மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

துளி 15

துளிகள் /

    மெளனங்களோடு பேசுதல். —————————- நீங்கள் எப்போதும் சொற்களோடு உரையாடிக் கொண்டிருக்கிறீர்கள். வெறும் சொற்கள் நம்பிக்கையின் வேரற்றவை. வறண்டப் பாலையின் எப்போதோ அறியாமல் சிந்தி விடும் மழைத்துளி ஒன்றின் இருப்பினைப் போன்றவை ‌. காதற்ற வெளியில் தவறி உதிர்ந்து விடும் ராகத் துளியின் சாயல் கொண்டவை. அவைகளால் எதையும் நிரப்பவும் முடியாது. அவைகளாக எதனுள் நிரம்பவும் முடியாது. அந்தந்த கணங்களுக்கே உரிய கூட்டிசைவிற்கான சமாதானங்கள் அவை. சில தொண்டை விம்மும் கணங்களை கண்டும் காணாமல் நகர்த்தக் …

 752 total views

துளி -14

துளிகள் /

        முடிகிற முடியாதவைகள்.. _________________________ தடுக்கிடும் நினைவுகளின் கூர் நுனியினை கவனத்தோடு விலக்கி நடக்க முடிகிறது. தவறி எங்கோ தட்டுப்படும் உன் பெயரை சின்ன மெளனம் ஒன்றினால் ஜீரணிக்க முடிகிறது. என் நொடிப் பார்வையில் உதிரும் பூ ஒன்றினால்.. உன் புன்னகையை நினைவூட்டாமல் உதிர முடிகிறது. என் தலைமுடியை சற்றே கலைத்து விட்டு செல்லும் காற்றின் சிறகுகளால் உன் விரல்கள் பற்றிய ஞாபகங்களை வர வைக்க முடியவில்லை. எதிர்படும் யாரோ ஒருவரின் ஏதோ …

 893 total views

துளி 13

துளிகள் /

வட சென்னை -இருள் பக்கங்களின் வெளிச்சத் தெறிப்புகள் ——————————————– வாழ்வென்பது வரையப்பட்ட கோடுகளின் மீது ஒழுங்கமைவோடு கட்டமைக்கப்பட்ட ஓவியம் அல்ல என்பதைத்தான் காலம் காலமாக இலக்கியங்களும், கவிதைகளும், படைப்புகளும் கூறிவருகின்றன. மீறல்களால் நிறைந்த மானுடவாழ்க்கையின் இருள் பக்கங்களில் வெளிச்சத்தை பாய்ச்சி நிழலுக்கும் நிஜத்திற்கும் இடையிலான மெல்லிய கோட்டை அழித்து பார்க்கிற பெரிய முயற்சிதான் வெற்றிமாறனின் வட சென்னை. இப்படியெல்லாம் எழுதுவார்களா என்று எழுத்தாளர் ஜி நாகராஜனின் குறத்தி முடுக்கு நாவலைப் படித்துவிட்டு அவரை கேட்ட கேள்விக்கு.. அவர் …

 713 total views

துளி- 12

துளிகள் /

வாயற்ற சொற்கள் ——————————— இதோ இதுவும் ஒரு உரையாடல் தான். வாயற்ற சொற்களோடு காதுகளில் அல்லாமல் உங்கள் இதயத்தின் ஆழத்தில் நுழைகிற உண்மையின் ஏற்பாடு. ———————- உருவமற்ற அருவ அவதூற்று பொய்களால் தகர்க்க முடிகிற சொற்களின் சேர்க்கை அல்ல அவன். பித்தமேறிய பிதற்றல்களால் மன நோயாளிகளின் தூற்றல்களால் தூர்ந்து போகிற கோடைக்கால கிணறு அல்ல அவன். உன்மத்த உரையாடல்களால் உருக்குலைக்க இயலுகிற சத்தற்ற தர்க்கத்தின் சறுக்கி விழும் தத்துவம் அல்ல அவன். அவன் ஒரு காலம். பிணங்களுக்கு …

 679 total views

துளி-11

துளிகள் /

நம் வாழ்நாள் ஏதோ ஒரு புள்ளியில் அர்த்தப்பட்டதாக உணர்ந்த தருணம் இன்று எனக்கு நிகழ்ந்தது. எங்கள் பகுதியின் பழுத்த காங்கிரஸ்காரர் அவர். பாரம்பரிய காங்கிரஸ் குடும்பம். காங்கிரஸ் தலைவர்கள் இப்பகுதிக்கு வந்தால் அவர்களின் நேரடியாக சந்தித்து உரையாடும் அளவிற்கு செல்வாக்கு உடையவர். கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து நான் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் பணிபுரிந்தபோது என்னை நேரடியாக அழைத்து தன் கட்சியை எதிர்த்து நான் வேலை செய்யக் கூடாது என அன்பாக சொல்வது …

 610 total views

துளி-10

துளிகள் /

  வாழ்வின் சூட்சமமப் புள்ளிகளைப் பற்றியும், மனித உளவியலைப் பற்றியும் பதிவொன்றை எழுதி இருந்தேன். https://m.facebook.com/story.php?story_fbid=528687884222751&id=100012446325967 அதற்கு …மிகச்சரியான தொடரியை இசைத்து காட்டியிருக்கிறான் என் தம்பி துருவன் செல்வமணி. நுட்பமான அலைவரிசைக் கோர்வையில் இணைந்து புதிய வெளி ஒன்றினை தன் எழுத்துக்களால் அவன் உருவாக்கி இருக்கிறான். https://m.facebook.com/story.php?story_fbid=2012571248805016&id=100001564824346 என்னுடைய பதிவிற்கு இதுதான் மிகச்சரியான அங்கீகாரம் என நான் கருதுகிறேன் ‌. நான் ஏதோ ஒரு புள்ளியில் எதையோ ஒன்றை தொடப் போக… அதை என் சீடன் வேறு …

 798 total views

துளி -9

துளிகள் /

மனிதனின் மனம் பல நுட்பமான உணர்ச்சிகளின் நூலிழைகளால் பிணைக்கப்பட்டிருக்கிறது . ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடும் இந்த உணர்ச்சியலைகளின் பேத சுருதிகளில் சிக்கிக்கொண்டு தான் மானுட வாழ்வு அலைகழிகிறது. ஒருவனுக்கு முக்கியமானதாகத் தோன்றும் ஒன்று மற்றவனுக்கு அற்பமானதாக காட்சியளிக்கலாம். மற்றவனுக்கு அற்பமானதாக காட்சியளிக்கும் ஒன்று இன்னொருவனுக்கு உயிரை விட மேலானதாக தோன்றலாம். இந்த தோற்ற மயக்கங்களில் தான் மனிதன் காலம் காலமாக சிக்குண்டு கிடக்கிறான். மனித மனத்தை ஆராய்ந்து வெளிவந்து இருக்கிற நூல்களில் நான் முக்கியமாகக் கருதுவது சிக்மண்ட் …

 725 total views

துளி – 8

துளிகள் /

கடந்த 8 வருடங்களாக நாம் தமிழர் என்கின்ற இந்த பெரும் பயணம் எண்ணற்ற அனுபவங்களை வாரி வழங்கியிருக்கிறது. நாம் தமிழராய் இணைகின்ற ஒவ்வொரு இளைஞனும் பொற்கால எதிர்காலம் ஒன்றை உருவாக்க லட்சிய தாகம் உடைய தனித்துவனாய் மாறுவதை நான் பெருமிதத்துடன் கவனித்து வருகிறேன். அதுவரை ஆங்கிலம் கலந்து பேசுகிற அவனது உதடுகள் வலுக்கட்டாயமாக தமிழில் பேச முயற்சிப்பதை கண்டு நான் வியந்திருக்கிறேன் ‌. பிரபாகரன் என்பது தனி மனிதனின் பெயர் அல்ல. அது ஒரு தத்துவம் வாழ்வியல் …

 868 total views

துளி-7

துளிகள் /

அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் கதாநாயகன் கார்த்திக்கும் கதாநாயகி ராதாவும் அவரவர் மத அடையாளங்களை அறுத்து தெரிவது போல ஒரு காட்சி வரும். இதேபோல சாதியை அறுத்தெறிய முடியுமா என்றால்..‌ முடியாது. ஏனெனில் சாதி வெறும் அடையாளங்களால் பின்னப் பட்டது அல்ல. இந்தியச் சமூகத்தின் ஒவ்வொரு இழையும் சாதிய உணர்வினாலேயே பிணைக்கப்பட்டிருக்கிறது. பல நூற்றாண்டுகளாக வருணாசிரம அடுக்குகளை இந்த சாதிய பெருமித உணர்வே மிக கவனமாக பாதுகாத்து வருகிறது. உங்கள் முன்னால் அன்புடன் கைகுலுக்க வரும் கரங்கள் …

 677 total views

துளி-6

துளிகள் /

      கேள்வி -ஒரு பேட்டியின் போது நீங்கள் தொடர்ச்சியாக 90 நிமிடங்கள் அமெரிக்க பழங்குடி இந்தியர்களைப் பற்றிய பேசிக் கொண்டிருந்தீர்கள். அது எதனால்?? பதில்- சம்பந்தமற்ற கேள்வியை அவர் கேட்டுக் கொண்டிருந்ததால் நான் எனக்கு விருப்பமான பதிலை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தேன். இப்படித்தான் bbc பேட்டி ஒன்றில் சூப்பர்மேனாக நடிப்பதற்கு எப்படி உடையை தேர்ந்தெடுத்தீர்கள் என்று கேள்வி கேட்டார்கள். நான் உடனே 1973 இல் இந்தியர்கள் எப்படி தாக்கப்பட்டார்கள் என்பது பற்றி விரிவாக சொன்னேன் …

 576 total views