87244191_1280x720
கூந்தலை அள்ளி
அப்படியே என் முகத்தில்
படர்த்தினாய் …
 
இது நீள் இரவு என்றேன்..
 
இல்லை..இல்லை..
சூரியன் இருக்கிறதே
இது பகல்..
என்றாய் நீ..
.
அது உன் விழிகள்..
இது அதிகாலை
என்றேன்.
 
போடா
என்று புன்னகைத்தவாறே
இறுக அணைத்தாய்..
 
மீண்டும் சிரித்தவாறே
சொன்னேன்..
 
இது ஒரு பொன்மாலைப்
பொழுதென..