அன்பே சகலமும்..
கவிதைகள்
ஜூலை 5, 2020
இறுதியில்
அனைத்திலும்
இழந்து இருப்பதும்,
பெற்றிருப்பதும்,
ஒன்றே ஒன்று தான்..
அதைவிட
சுகமானதும்
கொடுமையானதும்
வெவ்வேறில்லை.
அதுதான்
கோரப்படும்
வரமாகவும்
விதிக்கப்படும்
சாபமாகவும்
திகழ்கிறது.
அதுவே
தண்டனையாகவும்
பிரார்த்தனையாகவும்
இருக்கிறது.
அதுவே
வாழ்வின்
அர்த்தமுமாக
அபத்தமுமாக
வாய்க்கப்
பட்டிருக்கிறது.
அதுதான்
சாத்தானின்
விலக்கப்பட்ட கனி.
அதுதான்
தேவனின்
கருணை மிகுந்த
உதிரம்.
இறுதியாக
அனைத்திலும்
மிஞ்சியதும்
எஞ்சியதுமாக
அதனது பாடலே
கேட்கக் கிடைக்கிறது.
ஆதி அந்தம்
அதுதான்.
அன்பே சகலமும்.
♥️
560 total views, 1 views today