மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

கடக்க இயலா நினைவுகளின் துயர்நதி.

கட்டுரைகள்.. /

  கால்கள் இழந்தும் கண்,கைகள் சிதைவடைந்தும் சித்தம் குழம்பிப்போய் சிரித்தும் அழுதுக் கொண்டும் ஊனமாய் போய்விட்ட ஒரு பெரும் சமுதாயம் கத்தி அழுதபடி காரிருளில் அங்குமிங்கும் வாழ்ந்த மண்ணை வாயினிலும் தலையினிலும் அள்ளி எறிந்து ஆவிகளாய் அலைந்தபடி. ஒப்பாரி வைக்கின்ற ஓலத்தை என் வாழ்வில் எப்படிதான் நான் மறப்பேன். என் சகியே..                           -திரு. எனக்கு முன்னால் அமர்ந்திருந்த சரவணன் …

 2,088 total views

வண்ணமற்ற சொற்கள்.

கவிதைகள் /

நிறமற்ற என் சொற்களின் மீது உனக்கு பிடித்த வண்ணத்தை பூசி விடு.. கூடவே அப்போதைய உன் மனநிலைக்கு தகுந்தாற் போல்… ஒரு அந்தியையோ.. ஒரு மழையையோ.. கூதிர் காலமொன்றையோ.. வெண்பனிச் சாரலையோ.. கொடும் பாலையையோ. . அவசியம் இணை. சொற்களை கரைத்து விழுங்கும் பின்னணி இசை இசைக்கப்படின் இன்னும் பிரமாதம். முடிவில் ஒரு மலை முகட்டின் மேலமர்ந்து தனிமைப் பொழுதொன்றை நீயே தேர்ந்தெடு. என் சொற்களை உடை அவிழ்ப்பது போல.. தனித்தனியே கழற்று.. கலைத்துப் போடு. நிறைவேறாத …

 1,270 total views

கடல்தீபன்..நிகழத்துடிக்கிற அதிசயத்தின் ஒரு துளி.

கட்டுரைகள்.. /

….. 2016 ஜனவரி. அவர்கள் எங்களை தடுத்தார்கள். இதற்கு மேலே வாகனங்கள் செல்ல முடியாது. பாலங்கள் உடைந்து கிடக்கின்றன என்றார்கள். நாங்கள் எதிர்பார்த்ததை விட அழிவு அதிகமாகத்தான் இருந்தது. சாலையோரத்தில் நின்றுக் கொண்டிருந்த மக்கள் எதிரே வாகனங்களை மறித்து, இருப்பதை பிடிங்கிக் கொள்ளும் அளவிற்கு நிலைமை மோசமாகதானிருந்தது. பசியால் வெளிறிய கண்களோடு குழந்தைகள் ஏங்கி நிற்கின்ற அக்காட்சி எதனாலும் சகிக்க முடியா துயராய் இருந்தது. ஆம். கடலூர் ஏறக்குறைய துண்டிக்கப்பட்ட நிலமாய் , வேதனையும், அழுகுரல்களும் நிரம்பிய …

 1,417 total views

பிம்பம் தாங்காத ஆடி..

கவிதைகள் /

        …ஆகப்பெரும் கண்ணாடியாய் கனவு பிம்பங்களை மாறி மாறி வரும் வாழ்வின் உதய, அஸ்தமனங்களுக்கு ஏற்ப வாரி இறைத்துக் கொண்டிருந்தோம். சரிவொன்றின் சங்கடப்படுத்தும் நிழலொன்றில் கூட கலையாத பிம்பமாய் நம் பற்றை தகவமைப்பதில் கவனம் கொண்டிருந்தோம். பிசிறில்லா இசையாய் மாசற்ற கவிதையாய் அருவமான அற்புதமாய் அது நிகழ்ந்துக் கொண்டே இருக்க வேண்டும் என உறுதி கொண்டோம்.. தவறுகள் மீதும் காரணங்கள் மீதும் கட்டப்பட்ட கண்ணாடி மாளிகையாய் அது காட்டப்பட்டு விடக் கூடாதென்றும்.. சின்ன …

 1,296 total views