மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

நூல் அறிமுகம் : மார்லன் பிராண்டோ -அஜயன் பாலா

கட்டுரைகள்.. /

நீ ஒளித்துவைத்திருக்கும் கத்திகளை கூராக்கு..  புதையுண்ட சிறுத்தைகளின் அமேசான் நதியாக அந்த கத்திகளை என் மார்பில் பாய்ச்சு.. மணிக்கணக்காக நாட்கணக்காக ஆண்டுக்கணக்காக இருண்ட யுகங்களாக  நட்சத்திர நூற்றாண்டுகளாக என்னை அழ விடு. -பாப்லோ நெரூதா. * இறுக்கமும் நினைத்துப் பார்க்கவே மறுக்கவும் கூடிய பால்யத்தை கொண்டவர்கள் நிகழ்காலத்தில் வாழ்வின் விதிகளுக்கு கட்டுப்படாத ஒரு கட்டற்ற காற்றைப்போல திரிவார்கள். பால்யத்தின் பசி என்பது வாழ்வு முழுக்க அடங்காத நீட்சியை கொண்ட பெரும் பயணம். துன்பமும் துயரமும் கொண்ட இளம் …

 1,384 total views,  1 views today

துளி-22

துளிகள் /

விலங்கம்ச மிச்சங்கள்.. —————————————– அந்த சாதி பெண்ணை திருமணம் செய்வோம் ..இந்த சாதிப் பெண்ணை திருமணம் செய்வோம்.. என்றெல்லாம் முழங்குவது சமூக அறிவு சிறிதும் அற்ற ஒரு கேடுகெட்ட மூர்க்கத்தனமான மூடத்தனம் என்பது ஒரு புறம்.. தான் நினைத்தால் எளிதில் களவாட முடிகிற கடைச்சரக்காக ஒரு பெண்ணை நினைப்பது என்பது அனைத்திலும் காட்டிலும் ஆகப்பெரும் அயோக்கியத்தனம். இந்த அயோக்கியத் தனம் தான்.. ஒரு பெண் மீது ஆசிட் ஊற்ற வைக்கிற, கழுத்தை கொலை செய்ய வைக்கிற நோயாக …

 763 total views

துளி-21

துளிகள் /

    இடப்பிறழ்வு மொழி.. ———————————– பிரிவின் இருள் நிழல்கள் நம் வசந்தகால முற்றத்தின் மேல் போர்த்த முனையும் இப்பொழுதை முற்பொழுதொன்றின் பேரன்பின் மழைச்சாரல் நனைக்க முயல்கிறது. உனக்கென நீ கோர்த்துக் கொண்ட காரணச் சங்கிலிகளை உன் கழுத்தில் அணிந்துக் கொண்டு கீழ்த்திசை நோக்கி நடக்க தொடங்குகிறாய்.. ஒரு நள்ளிரவின் அழுகுரல் போல நம் பிரிவு சுருதி பேதம் காணாத தன்னியல்பாய் நிகழத் தொடங்குகிறது. நம் நேச வீணையின் அறுந்து விட்ட தந்திகள் எங்கிருந்தோ வரும் காற்றின் …

 746 total views,  1 views today

துளி-20

துளிகள் /

  வைகோ -சரிந்த அரண்மனையின் பாசிப் படர்ந்த விதானம் ——————————————————– ஒரு காலத்தில் பாராளுமன்றத்தை நடுநடுங்க வைத்தவர் அவர்.இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை நேருக்கு நேராக நின்று மோதியவர்.எந்த ஒரு வரலாற்றையும் புள்ளிவிவரத்தோடு விவரித்து நினைவாற்றலால் வியக்க வைத்தவர். இசைஞானி இளையராஜாவின் திருவாசகம் வெளியீட்டுவிழாவில் இசை நுட்பங்களை பற்றி, தமிழர் இசை பற்றி இவர் பேசிய காலங்களை நினைக்கும் போது காலம் தான் எவ்வளவு கொடிய அரக்கன் என நினைக்கத் தோன்றுகிறது. உண்மையில் இன்றைய வைகோவின் …

 704 total views

துளி-19

துளிகள் /

  ஒரு கருவறையின் காத்திருப்பு.. —————————————————– சமீபத்தில் இயக்குனர் கௌதமன் அவர்களின் தந்தையார் மறைவுக்கு திட்டக்குடிக்கு அண்ணன் சீமானோடு சென்றிருந்த போது அம்மாவை பார்த்தேன். இந்த முறை இன்னமும் தளர்ந்திருந்தார்.அண்ணனோடு ஏதோ பேசிக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன் இறுக கைகளைப் பற்றிக் கொண்டார். கூட்டம் அதிகமாக இருந்தது நான் நகர்ந்து வந்து விட்டேன். சில நேரம் கழித்து வழக்கறிஞர் அங்கயற்கண்ணி எனது நண்பர் திருமலை அக்கா அமுதா நம்பி ஆகியோரோடு அவர் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். என்னை பார்த்தவுடன் மீண்டும் …

 736 total views

துளி-18

துளிகள் /

  இராஜ விழிகள் கொண்ட பேரழகன்.. ————————————————————– முதன்முதலாக அந்தக் குரலை கேட்டப்போது நான் சற்றே ஆச்சரியம் அடைந்தேன்.அது ஒரு வகையான நெகிழ்வும்,குழைவும் கொண்ட குரல். அந்த இறுக்கமான பிம்பத்திற்கும் அந்த குரலுக்கும் சம்பந்தமில்லை என்றே கருத வேண்டி இருக்கிறது. அவரைப் பற்றி ஆளாளுக்கு ஒரு கதை வைத்திருக்கிறார்கள்.அவரை சந்தித்தவர்கள் அவரைப் பற்றி நினைவுகளால் அவரவர் பங்கிற்கு ஒவ்வொரு சித்திரத்தை வரைகிறார்கள். எதிரிகளுக்கு கூட அவரைப்பற்றி கால தேச அபிமானங்களை தாண்டி ஆச்சர்யங்கள் மிகுந்த வியப்பு இருக்கிறது. …

 621 total views

துளி-17

துளிகள் /

    பிரிவொன்றின் வானம் _________________________ உன் மெளனப்பறவைக்கு முன்னால் என் பேரன்பின் சொற்கள் தானியங்களாய் இறைந்து கிடந்தன. நீயோ எதையும் பொருட்படுத்தாது பியோனோ ஒவியத்தின் உறைந்திருக்கும் இசையானாய்.. நிராகரிப்பின் சிறகுகளோடு வலசை பயணப்பட எத்தனிக்கும் உன் பார்வை ஏறக்குறைய கடலசைவில் நின்றாடிய தனிமை படகொன்றின் நிழலைப் போர்த்தி இருந்தது. ஏதேனும் ஒரு நொடி உடைதலில் ஏதேனும் காரணங்கள் தட்டுப்படும் என்கிற உனது பரிதவிப்பை நான் கண்ணாடி சன்னலுக்கு வெளியே பெய்யும் மழையை போல அவதானித்திருந்தேன். நாமாகிப் …

 856 total views

துளி-16

துளிகள் /

  மழையாலானவனின் மற்றுமொரு உரையாடல்.. —————————— நான் நிதானித்து செய்கிற எதையும் உனக்கான பாவனைகளாக நீயே கற்பிதம் செய்து கொள்கிறாய்.. என்னை எப்போதும் ஒரு பியானோ வாசிப்பவனாக நீ யோசிக்கிறாய். நானோ மூடிய கைகளோடு அலைபவன். அப்படி என்றால் அந்த மூடிய கரங்களில் உயிருடன் துடிக்கும் நீல மீன் குஞ்சு ஒன்று துடித்துக் கொண்டு இருப்பதாக நீ சொல்கிறாய். நான் வெற்றுக்கரங்களை திறந்து காட்டுகிறேன். காற்றில் அந்த நீல மீன் சிறு தட்டானாய் மாறி பறந்து விட்டதென …

 705 total views,  1 views today