இரவு முடிவிலியான கதை
என் கவிதைகள்..
ஆகஸ்ட் 17, 2015
இரவை போர்த்திக்
கொண்டு
அவள் படுத்திருந்த
அவ் வேளையில் தான்
கலைந்த அவளது
கேசத்தில்
நட்சத்திரங்கள்
பூத்திருந்தன…
சட்டென்று இரவை
பிடித்தெழுத்து
மீண்டும் ஒரு
விடியலுக்கு
நான் தயாரான
போது…
அவள் சிரித்தாள்.
நான் சற்றே மூர்க்கத்துடன்..
நீ போர்த்திக்கிடக்கிற
இரவை பிடித்து இழுத்தால்
என்ன செய்வாய்..?
என கேட்டேன்
மீண்டும்
சிரித்தப்படியே
அவள் சொன்னாள்..
நான் உன்னை போர்த்திக்
கொள்வேன் – என
ஆதி வன
மூங்கிலில்
யாரோ
காற்று ஊதி
இன்னுமொரு
இரவிற்கு
ஏற்பாடு செய்தார்கள்…
பிறகுதான்
நான்
உணர்ந்தேன்..
இரவும், அவளும்
முடிவிலி என…
859 total views, 1 views today