மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

என் வாழ்க்கைக் கதை..

கவிதைகள்

1

 

பிரிவின்
குருதியினால்
வண்ணம் மாறுகிற

முடிவற்ற துயரத்தின்
மூர்க்க ஓவியத்தை..
……

எல்லையற்ற
ஆற்றாமைத் துளிகளால்..

வேறொரு கவிதையாய்..
வேதனை கசியும்
வயலின் இசை துணுக்காய்..

எழுதுவதை தான்..
…….

என் வாழ்க்கைக்
கதையாக
விரிகிற..

இத்திரைப்படத்தை
கைத்தட்டல்களோடு
பார்த்துக் கொண்டு
இருக்கிறீர்கள்.

 1,334 total views,  1 views today