மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

இருட்பாதையின் திசை வழி..

கவிதைகள் /

பொய்கள் பாசியென படர்ந்திருந்த குளமொன்றில் அரூவ மீனாய் நீந்திக்கொண்டிருந்த உன்னை நோக்கி எறியப்பட்ட தூண்டில் வாயில்தான் என் கனவொன்று இரையாய் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது. எதிர்பாராமின்மையை சூட்சம விதிகளாய் கொண்டிருக்கும் அந்த மாய விளையாட்டில் அவரவர் பசிகளுக்கேற்ப சொற்களின் பகடையாட்டம் நடந்தன…. உக்கிரப் பொழுதில் தாங்காமல் நிகழ்ந்த பெரு வெடிப்பு . கணத்தில் சிதறிய என் சிலுவைப் பாடுகளின் கதறல் ஒலிகள் உன்னால் சில்லறைகளின் சிந்திய ஓசை என அலட்சியப் படுத்தப்பட்ட நொடியில்.. திரும்பவே இயலா …

 2,387 total views

கடவுள் வாசித்த பைபிள்..

கட்டுரைகள்.. /

      இயற்கையின் படைப்பில் மகத்தானது பெண்தான்.அவளைப் போல எதுவும் உலகில் வலிமையானது இல்லை. பெண்களின் உழைப்பினால்..தியாகத்தினால் பரிபூரணம் அடைகிறது உலகு. மானுட வாழ்வின் மகத்தான விழுமியம் பெண்தான். இரவுப் பகலாக பெண்கள் உழைக்கிறார்கள். வாழ்வதற்காக போராடுகிறார்கள். ஆண்கள் அலட்சியப்படுத்தும் ஒவ்வொன்றையும் பெண்கள் கவனம் கொள்கிறார்கள். படைக்கிறார்கள். மன்னிக்கிறார்கள்.மாசற்ற அன்பிற்காக வாழ்வின் இறுதி நொடி வரை ஏங்கி மாள்கிறார்கள். சக மனிதனின் சலனப்பார்வை ஒன்று கூட சங்கடப்படுத்துகிற அவர்களது வாழ்வை ஒரு ஆணாக இருந்து நம்மால் …

 1,410 total views

நிழலற்ற கோபுரம்

கவிதைகள் /

    அந்த கோபுரம் அவ்வளவு எளிமையானதல்ல.. விழி வழியே அளந்து விட விண்ணை உரசும் அதன் உயரம் அனுமதித்ததில்லை.. மேனி முழுக்க சிற்ப எழில் பூசி நிற்கும் திமிர் பல உளிகளின் வலி தாங்கி உருவான வசீகரம். நிலாவை உடலில் போர்த்தி சுடர்விட்ட ஒரு இரவில் தான்.. அந்த கோபுரத்தை கண்டவர்கள்.. அது வெறும் கற்களால் ஆனது அல்ல.. கண்கள் முழுக்க சுமந்த கனவின் கனல் என கண்டார்கள்.. வானெங்கும் சிறகு விரித்து இறகு கவிதை …

 1,418 total views