அப்பாவுக்கு இன்று 75 ஆவது பிறந்தநாள்.எப்போதும் அவருக்கு பிறந்த நாள் என்பது ஒரு சாதாரண நாளாக தான் கடந்து போகும் ‌. இன்றும் அவர் அப்படித்தான் அதை அவர் எடுத்துக்கொண்டார். அவரைப் பொறுத்தவரையில் நாட்களின் நகர்வு ஒன்று மட்டுமே மனிதனின் வாழ்நாள் அல்ல. அந்த நாட்களில் அவன் என்ன சாதித்து இருக்கிறான் என்பதே அவனது வாழ்நாள் என்கிறார்.

அவர் அப்படித்தான். இன்றளவும் தினந்தோறும் மூன்று மணிநேரங்கள் படிப்பதற்காக ஒதுக்குகிறார். நாம் தமிழர் காணொளிகள் அனைத்தையும் விடாமல் பார்த்து விடுகிறார். வாரத்திற்கு ஒரு முறை அண்ணன் சீமானோடு அலைபேசியில் பேசி விடுகிறார். அடுத்து வருகின்ற ஆன்றோர் அவைய கூட்டத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்.

வீட்டிற்கு வந்திருக்கும் இடும்பாவனம் கார்த்தியோடு சமகால அரசியல் குறித்து ஆர்வத்துடன் விசாரிக்கிறார்.ஒரு காலத்தில் முரசொலி படிக்காமல் அவருக்கு ஒருநாள் முடியாது. வீட்டில் கருணாநிதி என அழைக்கக் கூடாது கலைஞர் என்றுதான் அழைக்க வேண்டும் என வாதிட்டவர். எங்கெங்கெல்லாம் கருப்பு சிவப்பு கொடி பறக்கிறதோ அதுவெல்லாம் தன் ஊராக நினைத்தவர், 2009 இன அழிவிற்கு பிறகு தன்னை வெகுவாக மாற்றிக் கொண்டு விட்டார்.

இன்று இடும்பாவனம் கார்த்தியிடம் புதியதோர் தேசம் இதழை புத்தக வடிவில் கொண்டுவர முடியுமா எனக் கேட்கிறார். அண்ணன் சீமான் மீது அளவற்ற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது. உறுதியாக அவர் வெல்வார் என நம்புகிறார். நான் படிப்பது, இனத்திற்காக நிற்பது, மொழியை நேசித்து எழுதுவது எல்லாமுமே அவரை பார்த்து நகல் எடுத்தது தான். புத்தகங்கள் சூழ்ந்த ஒரு வாழ்க்கையை எனக்கு அளித்து நோயில் இருந்தும், தனிமையில் இருந்தும் என்னை விடுவித்தவர்.

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது போகிற போக்கில் நம் முன்னோர்கள் உதிர்த்து விட்டுப் போன வார்த்தை அல்ல என்பதை பலமுறை எனக்கு உணர்த்தியவர்.அவருக்கு அருகில் நான் மிகப் பாதுகாப்பாக உணர்ந்திருக்கிறேன். உணருகிறேன். அவர் எனக்கு அளித்த அனைத்து நல்லவைகளுக்காகவும, நல்லவை களைத் தவிர வேறு எதுவும் எனக்கு அளிக்காத இந்த வாழ்விற்காகவும் அவருக்கு நெகிழ்வோடு நன்றி சொல்கிறேன்.

இன்றைய நாளில் அவருக்காக வந்திருந்து மகிழ்ந்த , சென்னை தவிர்த்து அப்பாவிற்காக என்னுடன் இருந்த என் தம்பி இடும்பாவனம் கார்த்திக் , குடும்பத்தோடு வந்து இருந்து நேசித்து மகிழ்ந்த என் உடன்பிறந்தவர்கள் வழக்கறிஞர் மோ.ஆனந்த் , பிரகாஷ் , அடுத்த வருடம் இந்நாளில் இருவராக மாற இருக்கும் என் தம்பி Lingadurai K , எனது அலுவலக இளையோர் வீர பிரபாகரன், பிரகாஷ் , தங்கை லட்சுமி , என் தங்கை மீனா உள்ளிட்ட அனைவருக்கும் எனது பேரன்பு.

இனிய அகவை தின வாழ்த்துக்கள் அப்பா.

363பிரகாஷ், இரா. கார்த்தி நிமலன் and 361 others104 comments5 sharesLikeCommentShare

10