நாம் என்ன செய்ய போகிறோம்…?
அரசியல்
அருமை சகோதரன் முத்துக்குமாரின் தியாகமும்…அர்த்தம் மிகுந்த அவரது மரணமும் ………மரண வாக்குமூலமும்.. நம்மை கண்ணீரில் ஆழ்த்துகிறது.
உணர்வுள்ள தமிழனாய் பிறந்த காரணத்தினால் தன்னை தானே மாய்த்துக் கொள்ளும் நெஞ்சுரம் கொண்டு வீர மரணம் எய்திருக்கிறார் முத்துக்குமார்..
உயிரோடு இருக்கும் நமக்கெல்லாம் அவரது மரண வாக்குமூலம் மூலம் பல செய்திகளை அறிவித்து விட்டு சென்றுள்ளார்.
நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதில் தான் இருக்கிறது அவரது தியாகத்திற்கான மதிப்பு…கேடு கெட்ட அரசியல் பிழைப்பு வாதிகளை நம்பி பயனில்லை தோழர்களே….
முத்துக்குமாரின் உடலில் பற்றிய நெருப்பு நம் ஆன்மாவை சுட்டு பொசுக்கட்டும்…..
இனியாவது நடைப் பிணங்களாக ,சோற்று துருத்திகளாக, வாழாமல்..உணர்வுள்ள உயிராய் வாழ்வோம்..
ஒரு உண்மையான உணர்வாளனாய், உலக ஞானம் பெற்ற மேதையாய்…தியாகம் செய்ய தயங்காத மனிதனாய், நம் கண் முன்னால் வாழ்ந்து 26 வயதிற்குள் இனத்திற்காக இன்னுயிர் அளித்தும் சென்றுள்ளான் அந்த இனமான வீரன்…
நாம் என்ன செய்ய போகிறோம்…?
771 total views, 1 views today