சமீப நாட்களாக கீற்று இணையத்தளத்தில் நாம் தமிழர் எதிர்ப்பு கட்டுரைகள் மீண்டும் அதிகமாக பிரசுரமாகி வருகின்றன. (நடுவில் ஏனோ..நிறுத்தி இருந்தார்கள்.)

பொய்யும்,புரட்டும்,தேர்தல் அச்சமும் (சொந்தக்காரர்கள் ஜெயிக்கணுமில்ல…) நிரம்பி வழியும் அக்கட்டுரைகள் பற்றி நமக்கு ஒரு பொருட்டே இல்லை என்றாலும் கூட…

மேற்கண்ட கட்டுரைகள் சில செய்திகளை சமூகத்திற்கு தெளிவாக வெளிக்காட்டுகின்றன..

அவையாவன..

தமிழ்த்தேசிய கருத்தியலின் ஏகமனதான பிரதிநிதியாய் நாம் தமிழர் அமைப்புதான் இருக்கிறது..

திராவிட கருத்தியலின் சிம்ம சொப்பனமாய் நாம் தமிழரே திகழ்கிறது.

தமிழ்த்தேசிய கருத்தியல் எதிர்ப்பு என்றாலே அது சீமான் எதிர்ப்பாகவே பதியப்படுகிறது.

சமீபநாட்களாக அர்த்தமற்று,வலுவற்று, இளைஞர்களை ஈர்ப்பை தொலைத்து…ஏறக்குறைய சமாதி நிலைக்கு சென்று விட்ட திராவிட கருத்தியல் நோக்கி வெளிச்சம் பட தேவை எழுந்திருக்கிறது.

ஆரிய எதிர்ப்பு,இந்துத்துவ எதிர்ப்பு,சாதீய மறுப்பின் பிராண்ட் அம்பாசிட்டர்களாக ஒரு காலத்தில் இருந்த திராவிட கருத்தியல் தற்போது அம்பலப்பட்டு, அப்பதவிகளை தங்களது வலிமையான தொடர் செயல்பாடுகளால் தமிழ்த்தேசிய கருத்தியல் மூலமாக பிரபாகரனின் தம்பிகள் நிறுவி நிற்பதுமான சூழலில் கீற்று போன்ற இணையதளங்கள் மூலமாக வசவொலி பொழிய கட்டாயம் எழுந்திருக்கிறது..

அரங்கங்களில் இருந்த தமிழ்த்தேசிய கருத்தியல் லட்சக்கணக்கான மக்கள் கூடும் வெகுசன ஈர்ப்பு கருத்தியலாக மாறி நிற்பதும், பெரியார் தன் உழைப்பால் வெகுசன கருத்தியலாக கட்டி வைத்திருந்த திராவிட கருத்தியலை ,கருணாநிதி,ஜெ,விசயகாந்த் (அண்ணன் வைகோ பெயர் இத்தருணத்தில் வேண்டாங்க.. அவரே அண்ணா அறிவாலயத்தில் தன் கட்சி கூட்டத்தை தேடும் நிலையில் இருப்பதால்.. நாமும் எதற்கு smile emoticon ) என நீளும் பட்டியலில் இருக்கிற திராவிட அரசியல் வாதிகள் தங்கள் சுயநலபிழைப்பு,பித்தலாட்ட அரசியல் காரணமாக மக்களிடம் அம்பலப்பட்டு நிற்பதும், இவர்களை தத்துவமாக தாங்கிப்பிடிக்க முடியாமல், அடையாளப்படுத்த முடியாமல் தவிக்கிற திராவிட சிறு இயக்கங்கள் தங்களை,தத்துவத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.

எல்லாவற்றிக்கும் மேலாக தேர்தல் வருகிறது. சீமானின் சொற்கள் மக்கள் மனதில் ஏற்படுத்துகிற மாற்றத்தை.. பலவீனப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது..அப்போதுதான் தங்களது ”இரத்த” உறவுகளது அரசியல் அங்கீகாரம் பலவீனப்படாமல் காக்கப்படும்..

இது போன்ற தேவைகளுக்காக,கட்டாயங்களுக்காக வசவு கட்டுரைகள், ஏசல் எழுத்துக்கள்,பூசல் பூச்சாண்டிகள் ஆகியவற்றை கீற்று பிரசவிக்கிறது.

புரிகிறது.

நாம் தமிழரை தனித்த வலுவான சக்தியாக மாற்ற..அடையாளப்படுத்த ஓயாமல், உறங்காமல் உழைக்கிற கீற்றுவின் சேவை (அச்சம்..?? ) கண்டு மனம் மகிழ்கிறது.

கீற்று இணையத்தளத்தில் ஒருகாலத்தில் எனது எழுத்துகள் பல வந்திருக்கின்றன.

அப்போது நான் எவ்வாறு மகிழ்ந்தேனோ..இப்போதும் அதே அளவு மகிழ்கிறேன்.