மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

ராஜ வாழ்க்கை…

கவிதைகள்

358843-bigthumbnail

எப்போதும் என் குதிரை
இராஜபாட்டையில்
செல்வதான கனவில்..

நான் மன்னன் இல்லை
என்பதையும்,
வாழ்க்கை குதிரை
இல்லை என்பதை மறந்து
போனேன்…

சறுக்கி விழும்
தருணங்களே
அறிவிக்கின்றன…
சதுப்பில் பயணப்படும்
எருமையாய் வாழ்வும்
ஒட்டிய ஈயாய் நானும்…

 911 total views,  1 views today