மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

 அசுரன்- இலக்கியமான திரைமொழி

திரை மொழி /

இருபதாம் ஆண்டு தொடக்கத்தில் லூமியர் சகோதரர்களால் கண்டறியப்பட்ட திரைப்படம் என்கின்ற அறிவியல் கண்டுபிடிப்பு வெகுவிரைவிலேயே தமிழ்நாட்டிற்கு வந்துவிட்டது. 1931ல் தமிழில் முதல் பேசும் திரைப் படமான காளிதாஸ் வெளியானது. ஏறக்குறைய தொண்ணூறு ஆண்டுகள் வரலாறு கொண்ட தமிழ் திரை உலகத்திற்கும் , தமிழ் இலக்கிய உலகிற்கும் மிக நெருங்கிய தொடர்பு தொடக்க காலத்திலிருந்தே உண்டு. ஆனந்த விகடனின் ஆசிரியரும், ஜெமினி ஸ்டுடியோவின் உரிமையாளருமான எஸ் எஸ் வாசன் எழுதிய சதிலீலாவதி என்ற நாவல் 1936இல் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. …

 821 total views,  1 views today

அசுரன் -கொண்டாடப்பட வேண்டிய கலகக்குரல்

திரைப்பட விமர்சனம் /

. வரலாற்றின் பக்கங்கள் பெரும்பாலும் பேரரசர்களின் பெருமித கதைகளால் நிரம்பி வழிகின்றன. மாட மாளிகைகளும், கூட கோபுரங்களும், ராஜ பேரிகைகளும், அந்தப்புர அழகிகளும், புகழ்ச்சி வர்ணனைகளும் நிரம்பி இருக்கிற வரலாற்றின் ஏடுகளில் எளிய மனிதர்களுக்கு என்றுமே இடம் இருந்ததில்லை. இந்திய நிலத்தில் மக்களின் வரலாறு இன்னும் எழுதப்படவே இல்லை என்கிறார் அண்ணல் அம்பேத்கர். ஆனாலும் தலைமுறை தலைமுறைகளாக மக்களிடையே பிறந்து அவர்களுக்காக போராடி, மாமனிதனாக திகழ்ந்து, பெருமைமிக்க திரு உருவாக மாறி இருக்கின்ற பழைய எளிய மனிதர்களின் …

 679 total views,  2 views today

உறங்கா உண்மைகளின் அடங்காப் பெருநெருப்பு..

அரசியல் /

——————————————– ஒரு தேசிய இனத்தின் விடுதலை என்பது நீண்ட காலமாய் உறைந்திருக்கும் அந்த தொன்மை இன மக்களின் கலையாத கனவு மட்டுமல்ல.. அது காலங்காலமாய் தொடரும் உயிர்த் தாகம். உலகத்தில் நம்மை விட நிலப் பரப்பிலும், மக்கள் தொகையிலும் குறைவான எண்ணிக்கை கொண்ட எத்தனையோ தேசிய இனங்கள் தங்களுக்கென ஒரு நாடு அடைந்து தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழும் இக்காலத்தில்.. தமிழர் என்கின்ற தொன்ம தேசிய இனத்திற்கு மட்டும் உள்ளங்கை அளவு கூட ஒரு நாடில்லை என்கிற நிலை …

 713 total views,  1 views today

அண்ணன் கொளத்தூர் மணிக்கு..

அரசியல் /

    திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் மதிப்பிற்குரிய அண்ணன் திரு கொளத்தூர் மணி அவர்களுக்கு… வணக்கம். இதுபோன்ற ஒரு கடிதம் எழுத நேர்ந்த நிலைமைகளுக்காக உண்மையில் நான் வருந்துகிறேன். உங்களை ஒரு கதாநாயகனாக எனது கண்கள் பார்த்து இருக்கின்றன. உங்களை ஒரு தேவ தூதனாக கருதி எனது கரங்கள் தொழுதிருக்கின்றன. கனிவும் அன்பும் நிறைந்த உங்கள் சொற்களில் தான் அன்று எவ்வளவு உண்மையும் நேர்மையும் நிறைந்திருந்தன..?? அவர்தான் நீங்களா என்ற சந்தேகம் உங்களை உண்மையாக நேசித்த …

 790 total views

காற்றில் கரைந்த கார்த்தி…

சுயம் /

  நினைத்துப் பார்ப்பதற்குள் கார்த்தி காற்றோடு காற்றாய் கலந்து விட்டான். அவனை முதன்முதலாக பார்த்த அதே மகாமகக் குளக்கரையில் அவனை இடுகாட்டில் வைத்துவிட்டு வந்து தனியே இந்த அந்தியில் நின்று கொண்டிருக்கிறேன். சமீபகாலமாக என்னைச் சுற்றி சூழ்ந்துக் கொண்டிருக்கிற மரணங்கள் என்னை முற்றிலுமாக உருக்குலைத்து போட்டிருக்கின்றன. இரவு நேரங்கள் மிகக் கொடியதாக நீண்டதாக சகிக்க முடியாத துயரம் நிரம்பியதாக மாறிவிட்டன. என் வாழ்வில் என்னோடு அனைத்திலும் இணைந்து இயங்கியும், ரசித்தும், சிரித்தும், மகிழ்ந்தும், சிந்தித்தும், கலங்கியும் கலந்து …

 528 total views

ராஜீவ் காந்தியை நாங்கள் தான் கொன்றோம்- அண்ணன் சீமான் அதிரடி- பதிவுகள்

அரசியல் /

    ராஜீவ் காந்தி இந்தியாவின் முன்னாள் பிரதமர் என்றால்.. அண்ணன் சீமான் தமிழகத்தின் வருங்கால முதல்வர். போடா..   ==================================================================================== ராஜீவ் காந்தியை விடுதலை புலிகள் கொல்லவில்லை. அதில் உள்நாட்டு வெளி நாட்டு சதிகள் அடங்கியிருக்கின்றன. என்று பலரும் வீதிக்கு வீதி கத்தி சொன்னபோது ஒருவர் கூட பேசவில்லை. இன்று கடந்து குதிக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அழகிரி.. ராஜீவ் கொலையில் சுப்பிரமணியசாமிக்கு பங்கு உண்டு என்று உண்மையான காங்கிரஸ்காரர் ஆன திருச்சி வேலுச்சாமி புத்தகம் …

 704 total views

மிக மிக அவசரம்- பெண் வாதையின் கலை வடிவம்..

திரை மொழி /

  சமீபத்தில் சென்னை சென்றிருந்த போது எனது மிக நெருங்கிய நண்பரும், திரைப்படத் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி அலைபேசியில் திடீரென அழைத்தார். சுரேஷ் காமாட்சியின் அழைப்பு எப்போதும் முக்கிய செய்திகளை உள்ளடக்கியதாக தான் இருக்கும். நிறைய விஷயங்களை பேசிக் கொண்டிருப்பார். அரசியலும் சினிமாவும் என அவரோடு பேச பல செய்திகள் இருக்கின்றன. தான் செய்யும் ஒவ்வொரு செயலையும் தான் பிறந்த இனத்திற்கான அரசியலோடு இணைத்தே செய்வதில் அவர் தனித்துவமானவர். இப்போதும் ஒரு முக்கியமான காரணத்திற்காக தான் அழைத்திருந்தார். …

 601 total views

தமிழ்த் தேசியவாதியா.. பெரியார்..??

அரசியல் /

எப்போதும் இல்லாத அளவிற்கு திராவிட கருத்தாக்கம் வலுவான எதிர் தாக்குதலை தனது வரலாற்றில் முதன்முதலாக எதிர்கொள்கிறது. திராவிடம் ஆரியத்தை எதிர்த்த கதை என்பது.. ஏறக்குறைய தடவிக் கொடுத்தது போல.. மென்மையான ஏசல், கேலி ,கிண்டல் போன்ற அளவில் ராஜாஜி- பெரியார் இடையிலான உறவு போன்ற நட்பு முரண்களோடு இருந்தது. காலப்போக்கில் ஆரியம் திராவிடத்தை செரித்துக் கொண்டதையும், திராவிடம் மிக எளிமையாக ஆரியத்தை உள்வாங்கி கொண்டதையும் ஒளிவு மறைவின்றி வரலாற்றின் ஓட்டத்தில் காண முடிகிறது. ஆனால் தமிழ்த்தேசியக் கருத்தாக்கமோ …

 1,044 total views

கீழடி ஆய்வும், திராவிடப்புலம்பலும்..

அரசியல் /

  கீழடியில் கிமு ஆறாம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுதப்படிக்க தெரிந்தவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்து விட்டன என்றவுடன்… திராவிட கும்பலுக்கு உடலெங்கும் வியர்த்து கொட்டத் தொடங்கி விட்டது. எங்களின் மொழித் தொன்மை, இலக்கிய இலக்கண வளமை, பற்றி எந்த செய்தி வந்தாலும் உடல் நடுங்கி, நாக்கு குழற உளரத்தொடங்குவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. நாங்கள் சொல்வது மிக எளிது. பூர்வகுடிகள் நாங்கள். மூத்தோர் வழிபாடும்,நாகரிகமும், கல்வியறிவும் கொண்ட ஒரு இனத்தின் மக்கள் நாங்கள். நாங்கள் தனித்த தேசிய …

 748 total views

மறக்க முடியா மாமாலை.

சுயம் /

  என் வாழ்வில் நேற்று மாலை தான் ( ஆகஸ்ல் 25/ 2019)அவரை முதன்முதலில் நேரில் பார்த்தேன். பிறந்தது முதல் இருந்த வாழ்நாள் கனவு அது. அவரது பாடல்களைக் கேட்டிருக்கிறேன். சிலிர்த்திருக்கிறேன். தனியே அழுதிருக்கிறேன். ஒன்றுமே செய்யாமல் மௌனமாய் இருந்திருக்கிறேன். ஒரு இசை இப்படியெல்லாம் வேதியியல் மாற்றம் செய்யுமா .. என்றெல்லாம் வியந்திருக்கிறேன். என் வாழ்வினை பற்றி யாராவது கேட்டால்.. நான் இளையராஜா பாடல்களை வைத்துதான் என் வாழ்வினை ஒரு பிளாஷ்பேக் போல சொல்ல முடியும். இந்த …

 616 total views