மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

நமக்கென வாழ்ந்த நம்மாழ்வார் –சில நினைவுகள்.-மணி செந்தில்

கட்டுரைகள்.. /

      அவரை முதன் முதலில் நான் பார்த்தப் போது யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார். நண்பர் ஒருவர் என்னை அவரிடத்தில் அறிமுகம் செய்து வைத்த போது கள்ளம் கபடமற்ற சிரிப்போடு என்னை கனிவாக பார்த்தார். சட்டை அணியாமல் சால்வை மட்டுமே அணிந்திருந்ததை  ஒரு சந்தேகமாக கேட்டேன்.ஆடு மாடு ,செடி ,கொடி எல்லாம் சட்டை போட்டுக் கொண்டா திரியுது ..?,மனுசப்பய தான் சொகுசா வாழ கத்துக்கிட்டான். தான் சொகுசா வாழ பூமியை அழிச்சி தின்னுக்கிட்டு இருக்கான் என …

 1,815 total views