மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

சொற்களை தொலைத்தவன்.

இலக்கியம் /

மொழி என்பது ஒரு விசித்திரமான ஆயுதம். அது ஒரு விதை நெல் போல. பயன்படுத்த வேண்டிய காலத்தை தவிர மற்ற நேரங்களில் பயன்படுத்தப்படுமானால் அது விரயமாகத் தான் போகும். கொட்டப்படும் தானியங்களைப் போல சொற்களை கொட்டிக்கொண்டே இருப்பவர்களை கவனித்துப் பாருங்கள். அவர்கள் களைப்புற்றவர்களாக, எதையோ இழந்த மனநிலையில் இருப்பவர்களாக உங்களால் உணர முடியும்.மகாபாரதம் இதிகாசத்தில் வருகிற விதுரன் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடக்கிற பெரும் போருக்குப் பிறகு முது வனத்திற்குள் சென்று மறைகிற அவன் சொற்களை இழந்தவன் ஆகிறான். …

 540 total views

விடைபெறுதலின் நம்பிக்கை.

கவிதைகள் /

    திரும்ப வரப் போவதே இல்லாத ஒரு நாளில் சந்திக்க வருவதாக சொல்லி விட்டு சென்று இருக்கிறாய்.. அன்றைய நாளில் மழை பெய்யும் என்றாய். நீலக் கலர் சட்டையும் கருப்பு ஜீன்ஸீம் அணிந்து வா என்றாய். இளையராஜா பாடலை கேட்டுக்கொண்டே காத்திரு என்று சிரித்துக் கொண்டே சொன்னாய். நா உலரும் தருணங்களில் தேநீர் குடித்துக் கொள் என்றாய்… காத்திருக்கும் தருணங்களில் யாரையும் வேடிக்கை பார்க்காதே.. தப்பாக நினைப்பார்கள் என்றாய். மிகவும் காலதாமதம் ஆனால் பசியோடு இருக்காதே. …

 502 total views