மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

மெட்ராஸ் – பெருமிதங்களுக்கு எதிரான கொண்டாடப்பட வேண்டிய கலகக்குரல்

கட்டுரைகள்.. /

சமீப காலமாக தமிழ்த்திரை வித்தியாசமான முயற்சிகளை தரிசித்து வருகிறது. கோடிக்கணக்கான பண முதலீட்டில் மாபெரும் கதாநாயகர்கள் –கதாநாயகிகள் நடிக்க, மிகப்பெரிய தொழிற்நுட்ப மேதைகள் பணியாற்றி, அட்டகாசமான விளம்பரங்களுடன் மின்னிக் கொண்டிருந்த தமிழ்த்திரையின் இலக்கணத்தை சமீப கால இயக்குனர்கள் மாற்றி எழுத தொடங்கி இருக்கிறார்கள். சராசரிக்கும் சற்று கீழேயே இரட்டை அர்த்தம்,பொறுக்கி கதாநாயகன் என அரைத்துக் கொண்டிருந்த இராதாகிருஷ்ணன் பார்த்திபன் கூட கதை திரைக்கதை வசனம் இயக்கம் என புத்திசாலித்தனமான திரைக்கதை அமைப்பு மூலம் ’அட’ போட வைக்கிறார். …

 881 total views

மழை அறிந்த மனசு..

என் கவிதைகள்.. /

மழை வருவதும்..வராததும்அவரவர் மன நிலையைபொருத்தது.பல நேரங்களில்மழை யாரோஒருவருக்குமட்டும் பெய்துவிட்டு போவதும்.. ஊரே நனைகையில் ஒருவருக்கு மட்டும் பொய்ப்பதும்நேசிப்பில் மட்டுமே சாத்தியம். மழையில் இசையை உணருபவனும்.. இசையில் மழையை உணருபவனும்.. நிச்சயம் வெவ்வாறனவர்களே.. ஒரு இளஞ்சூட்டு தேநீரோடு மழை விடை பெறலாம். அந்த தேநீரின் கதகதப்பிற்காகவே இன்னொரு மழையும் பெய்யலாம். தேநீரை காதலியாக பருகுபவர்களும்.. காதலியை ஒரு இளஞ்சூட்டு தேநீராக ரசிப்பவர்களும்.. பாக்கியவான்கள். உங்களில் யார் பாக்கியவான்கள்…? -மணி செந்தில்.  903 total views

 903 total views