிக்க வைத்து சாதி என்னும் சமூகக் கேட்டு படிமத்தை எங்களுள் பதித்த இனமாயிற்றே உங்கள் இனம்..?
இதில் ரவிக்குமாரும், அ.மார்க்ஸும் எம் மாத்திரம்..?
தோழர்களே…
காலச்சுவடு கண்ணன் எழுதியுள்ள அ.மார்க்ஸ் குறித்த அக் கட்டுரை அவதூறு நிரம்பிய ஆத்திரக் கூச்சல்….ஆனால் இவர்கள் ஆத்திரம் பெரியாரை பின்பற்றும் நமக்கு ஒரு சிறிய புன்சிரிப்பையே உதிர்க்க வைக்கிறது…..
ஆனால்….
அதே சமயத்தில் காலச்சுவடு கண்ணனின் கட்டுரைக்காக நம் கண்டனத்தை தெரிவிப்பதும் நம் கடமை….
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கவிதை ஒன்றுடன் இப்போதைக்கு நிறைவு செய்கிறேன்…..
“ஆடுகின்றாய் உலகப்பா..யோசித்துப் பார்…
ஆர்ப்பாட்டக்கார ர் இதை ஒப்பாரப்பா….
தேடப்பா ஒரு வழியை என்று சொன்னேன்…
செகத்தப்பன் யோசித்து சித்தம் சோர்ந்தான்,,,,
ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர்
உதையப்பர் ஆகிவிட்டால் ஒர் நொடிக்குள்
ஓடப்பர்,உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆய் விடுவார் உணரப்பா…நீ..”
நன்றி…

காலச்சுவட்டின் நவீன கதாகாலட்சேபம்…

அ.மார்க்ஸ் குறித்து காலச்சுவடு நவம்பர் 07 மாத இதழில் வெந்து தணியும் அவதூறுகள் என்ற தலைப்பில் வெளிவந்த பழித்தூற்றலுக்கு எதிர்வினையாக இந்த விவாதத்தை துவக்குகிறேன்…
காலச்சுவடு கண்ணன் எதிர்பார்த்தது போலவே ஞாநிக்கு ஆதரவாக களமிறங்கி போராட துவங்கி உள்ளார்…இதில் ஆச்சர்யப்படவோ, அச்சப் படவோ ஏதுமில்லை என்றாலும் கண்ணன் இந்த முறை அளவுக்கதிகமாக கொந்தளிப்பது நடக்கும் சர்ச்சையை சுவாரசியமாக்கிக் காட்ட உதவுமே தவிர வேறு ஒன்று மில்லை…
தலித் மற்றும் சிறுபான்மை, விளிம்பு நிலை இலக்கிய பக்கங்களில் அ.மார்க்ஸ் அவர்களுக்கு தனியே ஒரு இடம் உண்டு…பெளத்த,சமண ஆய்வுகள் மூலம் இந்துத்துவாவின் தோலுறித்த அ.மார்க்ஸ்க்கு காலச்சுவடு கண்ணன் மூலம் எதிர்ப்பு வந்ததில் ஒன்றும் ஆச்சர்யமில்லைதான்…..
ஞாநியும்,கண்ணனும் அமைந்திருக்கும் சாதிக் கூட்டணி இந்த முறை அ.மார்க்ஸை தாக்க அமைந்துள்ளது…..பார்ப்பனச் சார்பு தன்மையில் காலச்சுவட்டின் முகமுடி கிழிந்து தொங்குவது குறித்து கண்ணனுக்கு திடீரென்று ஆத்திரம் பொத்துக் கொண்டு வருகிறது…..ஏற்கனவே சங்கராச்சாரி கைது சம்பவத்தின் போது எழுத்தாளர்கள் இதில் எதிர்வினை புரிய வேண்டும் என மறைந்த சுந்தர ராமசாமி கருத்து தெரிவித்தப் போதே நான் தீராநதியில் எழுதிய எதிர்வினையில் இது போன்ற சாதாரண கைது நிகழ்வை சுந்தர ராமசாமி தனக்கே உரிய குறுக்கு வழியில் பரபரப்பாக்க முயல்கிறார் என்று குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு வருகிறது.
காலச்சுவடு இந்த முறை அ.மார்க்ஸை தாக்கியுள்ளதை அ.மார்க்ஸ் என்ற தனிநபர் மீது நடந்த தாக்குதலாக நாம் கருத இயலாது. ஞாநியின் விஷம் தோய்ந்த கட்டுரை குறித்து எதிர்வினைகள் செய்த உலக தமிழ் மக்கள் அரங்கம் உறுப்பினர்கள் மற்றும் இணைய பக்கங்களில் எழுதி தன் எதிர்ப்பை பதிவு செய்த தோழர்கள், தமிழ் நாடு முழுதும் கண்டன கூட்டங்கள் நடத்திய தமிழ் படைப்பாளர்கள் ஆகியோரை உள்ளடக்கி சேர்த்து மொழிப் பற்றாளர்கள் அனைவரின் மீதும் காலச்சுவடு நடத்திய தாக்குதலாக இதை நாம் நினைக்கிறோம்…
ஞாநி மீது ரத்தபாசம் கண்ணனுக்கு வர என்ன காரணம் என்பதை நான் இங்கே விளக்கத் தேவை இல்லை.ஆனால் அதே கட்டுரையில் ஞாநி எழுதியது தவறு தான் கண்ணனே ஒத்துக் கொள்கிறார்…..அப்புறம் எதற்கு வருகிறது கோபம் என்ற கேள்விக்கு யாரும் அளிக்கலாம் விடையை…
வக்கிரம் பிடித்து, தான் என்ன எழுதுகிறோம் என்று நன்கு தெரிந்து தன்னுடைய விஷம் தோய்ந்த எழுத்துக்களால் தமிழர்களையும் ,அவர்களது பிரத்யோக ஆளுமைகளையும் தாக்கி வரும் ஞாநி குறித்து நாம் ஏற்கனவே கடுமையான விமர்சனங்களை ஞாநி தி ரைட்டர் என்ற ஞாநியின் ரசிகர்கள் நடத்தி வரும் ஆர்குட் குழுமத்தில் முன் வைத்தோம்…ஞாநியின் எழுத்துகளில் தெரியும் ஆரிய மனம் என்று துவங்கும் அந்த விவாதத்தில் ஞாநியே நேரடியாக கலந்து கொண்டு விவாதித்து ,பிறகு ஒதுங்கிக் கொண்டார்…அந்த விவாத்தின் போது நமது உலக தமிழ் மக்கள் அரங்க நிர்வாகிகள் சசி,யுவன்பிரபாகரன், பிரபாகரன், தமிழ் மற்றும் பிரின்ஸ் பெரியார், விடாது கருப்பு போன்ற தோழர்கள் என்னோடு இணைந்து அந்த விவாதத்தை சிறப்பாக முன்னெடுத்துச் சென்றனர்…..அந்த விவாதத்தில் பார்ப்பன மோசடியை, உள்ளுக்குள் அர்த்தம் புதைத்து எழுதும் மாய்மாலத்தை நம் தோழர்கள் இணைந்து அம்பலப் படுத்தினோம்…அதனால் அந்த விவாதம் அடங்கிய பத்தியே ஞாநி தி ரைட்டர் குழும நிர்வாகிகளால் நீக்கப்பட்ட்து..ஆனால் நான் அந்த விவாதத்தை முழுக்க சேகரித்து என்னுடைய வலைப்பூவான வெண்ணிற இரவுகளில் வெளியிட்டுள்ளேன்..
நம் உலக தமிழ் மக்கள் அரங்க நிர்வாகி சசி மேற்கண்ட விவாதத்தை சமூக களத்திற்கு எடுத்து சென்று அந்த விவாதத்தை ஒரு சிறிய நூலாக்கி பாவலர் அறிவுமதி அண்ணனிடம் அளிக்க அந்த தொகுப்பைதான் அ.மார்க்ஸ் கலந்துக் கொண்ட காலச்சுவடு கண்ணன் குறிப்பிட்டுள்ள ஞாநி கண்டன கூட்டத்தில் அண்ணன் அறிவுமதி வாசித்தார்….
அந்த கூட்டத்தில் பேசியவர்கள் அனைவருமே ஞாநியின் மோசடித்தனத்தையும், பார்ப்பனர்கள் எழுத்துலகிலும், இலக்கிய அரங்கங்களிலும் செய்து வரும் மாய தந்திர பொய் பித்தலாட்ட வேலைகளை சுட்டிக்காட்டி பேசினர்….உடனே கண்ணனுக்கு வந்து விட்டது கண் மண் தெரியாத கோபம்…அ.மார்க்ஸ் குறித்து தரக்குறைவான விமர்சனங்களை முன் வைத்துள்ள கண்ணன் அவரது கல்லூரி ஆசிரியர் பணி குறித்தும்,.தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்தும் மிக தவறான தகவல்களை, பொய் பரப்பும் நோக்கத்தோடு புனைந்திருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.
அரசு ஊழியர் போராட்டத்தின் போது மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து பணியில் இணைந்தாக அ.மார்க்ஸ் மீது இமாலய குற்றச்சாட்டு சுமத்தி இருக்கும் புரட்சியாளர் காலச்சுவடு கண்ணன் எத்தனை முறை போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார் என்பது அவருக்கும் ,ஞாநிக்கும் தெரிந்த ரகசியங்கள்..
அது இருக்கட்டும்….அ.மார்க்ஸ் கையெப்பமிட்டது மன்னிப்பு கடிதம் அல்ல….தொழிற்சங்கங்கள் அரசு ஊழியர்களுக்காக பொதுவாக வனைந்த விளக்க கடிதம்….அது அ.மார்க்ஸ் தயாரித்தது அல்ல…வேலைநீக்கம் செய்யப் பட்ட அனைத்து அரசு ஊழியர்களுக்காக தொழிற்சங்கங்கள் தயாரித்து அளித்தவை…….நான் கேள்விப்பட்ட வகையில் அ.மார்க்ஸ் போர்க்குணம் மிக்க தொழிற்சங்க வாதி என்பதை இங்கே பதிவு செய்கிறேன்..அது மட்டுமில்லாது தலித் மற்றும் விளிம்பு நிலை இன மாணவர்களுக்கான போராட்டங்களில்,தன் முனைப்பை காட்டியவர் அ.மார்க்ஸ் என்பதை கண்ணன் அறிந்தும் அறியாமல் இருப்பது உண்மையை ஊருக்கு மறைக்கும் செயல்…
இதே கட்டுரையில் டாக்டர் அம்பேத்காருக்கும், தந்தை பெரியாருக்கும் இடையே உள்ள இடைவெளியை காட்டுவதாக உளறிக் கொட்டி குழப்பி இருக்கிறார் கண்ணன்..அதாவது தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்கள் ஒன்று சேர்ந்து விடக் கூடாது என சர்வ கவனமாக யோசிக்கும் பார்ப்பன மூளை தான் வாழ்வதற்கான போராட்டத்திற்காக எதையும் செய்ய வல்லது என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் இருக்க முடியும்..?
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கார் இருவருமே பார்ப்பனன் வகுத்த சாதி நிலைகளை தகர்த்து மனிதன் மனிதனாக நடத்தப் பட வேண்டும் என்று போராடியவர்கள்…. ஏற்கனவே இதே போலத் தான் அறிஞர் அண்ணாவையும், தந்தை பெரியாரையும் ஒப்பிட்டு நமது கடும் எதிர்ப்பை ஞாநி சந்தித்தார் என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும்….
ஒரு வேளை தோழர்.ரவிக்குமாருக்கும், அ.மார்க்ஸ்க்கும் பிரச்சனைகள் இருப்பின் –அதற்கான தீர்வுகளையும் அவர்களே ஏற்படுத்திக் கொண்டு பார்ப்பன சாதி நிலைகளை தகர்க்கும் வேலையில் இணைந்து செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது…
அது குறித்து கண்ணன் கவலைப் பட ஏதுமில்லை…சிண்டு முடிவதை இந்த நூற்றாண்டிலாவது விடுங்கோ கண்ணன்….
சர்ச்சையை ஊதி பெரிதாக்கும் வேலையை கண்ணன் செய்து வருவதை சம்பந்தப் பட்ட இருவரும் இனி புரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு….ஞாநியின் பார்ப்பன மனோபாவத்தை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என குமுறும் காலச்சுவடு கண்ணன் கலைஞரை தரக் குறைவாக , வக்கிரமாக விவரித்து , அவரது முதுமையை வஞ்ச புகழ்ச்சி அணி தோற்றத்தில் எள்ளி நகையாடியதை ஆதரிக்கிறாரா..?
ஞாநி எழுதிய சர்ச்சை மிகுந்த அக் கட்டுரை வெளி வந்த காலக் கட்டம் சேது சமுத்திர திட்ட சர்ச்சையில் கலைஞர் உண்மையான உணர்வை வெளிப் படுத்தியதன் மூலம் இந்துத்துவ, பார்ப்பன சக்திகளின் ஒட்டு மொத்த எதிர்ப்பை சந்தித்து கொலை மிரட்டலுக்கு உள்ளான காலம்…
அந்த வக்கிர கட்டுரைக்கு வேறு என்ன நியாயமான காரணங்கள் இருக்க முடியும் ஞாநிக்கு..?
மேலும் அதே கட்டுரையில் தலித்களின் தலைவராக பெரியாரை காண முடியாது என கண்ணன் கதறுகிறார்…அது சரி…நாளை முதல் தலித்துகள் சங்கராச்சாரியை வழிபட வேண்டும் என்று கண்ணன் நினைப்பதெல்லாம் நடைபெற அவரது கனவுலகில் தான் சாத்தியம்….
திருவாளர் கண்ணன் அவர்களே….
உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்….பெரியார், அம்பேத்கார் போன்றவை உங்களுக்கு எதிரான, உங்கள் கருத்தியல்களுக்கு எதிரான ஆளுமைகள்……அவற்றில் ஏற்படும் சரிவுகளையும், சங்கடங்களையும் நாங்கள் சரி செய்து கொள்கிறோம்…..நீங்கள் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சங்கர மடத்திற்கு காவடி தூக்குவதை யாரும் தடுக்கப் போவதில்லை..
மறைந்த சுந்தர ராமசாமி அவர்களை அ.மார்க்ஸ் உயர்சாதி அகங்காரம் மிகுந்த மேட்டிமை தனம் உடைய ஆளுமை என விமர்சித்தது அடக்கவியலா வெறுப்புணர்வு என்றால், பெரியாரையும், அம்பேத்காரையும் சிண்டு முடிந்து ஆதாயம் தேட முயல்வது என்ன உணர்வு..?

பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப் பட்ட மக்களுக்கு இடையே வேறுபாடுகளை பெரிதாக்கி ஆனந்த சிரிப்பை உதிர்க்க துணியும் எண்ணம் எத்தகையது..?
சொல்லுங்கள் கண்ணன்…
பண்டைய வாழ்வியல் வரலாற்றுகளையே உங்களுக்கு சாதகமாக மாற்றி எழுதி அதை எங்களை பள்ளிகளில் படிக்க வைத்து சாதி என்னும் சமூகக் கேட்டு படிமத்தை எங்களுள் பதித்த இனமாயிற்றே உங்கள் இனம்..?
இதில் ரவிக்குமாரும், அ.மார்க்ஸும் எம் மாத்திரம்..?
தோழர்களே…
காலச்சுவடு கண்ணன் எழுதியுள்ள அ.மார்க்ஸ் குறித்த அக் கட்டுரை அவதூறு நிரம்பிய ஆத்திரக் கூச்சல்….ஆனால் இவர்கள் ஆத்திரம் பெரியாரை பின்பற்றும் நமக்கு ஒரு சிறிய புன்சிரிப்பையே உதிர்க்க வைக்கிறது…..
ஆனால்….
அதே சமயத்தில் காலச்சுவடு கண்ணனின் கட்டுரைக்காக நம் கண்டனத்தை தெரிவிப்பதும் நம் கடமை….
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கவிதை ஒன்றுடன் இப்போதைக்கு நிறைவு செய்கிறேன்…..
“ஆடுகின்றாய் உலகப்பா..யோசித்துப் பார்…
ஆர்ப்பாட்டக்கார ர் இதை ஒப்பாரப்பா….
தேடப்பா ஒரு வழியை என்று சொன்னேன்…
செகத்தப்பன் யோசித்து சித்தம் சோர்ந்தான்,,,,
ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர்
உதையப்பர் ஆகிவிட்டால் ஒர் நொடிக்குள்
ஓடப்பர்,உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆய் விடுவார் உணரப்பா…நீ..”
நன்றி…

Powered by WordPress & Theme by Anders Norén