மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

உலகமெங்கும் கேட்கட்டும் சங்கத்தமிழோசை..

கட்டுரைகள்.. /

🌑 “சங்கத் தமிழ் ஓசை” என்ற பெயரில் அழைப்பிதழ் பார்த்தவுடன் உண்மையில் அச்சமாகத்தான் இருந்தது. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நுட்பமான இலக்கண விதிகளுக்கு உட்பட்டு வரையப்பட்ட இலக்கிய பாடல்களான சங்க பாடல்களுக்கு சமகாலத்தில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்துவது என்பது எந்த வகையில் பார்வையாளர்களை ஈர்க்கும் என்கிற கேள்வியும்,சாதாரண வாசகர்களால் வெற்று வாசிப்பின் மூலம் எளிதில் புரிந்து கொள்ள முடியாத சங்க பாடல்களை எப்படிப்பட்ட இசை வடிவத்தில் பொருத்தி கேட்போரை ஈர்க்க செய்யப் போகிறார்கள் என்கிற கேள்வியும் …

 230 total views

பெளத்தம் என்னும் பெருங்கடலிருந்து…

கட்டுரைகள்.. /

சமீபத்தில் அறிவியல் அறிஞரான ஸ்டீபன் ஹாக்கிங் (stephen hawking ) எழுதி அவரது மகள் லூசி தொகுத்த “ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்” (Brief answers to the Big questions )என்கின்ற புத்தகத்தை படிக்கும்போது கடவுள் இருக்கிறாரா என்ற சுவாரசியமான கேள்விக்கு ஸ்டீபன் ஹாக்கிங் அளித்த நேர்மையான பதில் என்னை மிகவும் கவர்ந்தது. கடவுள் பற்றிய அவரது கருத்திற்கு பலரும் கடவுள் மறுப்பு சார்ந்த நாத்திக வண்ணம் பூசுவதை அவர் மென்மையாக மறுக்கிறார். டைம் பத்திரிக்கையில் …

 44 total views

கருப்பு- தமிழினத்தின் நிற அரசியல்

கட்டுரைகள்.. /

நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் வெறும் அரசியல் கட்சியாக மட்டும் இது பயணித்து விடக்கூடாது என்பதில் அண்ணன் சீமான் மிகுந்த கவனமாக இருந்தார். ஒரு இனத்திற்கான விடுதலை என்பது மண் விடுதலை மட்டுமல்ல , சாதிமத பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அற்ற மானுட விடுதலை, தாய்மொழி மீட்சி, இழந்த உரிமைகளை போராடிப் பெறுவது, பல்வேறு ஊடுருவல்களால் சிதைந்துபோன இனத்தின் பண்பாட்டு மீட்டெடுப்பு போன்ற பல தளங்களில் நமக்கு வேலை இருக்கிறது என்று தீவிரமாக எங்களுக்கு அறிவுறுத்திய அவர் …

 50 total views

முதல் மரியாதை.

கட்டுரைகள்.. /

சொல்லுக்குள்தன் மொழியைதன் நிலத்தைதமிழர் வாழ்வைசுருக்கி உட்புதைத்துதைத்த வித்தகனுக்கு.‌..முதல் மரியாதை ❤️ வான்புகழ் கொண்டதனி மொழி தமிழுக்குதன் கறுப்பு மண்ணின்கரும்பு சாறெடுத்து கவிதைஅமுதூட்டியவன். பூங்கதவின் தாழ் திறந்துஅந்தி மழை பொழிகையில்ஆயிரம் தாமரை மொட்டுக்களில்பாயிரத் தமிழ்க் கும்மி அடித்தவன். சின்னச்சின்ன ஆசைகளோடுசிகரங்களை நோக்கிதமிழாற்றுப்படையோடுநடைபோட்டாலும்கள்ளிக்காட்டில் அமர்ந்து கருவாச்சி காவியம் கண்டவன். பழைய பனை ஓலைகளில்இந்தப் பூக்கள் விற்பனைக்கல்லஎன நேற்றுப் போட்ட கோலமாய்கல்வெட்டுகளில் உறைந்திருந்ததமிழுக்கு நிறம் கண்டுவடுகப்பட்டி முதல் வால்கா வரைஎல்லா நதிகளிலும் தமிழ் ஓடங்களை மிதக்க விட்ட திருத்தி எழுதிய தீர்ப்புக்காரன். …

 169 total views

தவிர்க்க கூடாத தவிர்ப்பு..

கட்டுரைகள்.. /

❤️ மனித குணங்களில் வெறுப்பினை போல் விசித்திரமானது ஏதுமில்லை. உண்மையில் வெறுப்பு என்பது கொப்பளித்துக்கொண்டு இருக்கிற நீர்க்குமிழி போன்றது. சில வெறுப்புகளுக்கு காரணங்கள் தேவையில்லை. அப்படி காரணமில்லாமல் ஏதோ ஒன்றை வெறுக்க முடிகிற ஒரு உயிரி இந்த பிரபஞ்சத்தில் உண்டு என்றால் அது மனிதன் மட்டும்தான். சகமனிதனின் வெறுப்பு நெருப்பாய் நமது மீது கொட்டும்போது நாம் தவித்து விடுகிறோம். எதனால் இது நேர்ந்தது என்பது குறித்து சிந்தித்துக் கொண்டே இருக்கிறோம். நம்மை வெறுப்பவர் அனைவரையும் நாமும் வெறுக்க …

 72 total views

ஆசான் எனும் பெருவழி.

கட்டுரைகள்.. /

சூழ வரும் சூழ்நிலைகளால், பிழையாகி போன வாழ்க்கை முறைகளால் அலைக்கழிக்கப்படும் மனித உளவியலை நிலைநிறுத்த மனிதர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் காலம் காலமாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.தியானம் என்றும் தவம் என்றும் அவரவருக்கு ஏற்ற ஒரு வடிவத்தை பயிற்சி செய்து பார்த்து, ஏதோ ஒரு வகையில் மனித மனம் அலைக்கழிப்பு எனும் பேரலையில் இருந்து விடுதலை பெறாதா என மனிதர்கள் ஏங்கிக் கொண்டும் தவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.ஏறக்குறைய மெய்யியல் தேடலுக்கும் இதுதான் அடிப்படை என்றே கருதுகிறேன். தனக்குள்ளாக ஏற்படும் …

 59 total views

புரிய வேண்டிய புரிதல்கள்..

அரசியல், கட்டுரைகள்.. /

வர்ணாசிரமக் கோட்பாட்டை வலியுறுத்தும் வைதீக இந்து மதம் என அழைக்கப்படுகின்ற ஆரிய மதத்திற்கு எதிரான கலகக் குரல் தான் தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்கிற முழக்கம்.இது இக்காலத்திற்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்பட்ட முழக்கம் அல்ல. காலம் காலமாக தமிழர்கள் தாங்கள் இந்துக்கள் அல்ல என்பதை தங்கள் மீது திணிக்கப்பட்ட இந்துத்துவ அடையாளத்திற்கு எதிராக முழங்கி இருக்கிறார்கள். வரலாற்றில் நமக்குக் கிடைக்கக்கூடிய தொன்ம இலக்கிய சான்றுகளான சங்கப்பாடல்கள் தொடங்கி, சித்தர் பாடல்கள் தொடங்கி, வள்ளலார் வழி வைகுண்டர் வழி என …

 64 total views

இளையராஜா – என்றொரு மீட்பர்.

கட்டுரைகள்.., சுயம் /

சட்டென அந்தக் கேள்வியை என் மகன் கேட்டு விட்டான். “உனக்கு ஏன் இளையராஜாவை அவ்வளவு பிடிக்கிறது..?”உண்மையில் அந்தக் கேள்வியை நேர்மையாக எதிர்கொள்ள எனக்கு பயமாக இருந்தது. அதை அப்படியே வார்த்தைகளால் நான் விவரித்தாலும் அவனால் புரிந்துகொள்ள முடியாது.இளையராஜாவை கேட்பது என்பது எனது அந்தரங்க உணர்வு போல, நான் மட்டும் ஆத்மார்த்தமாக உணர்ந்து ரசித்து உள் வாங்குகிற சுய நிகழ்வு. அதை எப்படி இவனுக்கு விவரித்து உணர்த்துவது..?எல்லாவற்றையும் மகனிடம் கொட்டிவிட கொஞ்சம் கூச்சமாகவும் இருந்தது. மழை போல எப்போதும் …

 64 total views

சாதி மறுப்பில் இருந்து அயோத்தி தாசர் வரை.

கட்டுரைகள்.. /

வைதீக இந்து மதம் அல்லது வர்ணாசிரம தர்மம் என்பது நான்கு வர்ணங்கள் ஏறக்குறைய நான்காயிரத்திற்கும் மேற்பட்ட சாதிகள் என கொடூர அடுக்குகளால் நுட்பமாக கட்டப்பட்ட ஒரு அசாதாரணமான கோபுரம். பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் அவருக்கு கீழாக அதி சூத்திரர் என்று அழைக்கக்கூடிய தொட்டால் பார்த்தால் தீட்டு , நிழலைத் தீண்டுவது கூட பாவம் என்ற வகையில் அடக்கி ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்கள் என இந்த வரிசை உச்சி முதல் கீழ் வரையிலான கொடுங்கோன்மையின் விசித்திர அடுக்கு.தீண்டத்தகாதவர்கள் …

 63 total views

விவேக் – சில நினைவுகள்

கட்டுரைகள்.. /

1991 ஆம் வருடம் என நினைக்கிறேன். புகழ்பெற்ற நடிகர் விஜய் அவர்களின் தாயார் ஷோபா சந்திரசேகர் அவர்களது இயக்கத்தில் நண்பர்கள் என்ற ஒரு திரைப்படம் வந்தது. அக்கால கட்டத்தில் கவுண்டமணி-செந்தில் கூட்டணி நகைச்சுவை தளத்தில் உச்சத்தில் இருந்தது. பார்ப்பதற்கு அப்பாவித்தனமான, இயல்பு வாழ்க்கையில் நாம் அடிக்கடி எதிர்கொள்கிற அவசரக் குடுக்கை போன்ற கண்ணாடி போட்ட அந்த இளைஞன் “நண்பர்கள்” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தான். அதற்கு முன் அந்த முகத்தை கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த …

 62 total views