மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

பேரறிவாளனின் வீடு. ——————————-

என் கவிதைகள்.. /

யாருமே அழைக்காமல் அந்தப் பொல்லாத இரவும் துயர் காற்றின் விரல் பிடித்து அந்த வீட்டுக்குள் நுழைந்தது. அதுவரை நிலா முற்றங்களில் அன்பின் கதகதப்போடு அந்த ஐவரும் உறங்கிய இரவுகள் முடிவுக்கு வந்தன. அந்த வீட்டின் ஒற்றை புன்னகையை எங்கிருந்தோ வந்த இருட்டின் கரங்கள் இழுத்துச் சென்றன. யார் யாரோ வந்தார்கள். ஏதேதோ சொன்னார்கள். காரணக் கதைகள் ஆயிரம் சொன்னாலும் மறைந்துபோன புன்னகையை அந்த வீட்டினில் மலர வைக்க யாராலும் முடியவில்லை. அலைந்தலைந்து பாதங்கள் சோர்ந்தன. அழுது அழுது …

 742 total views

சிரித்து விட்டுப் போவோம்

அரசியல் /

ஆதித்தமிழர் தமிழ் இன உணர்வோடு தமிழ்த்தேசியப் பாதையில் திரளத் தொடங்குவதை மறுத்து..எதிர்த்து..இறுதிவரை அவர்களை ‘தலித் தாகவே வைத்து’ பராமரிக்க விரும்புவது …ஆதிக்கச் சாதி உணர்வாளர்கள் கொண்டிருக்கும் அதே ஆதிக்குடிகளை தனிமைப்படுத்தும் உளவியல் தான்.. இந்த நுட்பமான விசித்திர ஒற்றுமைதான் சாதிகளை காப்பாற்றும் முக்கிய கருவி. சுய சாதியை மறுத்து.. தமிழர் என்ற இன அடையாளத்தில் திரளும் சாதி மறுப்பாளர்களையும்… சாதிதான் தமிழர் இன ஓர்மைக்கு எதிரான முக்கிய காரணி என தன் சுய சாதி பெருமிதத்தை அழித்து …

 576 total views

இதற்கு யாரும் வர மாட்டார்கள்..

அரசியல் /

————————-+———————— தமிழக அரசியல் கட்சிகளில் வேறு எதுவும் நினைத்துக்கூட பார்க்க இயலாத மாபெரும் புரட்சிகர காரியம் ஒன்றை நாம் தமிழர் கட்சியின் இளையப் போராளிகள் நிகழ்த்தி வருகிறார்கள். உலகத்திலேயே அதிகம் நிலத்தடி நீர் பயன்படுத்துகிற நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவிலேயே அதிகம் நிலத்தடி நீர் பயன்படுத்துகிற மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டின் 85% நிலத்தடி நீர் பயன்படுத்தப்பட்டு விட்டது. 2020க்குள் நிலத்தடி நீர் முற்றும் அழிகிற நிலமாக தமிழ்நாடு மாறி வருகிறது. இந்நிலையில் இந்தப் பெரும் அபாயத்திலிருந்து …

 604 total views

வயிற்றெரிச்சல் கும்பல்களின் வன்ம எரிச்சல்

அரசியல் /

என்னடா தேர்தல் முடிந்து விட்டதே.. நாம் தமிழர் குறிப்பிட்ட சதவீத ஓட்டை வாங்கிவிட்டதே.தனது எழுச்சியான வளர்ச்சியை பதிவு செய்துவிட்டதே. ஆனாலும் இன்னும் வயிற்றெரிச்சல் கும்பல்களிடமிருந்து வன்ம இருமல் வரவில்லையே என்று நினைத்தேன். வரத் தொடங்கியிருக்கின்றன.அதிலும் சிலதுகள் புலம்பியே ரத்த வாந்தி எடுக்க தொடங்கி இருக்கின்றன. வழக்கம்போல் அதே புலம்பல்தான். ஆனால் இம்முறை கூடுதலாக பொய் 2 டீஸ்பூன் அதிகம். சரி.. நாமும் வழக்கம்போல் இடது கையால் இக்னோர் செய்யலாம் என்று நினைத்தால் கக்கிய அவதூறுகள் சமூக வலைதளங்களில் …

 545 total views

மானுட ஜீவித வரலாறு

இலக்கியம் /

ஒரு காலத்தில் காதுகளே இல்லாத மனிதர்கள் இருந்தார்கள். காதுகளே இல்லாத மனித வாழ்க்கையில் சொற்களுக்கோ உணர்ச்சிகளுக்கோ இடமில்லை. அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதும் இல்லை. அப்படிப் பேசிக் கொண்டால் கூட அவைகளுக்கு பொருளும் இல்லை. சரி.. காதுகள் இல்லாதது தான் பிரச்சனை. காதுகளைப் பொருத்துவோம். இனியாவது மனித வாழ்க்கையில் ஏதேனும் அர்த்தங்கள் தென்படுகிறதா என்பதை பார்ப்போம் என கடவுள் சிந்தித்து மனிதர்களுக்கு காதுகளை பொருத்தினான். அப்போதும் அவர்கள் அவ்வாறே இருந்தார்கள். அர்த்தம் இல்லாததைப் பேசிக்கொண்டு எவ்வித உயிர்ப்பும் …

 893 total views