அன்பின் உறவுகளுக்கு வணக்கம்.

சென்னையில் ஒய் எம் சி ஏ மைதானத்தில் ஜனவரி 3 முதல் தொடங்கி ஜனவரி 21 வரையிலும் புத்தக கண்காட்சி நடைபெற இருக்கிறது. நிறைய புத்தகங்கள் வருடா வருடம் வெளிவருகின்றன. ஒரு பெருங் கடலில் சிறந்த முத்துக்களை தேர்ந்தெடுப்பது போல, பல லட்சக்கணக்கான புத்தக அடுக்குகளுக்கு நடுவில் நமக்கான புத்தகம் ஒன்றினை நாம் எப்படி அமைவது என்கின்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது.

ஒவ்வொரு புத்தகமும் ஏதோ ஒரு செய்தியை மிகுந்த ஆர்வத்தோடு உங்களிடம் சொல்ல துடித்துக் கொண்டே இருக்கின்றது. புத்தக கண்காட்சி முழுக்க லட்சக்கணக்கான புத்தகங்களின் உணர்ச்சி அலைகள் ஓடி முடித்திருக்கும் ஒரு ஓட்டப்பந்தய வீரனின் பெருமூச்சு போல கேட்டுக்கொண்டே இருக்கின்றன. அவற்றில் நமக்கான ஒன்றின் அலைவரிசை உணர்ந்து தேடிக் கண்டடைவது என்பது ஒரு சாகசச் செயல்.

ஆயிரக்கணக்கான பதிப்பகங்கள். லட்சக்கணக்கான புத்தகங்கள். எண்ணற்ற எழுத்தாளர்கள்.இவற்றுக்கு நடுவில் ஒரு நல்ல புத்தகத்தை தேடி கண்டறிவது என்பது ஒரு பெரும் பாலைவனத்தில் புதையலை தேடி அலையும் தனிமனிதனை போன்றது.

கண்ணில் தெரியும் புத்தகங்களை எல்லாம் வாங்கி குவித்து விட முடியாது என்பதோடு மட்டுமல்லாமல் கூடாது என்பது மிக மிக முக்கியம்.ஓரு தேர்ந்த வாசகனுக்காக ஒரு சிறந்த புத்தகம் நிச்சயம் காத்திருக்கும். தேடி அடைவது தான் நமக்கு முன்னே இருக்கும் சவால்.

வரும் நாட்களில் நான் படித்து ஆழ்ந்த, சிலிர்த்த மிகச்சிறந்த சில புத்தகங்களை, அவை தந்த வாசிப்பு அனுபவங்களை உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தோடு புத்தக கண்காட்சி நடக்கின்ற இந்த நாட்களில் எழுதலாம் என்று இருக்கிறேன்.

நான் பரிந்துரைக்கின்ற எல்லா புத்தகங்களையும் நீங்கள் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் மனதின் குரலோடு எனது பரிந்துரை ஓத்திசைவு கொள்ளுமானால் அப்போது நீங்கள் அந்த புத்தகத்தை வாங்கலாம்.

சமூக வலைதளங்களில் எழுதப்படும் கட்டுரைகளுக்கு பெரிய மதிப்பில்லை என்பார்கள். எழுத்துக்களின் மதிப்பு என்பது வாசகர்களின் விழிகளில் இருக்கிறது. என்னைப் பொருத்தவரையில் எது வெகு மக்களிடம் மிக எளிதாக சென்று சேர்கிறதோ அதை ஊடகமாக பயன்படுத்திக் கொள்வது தான் சரியான வழி. அதன் காரணமாகவே இங்கு நான் எழுதுகிறேன்.

பிறந்ததிலிருந்து எனக்கு வாசிப்பு ஆர்வத்தை வற்ற விடாமல் என்னுள் தூண்டிக் கொண்டே இருக்கும் எனது தந்தை முதுபெரும் தமிழறிஞர், பேராசிரியர் முனைவர்.ச.மணி அவர்களுக்கு எனது நன்றியும். வணக்கமும்.

❤️

….

அன்பின் உறவுகளுக்கு வணக்கம்.

சென்னையில் ஒய் எம் சி ஏ மைதானத்தில் ஜனவரி 3 முதல் தொடங்கி ஜனவரி 21 வரையிலும் புத்தக கண்காட்சி நடைபெற இருக்கிறது. நிறைய புத்தகங்கள் வருடா வருடம் வெளிவருகின்றன. ஒரு பெருங் கடலில் சிறந்த முத்துக்களை தேர்ந்தெடுப்பது போல, பல லட்சக்கணக்கான புத்தக அடுக்குகளுக்கு நடுவில் நமக்கான புத்தகம் ஒன்றினை நாம் எப்படி அமைவது என்கின்ற குழப்பம் பலருக்கும் இருக்கிறது.

ஒவ்வொரு புத்தகமும் ஏதோ ஒரு செய்தியை மிகுந்த ஆர்வத்தோடு உங்களிடம் சொல்ல துடித்துக் கொண்டே இருக்கின்றது. புத்தக கண்காட்சி முழுக்க லட்சக்கணக்கான புத்தகங்களின் உணர்ச்சி அலைகள் ஓடி முடித்திருக்கும் ஒரு ஓட்டப்பந்தய வீரனின் பெருமூச்சு போல கேட்டுக்கொண்டே இருக்கின்றன. அவற்றில் நமக்கான ஒன்றின் அலைவரிசை உணர்ந்து தேடிக் கண்டடைவது என்பது ஒரு சாகசச் செயல்.

ஆயிரக்கணக்கான பதிப்பகங்கள். லட்சக்கணக்கான புத்தகங்கள். எண்ணற்ற எழுத்தாளர்கள்.இவற்றுக்கு நடுவில் ஒரு நல்ல புத்தகத்தை தேடி கண்டறிவது என்பது ஒரு பெரும் பாலைவனத்தில் புதையலை தேடி அலையும் தனிமனிதனை போன்றது.

கண்ணில் தெரியும் புத்தகங்களை எல்லாம் வாங்கி குவித்து விட முடியாது என்பதோடு மட்டுமல்லாமல் கூடாது என்பது மிக மிக முக்கியம்.ஓரு தேர்ந்த வாசகனுக்காக ஒரு சிறந்த புத்தகம் நிச்சயம் காத்திருக்கும். தேடி அடைவது தான் நமக்கு முன்னே இருக்கும் சவால்.

வரும் நாட்களில் நான் படித்து ஆழ்ந்த, சிலிர்த்த மிகச்சிறந்த சில புத்தகங்களை, அவை தந்த வாசிப்பு அனுபவங்களை உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தோடு புத்தக கண்காட்சி நடக்கின்ற இந்த நாட்களில் எழுதலாம் என்று இருக்கிறேன்.

நான் பரிந்துரைக்கின்ற எல்லா புத்தகங்களையும் நீங்கள் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் மனதின் குரலோடு எனது பரிந்துரை ஓத்திசைவு கொள்ளுமானால் அப்போது நீங்கள் அந்த புத்தகத்தை வாங்கலாம்.

சமூக வலைதளங்களில் எழுதப்படும் கட்டுரைகளுக்கு பெரிய மதிப்பில்லை என்பார்கள். எழுத்துக்களின் மதிப்பு என்பது வாசகர்களின் விழிகளில் இருக்கிறது. என்னைப் பொருத்தவரையில் எது வெகு மக்களிடம் மிக எளிதாக சென்று சேர்கிறதோ அதை ஊடகமாக பயன்படுத்திக் கொள்வது தான் சரியான வழி. அதன் காரணமாகவே இங்கு நான் எழுதுகிறேன்.

பிறந்ததிலிருந்து எனக்கு வாசிப்பு ஆர்வத்தை வற்ற விடாமல் என்னுள் தூண்டிக் கொண்டே இருக்கும் எனது தந்தை முதுபெரும் தமிழறிஞர், பேராசிரியர் முனைவர்.ச.மணி அவர்களுக்கு எனது நன்றியும். வணக்கமும்.

❤️

….

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்தில் வைக்கப்படும்” என்கிறது வள்ளுவம். இந்த உலகத்தில் மறைந்த எத்தனையோ புகழ்பெற்ற ஆளுமைகளின் நினைவிடங்கள் இருக்கின்றன. மக்களின் மனதை வென்ற அவர்களை மக்கள் மறக்காமல் தேடிச்சென்று நன்றி கூர்ந்து வணங்கி வருகின்றனர். அப்படி உலக மக்கள் அதிகம் சென்று வணக்கம் செலுத்துகிற, காலங்கள் கடந்தாலும் மறவாமல் கண்ணீர் கசிந்து நன்றி கூறுகிற ஒரு புனித தலமாக இங்கிலாந்து தலைநகரமான லண்டன் மாநகரத்தில் வட திசையில் உள்ள உள்ள ஹைகேட் என்ற இடத்தில் கீழ் திசையில் உள்ள ஒரு கல்லறை விளங்குகிறது.

அந்தக் கல்லறையின் முகப்பில் “உலகத் தொழிலாளர்களே.. ஒன்று சேருங்கள்..” என்கிற புகழ்பெற்ற முழக்கம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

ஆம். அங்கு தான் எல்லா காலத்திலும் மனிதர்களுக்கு தேவைப்படுகின்ற மாமனிதர் காரல் மார்க்ஸ் நிறைவேறாத தன் கனவுகளோடு உறங்குகிறார். அதுதான் இன்றளவும் உலகம் முழுக்க இருக்கின்ற அறிஞர்கள் எழுத்தாளர்கள் மேதைகள் தலைவர்கள் என பலரும் சென்று வழிபடும் வழிபாட்டுத் தலமாக, பெருமைக்குரிய இடமாக மாறி இருக்கிறது.

ஆனால் வாழும் காலத்தில் காரல் மார்க்ஸ் என்ற தனி மனிதர் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்திருப்பார் என ஆராயும் போது வலியும் துயரமுமே மிஞ்சுகிறது. ‘வலியோர் பிழைக்க.. எளியோர் உழைக்க..’ என்ற கொடும் விதியை மாற்றி எழுத மார்க்ஸ் தன் வாழ்க்கையையே நரக நெருப்பில் ஆழ்த்திக் கொண்டார் என்பது அவரது வாழ்க்கை வரலாற்றை படிக்கும் எவரும் கண்கலங்காமல் கடக்க முடியா பேருண்மை.

குறிப்பாக காரல் மார்க்ஸின் மனைவி ஜென்னி தன் வாழ்நாள் முழுக்க தன் கணவரின் கனவிற்காக பட்ட பாடுகள் வரலாற்றின் ஏடுகளில் உதிர எழுத்துக்களால் உறைந்து கிடக்கின்றன. நம் சமூகத்திலும் மகாகவி பாரதிக்கும், எழுத்தாளுமை புதுமைப்பித்தனுக்கும் இதே நிலைமை ஏற்பட்டிருந்தாலும், ஜென்னி மார்க்ஸ் பட்ட பாடு படிக்கும் போதெல்லாம் விழிகளில் நீர் கசியாமல் இருக்க முடியாது.

” எங்கள் ஒரு நாள் குடும்ப வாழ்க்கை” என்ற தலைப்பில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடாக வந்திருக்கின்ற இந்த சிறு நூல் மார்க்ஸ் என்கின்ற மாபெரும் புரட்சியாளனின் வறுமையும் துயரமும் மிக்க இன்னொரு பக்கத்தை காட்டுகின்ற முக்கிய ஆவணம்.

1850 மே 20 ஆம் தேதி யோசிப் வெய்டமையர் என்பவருக்கு ஜென்னிமார்க்ஸ் எழுதிய எட்டுப்பக்க கடிதம் தான் “எங்கள் ஒரு நாள் குடும்ப வாழ்க்கை”.

அத்தோடு தமிழறிஞர் சாமிநாத சர்மா காரல் மார்க்ஸ் பற்றி மனப்போராட்டம் என்கின்ற ஒரு பதிவு மற்றும் ஜென்னிமார்க்ஸ் எழுதிய வாழ்க்கை குறிப்புகளை கொண்டு தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் நிறைந்த வாழ்க்கை பற்றிய நடைசித்திரம் என்ற கட்டுரையும் இணைக்கப்பட்ட இந்த நூல் அனைவரும் படிக்க வேண்டிய மிக மிக முக்கியமான நூல்.

ஜென்னி அந்த கடிதத்தில் தன் கணவரை பற்றி குறிப்பிடும் போது ” எங்கள் நிலை குறித்து பொதுமக்களுக்கு என்றுமே தகவல் கொடுக்கப்பட்டதில்லை. என் கணவர் இத்தகைய விஷயங்களில் மிகவும் மான உணர்ச்சி உள்ளவர். கடைசியாக ஏதேனும் இருந்தால் அதையும் தியாகம் செய்வாரே தவிர, அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பெரிய மனிதர்களைப் போல ஜனநாயக பிச்சையில் இறங்க மாட்டார்.” என்கிறார்.

மேலும் அவர் அதே கடிதத்தில்

” இங்கு என் கணவர் வாழ்க்கையின் சில்லறை கவலைகள் மிக மிக மோசமான உருவில் வந்து முழ்கடிப்பதன் விளைவாக அதற்கு ஈடு கொடுத்து தினசரி மணிக்கு மணி போராட தமது சக்தி முழுவதையும், தமது அமைதியான தெளிவான நிச்சய கௌரவத்தையும் பயன்படுத்தி நிலை நிற்க வேண்டி இருக்கிறது” என்கிறார்.

‘என்றும் நினைவு கொள். மனிதன் என்பவன் பயனின்றி அழிந்து விடக் கூடாது.” என்கிறார் உலகத்திற்கு பொதுவுடமை தத்துவம் தந்த பேராசான் மார்க்ஸ்.

சகலவிதத்திலும் மற்ற அனைவருக்கும் பயன்படும் ஒரு மாமனிதரின் தனிப்பட்ட வாழ்க்கை எப்படி துயர் மிக்கதாக அமையும் என்பதை உணர்ந்து கொள்ளவும் அதையும் மீறி அவர்கள் எப்படி லட்சியப் பற்றுறுதியில் உறுதியாக நின்றார்கள் என்பதை கற்றுக் கொள்ளவும் இந்த சிறு நூல் வழிவகுக்கிறது.

சில வருடங்களுக்கு முன்பாக எனது ஆசான் எழுத்தாளுமை எஸ்.ராமகிருஷ்ணன் காரல் மார்க்ஸின் வாழ்க்கையைப் பற்றி ஒரு அற்புதமான உரை நிகழ்த்திருப்பார். அது இன்றும் இணையத்தில் காணக் கிடைக்கிறது.

( https://youtu.be/mhqRn7HKpZs?feature=shared )

அந்த உரையோடு, இந்த சிறு நூலை படிக்கும் போது நமது உள்ளம் நெகிழ்வடைந்து, மூடி கிடக்கும் நமது அகக்கதவுகள் திறக்கின்றன. அதுதானே ஒரு புத்தகத்தின் நோக்கம்..??

எங்கள் ஒரு நாள் குடும்ப வாழ்க்கை- ஜென்னி மார்க்ஸ். விலை ரூ.60

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு.

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்தில் வைக்கப்படும்” என்கிறது வள்ளுவம். இந்த உலகத்தில் மறைந்த எத்தனையோ புகழ்பெற்ற ஆளுமைகளின் நினைவிடங்கள் இருக்கின்றன. மக்களின் மனதை வென்ற அவர்களை மக்கள் மறக்காமல் தேடிச்சென்று நன்றி கூர்ந்து வணங்கி வருகின்றனர். அப்படி உலக மக்கள் அதிகம் சென்று வணக்கம் செலுத்துகிற, காலங்கள் கடந்தாலும் மறவாமல் கண்ணீர் கசிந்து நன்றி கூறுகிற ஒரு புனித தலமாக இங்கிலாந்து தலைநகரமான லண்டன் மாநகரத்தில் வட திசையில் உள்ள உள்ள ஹைகேட் என்ற இடத்தில் கீழ் திசையில் உள்ள ஒரு கல்லறை விளங்குகிறது.

அந்தக் கல்லறையின் முகப்பில் “உலகத் தொழிலாளர்களே.. ஒன்று சேருங்கள்..” என்கிற புகழ்பெற்ற முழக்கம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

ஆம். அங்கு தான் எல்லா காலத்திலும் மனிதர்களுக்கு தேவைப்படுகின்ற மாமனிதர் காரல் மார்க்ஸ் நிறைவேறாத தன் கனவுகளோடு உறங்குகிறார். அதுதான் இன்றளவும் உலகம் முழுக்க இருக்கின்ற அறிஞர்கள் எழுத்தாளர்கள் மேதைகள் தலைவர்கள் என பலரும் சென்று வழிபடும் வழிபாட்டுத் தலமாக, பெருமைக்குரிய இடமாக மாறி இருக்கிறது.

ஆனால் வாழும் காலத்தில் காரல் மார்க்ஸ் என்ற தனி மனிதர் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்திருப்பார் என ஆராயும் போது வலியும் துயரமுமே மிஞ்சுகிறது. ‘வலியோர் பிழைக்க.. எளியோர் உழைக்க..’ என்ற கொடும் விதியை மாற்றி எழுத மார்க்ஸ் தன் வாழ்க்கையையே நரக நெருப்பில் ஆழ்த்திக் கொண்டார் என்பது அவரது வாழ்க்கை வரலாற்றை படிக்கும் எவரும் கண்கலங்காமல் கடக்க முடியா பேருண்மை.

குறிப்பாக காரல் மார்க்ஸின் மனைவி ஜென்னி தன் வாழ்நாள் முழுக்க தன் கணவரின் கனவிற்காக பட்ட பாடுகள் வரலாற்றின் ஏடுகளில் உதிர எழுத்துக்களால் உறைந்து கிடக்கின்றன. நம் சமூகத்திலும் மகாகவி பாரதிக்கும், எழுத்தாளுமை புதுமைப்பித்தனுக்கும் இதே நிலைமை ஏற்பட்டிருந்தாலும், ஜென்னி மார்க்ஸ் பட்ட பாடு படிக்கும் போதெல்லாம் விழிகளில் நீர் கசியாமல் இருக்க முடியாது.

” எங்கள் ஒரு நாள் குடும்ப வாழ்க்கை” என்ற தலைப்பில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடாக வந்திருக்கின்ற இந்த சிறு நூல் மார்க்ஸ் என்கின்ற மாபெரும் புரட்சியாளனின் வறுமையும் துயரமும் மிக்க இன்னொரு பக்கத்தை காட்டுகின்ற முக்கிய ஆவணம்.

1850 மே 20 ஆம் தேதி யோசிப் வெய்டமையர் என்பவருக்கு ஜென்னிமார்க்ஸ் எழுதிய எட்டுப்பக்க கடிதம் தான் “எங்கள் ஒரு நாள் குடும்ப வாழ்க்கை”.

அத்தோடு தமிழறிஞர் சாமிநாத சர்மா காரல் மார்க்ஸ் பற்றி மனப்போராட்டம் என்கின்ற ஒரு பதிவு மற்றும் ஜென்னிமார்க்ஸ் எழுதிய வாழ்க்கை குறிப்புகளை கொண்டு தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் நிறைந்த வாழ்க்கை பற்றிய நடைசித்திரம் என்ற கட்டுரையும் இணைக்கப்பட்ட இந்த நூல் அனைவரும் படிக்க வேண்டிய மிக மிக முக்கியமான நூல்.

ஜென்னி அந்த கடிதத்தில் தன் கணவரை பற்றி குறிப்பிடும் போது ” எங்கள் நிலை குறித்து பொதுமக்களுக்கு என்றுமே தகவல் கொடுக்கப்பட்டதில்லை. என் கணவர் இத்தகைய விஷயங்களில் மிகவும் மான உணர்ச்சி உள்ளவர். கடைசியாக ஏதேனும் இருந்தால் அதையும் தியாகம் செய்வாரே தவிர, அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பெரிய மனிதர்களைப் போல ஜனநாயக பிச்சையில் இறங்க மாட்டார்.” என்கிறார்.

மேலும் அவர் அதே கடிதத்தில்

” இங்கு என் கணவர் வாழ்க்கையின் சில்லறை கவலைகள் மிக மிக மோசமான உருவில் வந்து முழ்கடிப்பதன் விளைவாக அதற்கு ஈடு கொடுத்து தினசரி மணிக்கு மணி போராட தமது சக்தி முழுவதையும், தமது அமைதியான தெளிவான நிச்சய கௌரவத்தையும் பயன்படுத்தி நிலை நிற்க வேண்டி இருக்கிறது” என்கிறார்.

‘என்றும் நினைவு கொள். மனிதன் என்பவன் பயனின்றி அழிந்து விடக் கூடாது.” என்கிறார் உலகத்திற்கு பொதுவுடமை தத்துவம் தந்த பேராசான் மார்க்ஸ்.

சகலவிதத்திலும் மற்ற அனைவருக்கும் பயன்படும் ஒரு மாமனிதரின் தனிப்பட்ட வாழ்க்கை எப்படி துயர் மிக்கதாக அமையும் என்பதை உணர்ந்து கொள்ளவும் அதையும் மீறி அவர்கள் எப்படி லட்சியப் பற்றுறுதியில் உறுதியாக நின்றார்கள் என்பதை கற்றுக் கொள்ளவும் இந்த சிறு நூல் வழிவகுக்கிறது.

சில வருடங்களுக்கு முன்பாக எனது ஆசான் எழுத்தாளுமை எஸ்.ராமகிருஷ்ணன் காரல் மார்க்ஸின் வாழ்க்கையைப் பற்றி ஒரு அற்புதமான உரை நிகழ்த்திருப்பார். அது இன்றும் இணையத்தில் காணக் கிடைக்கிறது.

( https://youtu.be/mhqRn7HKpZs?feature=shared )

அந்த உரையோடு, இந்த சிறு நூலை படிக்கும் போது நமது உள்ளம் நெகிழ்வடைந்து, மூடி கிடக்கும் நமது அகக்கதவுகள் திறக்கின்றன. அதுதானே ஒரு புத்தகத்தின் நோக்கம்..??

எங்கள் ஒரு நாள் குடும்ப வாழ்க்கை- ஜென்னி மார்க்ஸ். விலை ரூ.60

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு.