கணக்கு-வழக்கு
என் கவிதைகள்..
பிப்ரவரி 20, 2020
நின்று நிதானித்து
திரும்பிப் பார்த்தால்
நிறைவொன்றுமில்லை.
குறையொன்றுமில்லை.
கண் கூசும் வெளிச்சங்களுக்கு,
உச்சுக் கூசும் உயரங்களுக்கு,
புகழ் வார்த்தை தளும்புகிற
போதைகளுக்கு,
அடிமையாகிப்
போன கணக்கினைத் தவிர
மிஞ்சியது ஏதுமில்லை.
கடந்தவை நடந்தவை எல்லாம்
கணக்கிட்டால் நிகழ்ந்தவை தானே
என பெருமூச்சுயன்றி வேறில்லை.
முதுகில் உரசும் கத்திகளுக்கு இடையே..
நெஞ்சில் உறுத்தும் புத்திகளுக்கு இடையே..
விளையாடித்தீர்த்தும் பலனில்லை.
ஆயிரம் சூழ போகித்திருந்தாலும்
சத்தியமாய் சொல்கிறேன் நலனில்லை.
இது தானா வாழ்வு என்பதிலும்..
இது நானா – தாழ்வு என்பதிலும்..
இடைவெளி இல்லா பேதமில்லை.
449 total views, 1 views today