————————-+————————

தமிழக அரசியல் கட்சிகளில் வேறு எதுவும் நினைத்துக்கூட பார்க்க இயலாத மாபெரும் புரட்சிகர காரியம் ஒன்றை நாம் தமிழர் கட்சியின் இளையப் போராளிகள் நிகழ்த்தி வருகிறார்கள்.

உலகத்திலேயே அதிகம் நிலத்தடி நீர் பயன்படுத்துகிற நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவிலேயே அதிகம் நிலத்தடி நீர் பயன்படுத்துகிற மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டின் 85% நிலத்தடி நீர் பயன்படுத்தப்பட்டு விட்டது. 2020க்குள் நிலத்தடி நீர் முற்றும் அழிகிற நிலமாக தமிழ்நாடு மாறி வருகிறது.

இந்நிலையில் இந்தப் பெரும் அபாயத்திலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள நமக்குள்ள ஒரே ஒரு வழி இயற்கையாக அமைந்திருக்கும் நீர்நிலைகளை பராமரித்து வருகிற மழைக்காலத்தில் மீட்டெடுக்கப்பட்டு இருக்கிற நீர்நிலைகளில் நீரை சேகரித்து நமது நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்திக் கொள்வது தான்.

எனவேதான் இந்த மாபெரும் அபாயத்திலிருந்து இந்த மண்ணை காத்திட நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையைச் சேர்ந்த தம்பி தங்கைகள் இன்று வேளச்சேரி ஏரியினை சுத்தம் செய்கிற மாபெரும் புரட்சிகரப் பணியில் இறங்கி இருக்கிறார்கள்.

இதை எந்த ஊடகமும் காட்டப் போவதில்லை ‌.எந்த முற்போக்கு சிந்தனையாளர் வெங்காயமும் பாராட்ட போவதில்லை.

அரசியல் என்றாலே மக்களிடம் ஓட்டு கேட்டு ஆட்சி அதிகாரத்திற்கு வருகின்ற விவகாரம் மட்டுமல்ல. மாறாக இந்த நிலத்தின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து இம் மண்ணை காத்திட மக்களைக் காத்திட தமிழகத்தின் இன உணர்வு மிக்க இளையோர் புறப்பட்டிருக்கிறார்கள் என்பதே புரட்சிகர நடவடிக்கை தான்.

இதில் எந்த திராவிட கட்சியாவது எங்களோடு போட்டி போடுங்களேன்.

சமூகநீதி பல்லாங்குழி விளையாடி, தலைவர்களையும் தத்துவங்களையும் மண்ணாக்கி.. இந்த இனத்தையும் நிலத்தையும் நாசமாக்கிய திராவிடக் கட்சிகளே… இந்தியத்தின் பெயரால் தமிழகத்தை சுரண்டிக் கொழுக்கிற தேசிய கட்சிகளே.. சாதி பெருமிதத்தை ஊட்டி தமிழ்நாட்டை துண்டாடிக்கொண்டிருக்கும் சாதியக் கட்சிகளே..

வாருங்கள்.. இதில் நாம் தமிழர் கட்சியோடு போட்டி போடுங்கள்.

தமிழர்களை குடிநோயாளிகளாக்கிய டாஸ்மாக் பார் எடுக்க, குண்டும் குழியுமாக ஒரு பாதையை உருவாக்க தார் ரோடு காண்ட்ராக்ட் எடுக்க, வரிசையில் நின்ற கருப்பு சிவப்பு, கறுப்பு சிவப்பு வெள்ளை என பல்வேறு கரை வேட்டி கட்டிய பெரியோர்களே..

வாருங்கள்.‌ இதில் எங்களோடு போட்டி போடுங்கள்.

இதற்கு எந்த திராவிட கட்சியும் எதிர்வினையாற்ற மாட்டார்கள். நவ துவாரங்களையும் பொத்திக் கொண்டு அமைதியாக இருப்பார்கள்.

ஆற்று மண்ணையெல்லாம் திருடித் தின்று விட்டு.. இல்லாத மண்ணை பெரியார் மண் என்று பீற்ற வரிசையில் வருவார்கள்.

இதற்கு வரமாட்டார்கள்.

இந்த 50 வருட அயோக்கியத்தனத்தால்
ஒரு தலைமுறை இளைஞர்கள் வீதியில் நிற்கிறார்கள்.

வேளச்சேரி ஏரியை காப்பாற்ற வீதிக்கு வந்து வேர்வையில் நனைந்து.. செயலில் இறங்கி இருக்கிற.. நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்.

மணி செந்தில்.