பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Author: மணி செந்தில் Page 47 of 53

கண்களை குருடாக்கும் தேர்தல் வெளிச்சம்…

மறக்கவே இயலாத துரோகத்தை தேர்தலுக்காகவும், பதவிகளுக்காகவும் செய்ய துணிந்து விட்டன நமது அரசியல் கட்சிகள்..தாவித் தாவி ஆள் பிடிக்கும் கூடாரங்களாய் திமுகவும், அதிமுகவும் களத்தில் நின்றுக் கொண்டிருக்கின்றன..அனைவரும் கூட்டணி பாகுபாடு இன்றி ஒரு விஷயத்தில் ஒருமித்து இருக்கிறார்கள்…அது ஈழத் தமிழர்களின் அவலங்களை கண்டு பொறுக்க இயலாமல் போராடும் தாயகத் தமிழனின் மனநிலையை கூர் மழுங்கச் செய்வது..

இனம்,மொழி, உணர்வு என்பதெல்லாம் இவர்களைப் பொறுத்தவரை தேர்தல் முடியும் வரை உள்ளே அணிந்திருக்கும் உள்ளாடைப் போல…அணிந்திருப்பது கூட வெளியே தெரியாது அல்லது தெரிந்து விடக்கூடாது அல்லது தெரிந்தாலும் கூட வரும் கூட்டாளிக்கு உறுத்தக் கூடாது…தேர்தல் முடிந்த பிறகு உள்ளே போட்டிருக்கும் ஜட்டியை வெளியே அணிந்து கொண்டால் போயிற்று..சூப்பர் மேன் ஆகி விடலாம்..

பரவசமான, உற்சாக பானங்கள், பிரியாணி பொட்டலங்கள், ரொக்கங்கள்., துணி மணி , அன்பளிப்பு வகையறாக்கள் என அடுத்த திருவிழாவினை பார்க்க தமிழ்நாடு தயாராகிக் கொண்டிருக்கிறது.. ஈழத்தமிழினம் அழிவது இவர்களுக்கு ஒட்டு எண்ணிக்கைக்கு அப்பால் தான் இனி உறுத்தும்..இன அழிப்பு வேலையை திட்டமிட்டு நடத்தி வருகின்ற காங்கிரஸிற்காக கலைஞர் உருகுவதும், குலாமோடு குதுகலிப்பதுமாக ஆளும் கட்சிகள் ஆடம்பரமாய் தயாராகி விட்டன.. விடுதலை சிறுத்தைகளுக்கு போயஸ் கார்டன் தோட்டக் கதவுகளை விட கோபாலபுரத்து கதவுகள் உயரம் குறைவு போல தோன்றுகிறது. இங்கே புரட்சி புயலும், இடது சாரிகளும் ராணுவ நடவடிக்கை என்றால் அப்பாவித் தமிழர்கள் சாகத்தான் செய்வார்கள் என்று ராஜபக்சே நாமாவளி பாடிய போயஸ் தோட்டத்தில் ஜெ மந்திர உச்சாடனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.மாம்பழத்திற்கு எங்கு விலை உயர்வோ அங்கு விற்கப்படும்.
பார்த்துக் கொள்ளுங்கள் தோழர்களே..இவர்கள் தான் நமது தலைவர்கள்.ஈழம் என்று தங்கள் அமைப்பின் பெயரில் கூட வந்து விடக்கூடாது என்ற கவனமாக இருக்கும் நல்லவர்கள்..யாருக்கு யார் மோசம்…யாருக்கு உண்மையிலேயே தமிழன் மீது பாசம் ..என இனி தேர்தல் மேடைகளில் சூடு பறக்கும்..அதிலும் ஒரு பிரச்சனை இருக்கிறது நம் தலைவர்களுக்கு…ஈழத்தைப் பற்றி பேசப் படும் மேடைகளில் காங்கிரஸோ, ஜெயலலிதாவோ இருக்கக் கூடாது.. இருந்தால் ஈழம் பற்றி ஈ கூட பேசாது…
அரசியல் நிலைப்பாடுகளை எல்லாம் தாண்டி ஈழத் தமிழனின் அவலமும் ,துயரமும் இவர்களை எட்டவே போவதில்லை…தமிழுணர்வாளர்கள் யாரும் காங்கிரஸிக்கு ஒட்டுப்போடப் போவதில்லை..சரி ..அந்த வாக்கினை யாருக்குத்தான் போடுவது…கலைஞர் மீதான வெறுப்பு ஜெயலலிதாவிற்கு சாதகமாக முடிகிறது…காங்கிரஸின் மீதான வெறுப்பு மதவாத பிஜேபிக்கு ஆதரவாக முடிகிறது..மிஞ்சி இருப்பது யாருமில்லையே.. தேர்தல் திருவிழாவில் காணாமல் போன குழந்தையாய் ஈழத் தமிழின ஆதரவு கலங்கி நிற்கிறது..
ஈழத் தமிழின அவலங்கள் குறித்தான மதிப்பீடுகளை மட்டுமே வைத்துக் கொண்டு இந்த தேர்தலை அணுகலாமா என்ற கேள்வியை என் தோழர் கேட்கிறார். சரி …சாகும் அந்த மக்களை சவக்குழியில் தள்ளி விட்டு விட்டு இந்த தேர்தலை நாம் அணுகலாமா..?- இனம் அழிகையில், நம் தொன்ம அடையாளங்கள் தொலைகையில் மிஞ்சி இருப்பது யாராக இருக்க முடியும் தோழர்களே…நன்கு சிந்தித்துப் பாருங்கள்…வேதனையும்,சுய கழிவிரக்கமாய் போனது தமிழனுடைய நிலை.
கத்தி..கதறி..போர்க்குரலாய் முழங்கிய கலைப் போராளி அண்ணன் சீமான் இன்று கம்பிகளுக்கு பின்னால்… தன்னை தானே எரித்துக் கொண்டு தமிழனாய் நிரூபித்துக் கொண்டவர்களின் தணல் கூட இன்னும் தகிக்கும் வெப்பமாய் நம் முன்னால்… இருந்தும் கூட நம்மால் நகரக் கூட முடியவில்லையே.. தெரு..தெருவாக கத்தியாயிற்று…உண்ணாவிரதம்…ஆர்ப்பார்ட்டம்,பூட்டு போடுதல் என அனைத்தையும் செய்தாகி விட்டது..மனித சங்கிலி முதல் இதய சங்கிலி வரை இழுத்து பார்த்தாகி விட்டது… ஈழத் தமிழர்களின் துயரமும், அவலமும் தீர்ந்த பாடில்லையே. காரணம் என்ன…அரசியல் கட்சிகள் என்ற பெயரில் வியாபாரக் குழுக்களும், தொழிலதிபர்களும் உருவானதுதான்…
தன்னலமற்று போராடி வந்த மாணவர்களை கல்லூரியை மூடி அவர்கள் உணர்வினை மூடியாகி விட்டது..மிஞ்சி நின்ற வழக்கறிஞர்களை காவல் துறை அடியாட்களை வைத்து அடித்து துவைத்தாகி விட்டது. இனி வழக்கறிஞர்கள் முதலில் தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியாகி விட்டாயிற்று.. என்ன ஒரு சாணக்கியத்தனம்…ஆடம்பரமான அரங்கில் தேர்ந்த நடிகர்களோடு நடந்த உருக்கமான மருத்துவமனை காட்சி போல…
இனி என்ன செய்வது என்ற கையறு நிலையோடு நாம் குழம்ப வேண்டாம் தோழர்களே..
நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான்..
அது இன எதிரி காங்கிரஸினை தோற்கப்படிப்பது…
அதற்கு நம் வாக்குச் சீட்டுகளை அம்புகளாக எய்வோம்.. அப்போதுதான் மிஞ்சி இருக்கும் பிழைப்புவாதிகளுக்கு பிழைப்பிற்காகவேனும் தமிழின உணர்வோடு நடித்தாக வேண்டிய பயம் பிறக்கும்….காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் காங்கிரஸிக்கு எதிராக நிற்பவர்களுக்கும் ,மிஞ்சிய தொகுதிகளில் உணர்வு எஞ்சியவர்களுக்குமாக நமது வாக்கினை பயன்படுத்துவோம்.
இதுதான் முடிவாக தெரிகிறது எனக்கு.இது முடிவு என்பதை விட ஒரு துவக்கமாக கொள்ளலாம் இப்போதைக்கு…

கண்களை குருடாக்கும் தேர்தல் வெளிச்சம்…

மறக்கவே இயலாத துரோகத்தை தேர்தலுக்காகவும், பதவிகளுக்காகவும் செய்ய துணிந்து விட்டன நமது அரசியல் கட்சிகள்..தாவித் தாவி ஆள் பிடிக்கும் கூடாரங்களாய் திமுகவும், அதிமுகவும் களத்தில் நின்றுக் கொண்டிருக்கின்றன..அனைவரும் கூட்டணி பாகுபாடு இன்றி ஒரு விஷயத்தில் ஒருமித்து இருக்கிறார்கள்…அது ஈழத் தமிழர்களின் அவலங்களை கண்டு பொறுக்க இயலாமல் போராடும் தாயகத் தமிழனின் மனநிலையை கூர் மழுங்கச் செய்வது..

இனம்,மொழி, உணர்வு என்பதெல்லாம் இவர்களைப் பொறுத்தவரை தேர்தல் முடியும் வரை உள்ளே அணிந்திருக்கும் உள்ளாடைப் போல…அணிந்திருப்பது கூட வெளியே தெரியாது அல்லது தெரிந்து விடக்கூடாது அல்லது தெரிந்தாலும் கூட வரும் கூட்டாளிக்கு உறுத்தக் கூடாது…தேர்தல் முடிந்த பிறகு உள்ளே போட்டிருக்கும் ஜட்டியை வெளியே அணிந்து கொண்டால் போயிற்று..சூப்பர் மேன் ஆகி விடலாம்..

பரவசமான, உற்சாக பானங்கள், பிரியாணி பொட்டலங்கள், ரொக்கங்கள்., துணி மணி , அன்பளிப்பு வகையறாக்கள் என அடுத்த திருவிழாவினை பார்க்க தமிழ்நாடு தயாராகிக் கொண்டிருக்கிறது.. ஈழத்தமிழினம் அழிவது இவர்களுக்கு ஒட்டு எண்ணிக்கைக்கு அப்பால் தான் இனி உறுத்தும்..இன அழிப்பு வேலையை திட்டமிட்டு நடத்தி வருகின்ற காங்கிரஸிற்காக கலைஞர் உருகுவதும், குலாமோடு குதுகலிப்பதுமாக ஆளும் கட்சிகள் ஆடம்பரமாய் தயாராகி விட்டன.. விடுதலை சிறுத்தைகளுக்கு போயஸ் கார்டன் தோட்டக் கதவுகளை விட கோபாலபுரத்து கதவுகள் உயரம் குறைவு போல தோன்றுகிறது. இங்கே புரட்சி புயலும், இடது சாரிகளும் ராணுவ நடவடிக்கை என்றால் அப்பாவித் தமிழர்கள் சாகத்தான் செய்வார்கள் என்று ராஜபக்சே நாமாவளி பாடிய போயஸ் தோட்டத்தில் ஜெ மந்திர உச்சாடனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.மாம்பழத்திற்கு எங்கு விலை உயர்வோ அங்கு விற்கப்படும்.
பார்த்துக் கொள்ளுங்கள் தோழர்களே..இவர்கள் தான் நமது தலைவர்கள்.ஈழம் என்று தங்கள் அமைப்பின் பெயரில் கூட வந்து விடக்கூடாது என்ற கவனமாக இருக்கும் நல்லவர்கள்..யாருக்கு யார் மோசம்…யாருக்கு உண்மையிலேயே தமிழன் மீது பாசம் ..என இனி தேர்தல் மேடைகளில் சூடு பறக்கும்..அதிலும் ஒரு பிரச்சனை இருக்கிறது நம் தலைவர்களுக்கு…ஈழத்தைப் பற்றி பேசப் படும் மேடைகளில் காங்கிரஸோ, ஜெயலலிதாவோ இருக்கக் கூடாது.. இருந்தால் ஈழம் பற்றி ஈ கூட பேசாது…
அரசியல் நிலைப்பாடுகளை எல்லாம் தாண்டி ஈழத் தமிழனின் அவலமும் ,துயரமும் இவர்களை எட்டவே போவதில்லை…தமிழுணர்வாளர்கள் யாரும் காங்கிரஸிக்கு ஒட்டுப்போடப் போவதில்லை..சரி ..அந்த வாக்கினை யாருக்குத்தான் போடுவது…கலைஞர் மீதான வெறுப்பு ஜெயலலிதாவிற்கு சாதகமாக முடிகிறது…காங்கிரஸின் மீதான வெறுப்பு மதவாத பிஜேபிக்கு ஆதரவாக முடிகிறது..மிஞ்சி இருப்பது யாருமில்லையே.. தேர்தல் திருவிழாவில் காணாமல் போன குழந்தையாய் ஈழத் தமிழின ஆதரவு கலங்கி நிற்கிறது..
ஈழத் தமிழின அவலங்கள் குறித்தான மதிப்பீடுகளை மட்டுமே வைத்துக் கொண்டு இந்த தேர்தலை அணுகலாமா என்ற கேள்வியை என் தோழர் கேட்கிறார். சரி …சாகும் அந்த மக்களை சவக்குழியில் தள்ளி விட்டு விட்டு இந்த தேர்தலை நாம் அணுகலாமா..?- இனம் அழிகையில், நம் தொன்ம அடையாளங்கள் தொலைகையில் மிஞ்சி இருப்பது யாராக இருக்க முடியும் தோழர்களே…நன்கு சிந்தித்துப் பாருங்கள்…வேதனையும்,சுய கழிவிரக்கமாய் போனது தமிழனுடைய நிலை.
கத்தி..கதறி..போர்க்குரலாய் முழங்கிய கலைப் போராளி அண்ணன் சீமான் இன்று கம்பிகளுக்கு பின்னால்… தன்னை தானே எரித்துக் கொண்டு தமிழனாய் நிரூபித்துக் கொண்டவர்களின் தணல் கூட இன்னும் தகிக்கும் வெப்பமாய் நம் முன்னால்… இருந்தும் கூட நம்மால் நகரக் கூட முடியவில்லையே.. தெரு..தெருவாக கத்தியாயிற்று…உண்ணாவிரதம்…ஆர்ப்பார்ட்டம்,பூட்டு போடுதல் என அனைத்தையும் செய்தாகி விட்டது..மனித சங்கிலி முதல் இதய சங்கிலி வரை இழுத்து பார்த்தாகி விட்டது… ஈழத் தமிழர்களின் துயரமும், அவலமும் தீர்ந்த பாடில்லையே. காரணம் என்ன…அரசியல் கட்சிகள் என்ற பெயரில் வியாபாரக் குழுக்களும், தொழிலதிபர்களும் உருவானதுதான்…
தன்னலமற்று போராடி வந்த மாணவர்களை கல்லூரியை மூடி அவர்கள் உணர்வினை மூடியாகி விட்டது..மிஞ்சி நின்ற வழக்கறிஞர்களை காவல் துறை அடியாட்களை வைத்து அடித்து துவைத்தாகி விட்டது. இனி வழக்கறிஞர்கள் முதலில் தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியாகி விட்டாயிற்று.. என்ன ஒரு சாணக்கியத்தனம்…ஆடம்பரமான அரங்கில் தேர்ந்த நடிகர்களோடு நடந்த உருக்கமான மருத்துவமனை காட்சி போல…
இனி என்ன செய்வது என்ற கையறு நிலையோடு நாம் குழம்ப வேண்டாம் தோழர்களே..
நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான்..
அது இன எதிரி காங்கிரஸினை தோற்கப்படிப்பது…
அதற்கு நம் வாக்குச் சீட்டுகளை அம்புகளாக எய்வோம்.. அப்போதுதான் மிஞ்சி இருக்கும் பிழைப்புவாதிகளுக்கு பிழைப்பிற்காகவேனும் தமிழின உணர்வோடு நடித்தாக வேண்டிய பயம் பிறக்கும்….காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் காங்கிரஸிக்கு எதிராக நிற்பவர்களுக்கும் ,மிஞ்சிய தொகுதிகளில் உணர்வு எஞ்சியவர்களுக்குமாக நமது வாக்கினை பயன்படுத்துவோம்.
இதுதான் முடிவாக தெரிகிறது எனக்கு.இது முடிவு என்பதை விட ஒரு துவக்கமாக கொள்ளலாம் இப்போதைக்கு…

நாம் என்ன செய்ய போகிறோம்…?


அருமை சகோதரன் முத்துக்குமாரின் தியாகமும்…அர்த்தம் மிகுந்த அவரது மரணமும் ………மரண வாக்குமூலமும்.. நம்மை கண்ணீரில் ஆழ்த்துகிறது.

உணர்வுள்ள தமிழனாய் பிறந்த காரணத்தினால் தன்னை தானே மாய்த்துக் கொள்ளும் நெஞ்சுரம் கொண்டு வீர மரணம் எய்திருக்கிறார் முத்துக்குமார்..
உயிரோடு இருக்கும் நமக்கெல்லாம் அவரது மரண வாக்குமூலம் மூலம் பல செய்திகளை அறிவித்து விட்டு சென்றுள்ளார்.

நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதில் தான் இருக்கிறது அவரது தியாகத்திற்கான மதிப்பு…கேடு கெட்ட அரசியல் பிழைப்பு வாதிகளை நம்பி பயனில்லை தோழர்களே….

முத்துக்குமாரின் உடலில் பற்றிய நெருப்பு நம் ஆன்மாவை சுட்டு பொசுக்கட்டும்…..

இனியாவது நடைப் பிணங்களாக ,சோற்று துருத்திகளாக, வாழாமல்..உணர்வுள்ள உயிராய் வாழ்வோம்..

ஒரு உண்மையான உணர்வாளனாய், உலக ஞானம் பெற்ற மேதையாய்…தியாகம் செய்ய தயங்காத மனிதனாய், நம் கண் முன்னால் வாழ்ந்து 26 வயதிற்குள் இனத்திற்காக இன்னுயிர் அளித்தும் சென்றுள்ளான் அந்த இனமான வீரன்…

நாம் என்ன செய்ய போகிறோம்…?

நாம் என்ன செய்ய போகிறோம்…?


அருமை சகோதரன் முத்துக்குமாரின் தியாகமும்…அர்த்தம் மிகுந்த அவரது மரணமும் ………மரண வாக்குமூலமும்.. நம்மை கண்ணீரில் ஆழ்த்துகிறது.

உணர்வுள்ள தமிழனாய் பிறந்த காரணத்தினால் தன்னை தானே மாய்த்துக் கொள்ளும் நெஞ்சுரம் கொண்டு வீர மரணம் எய்திருக்கிறார் முத்துக்குமார்..
உயிரோடு இருக்கும் நமக்கெல்லாம் அவரது மரண வாக்குமூலம் மூலம் பல செய்திகளை அறிவித்து விட்டு சென்றுள்ளார்.

நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதில் தான் இருக்கிறது அவரது தியாகத்திற்கான மதிப்பு…கேடு கெட்ட அரசியல் பிழைப்பு வாதிகளை நம்பி பயனில்லை தோழர்களே….

முத்துக்குமாரின் உடலில் பற்றிய நெருப்பு நம் ஆன்மாவை சுட்டு பொசுக்கட்டும்…..

இனியாவது நடைப் பிணங்களாக ,சோற்று துருத்திகளாக, வாழாமல்..உணர்வுள்ள உயிராய் வாழ்வோம்..

ஒரு உண்மையான உணர்வாளனாய், உலக ஞானம் பெற்ற மேதையாய்…தியாகம் செய்ய தயங்காத மனிதனாய், நம் கண் முன்னால் வாழ்ந்து 26 வயதிற்குள் இனத்திற்காக இன்னுயிர் அளித்தும் சென்றுள்ளான் அந்த இனமான வீரன்…

நாம் என்ன செய்ய போகிறோம்…?

அய்யகோ……

அய்யகோ….

தமிழக அரசு இந்த சொல்லை வைத்துக் கொண்டுதான் அல்லலுறும் ஈழத்தமிழர்களுக்காக மீண்டும் வரலாறு காணாத அளவிற்கு வறட்சித் தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறது..

இந்த தீர்மானத்திற்கு இருக்கும் அரசியல் காரணங்கள் அற்பமானவை. இப்போது தமிழகத்தில் கொழுந்து விட்டு எரியும் ஈழ ஆதரவு தீயை அணைப்பதற்காக அல்லது வலு இழக்க செய்வதற்கான குளிர் நீராய் ,காங்கிரஸ் மீதான காதலுக்காக கலைஞர் தாக்கல் செய்துள்ளார். அய்யகோ என்ற சொல்லே ..உண்மையான துயரத்தை செயற்கை மிகுந்ததாக மாற்றும் நாடகப் பாணியிலான சொல்லாகத்தான் நம்மால் பார்க்க இயலுகிறது. கலைஞர் சட்டமன்றத்தில் கொண்டு வந்திருக்கும் அந்த தீர்மானத்தில் வழக்கத்திற்கு மாறான…காங்கிரஸின் கட்டுப்பாட்டினை தாண்டிய வாக்கியங்கள் எதுவுமே இல்லை. இறுதி வேண்டுகோளில் எந்த தேதி இறுதி என குறிப்பிடவே இல்லை. இறுதி என்றால் யாருக்கு இறுதி ? எதற்கு இறுதி?

மேலும் கலைஞர் இறுதி வேண்டுகோள் விடுத்திருக்கும் மத்திய அரசில் திமுக அமைச்சர்களும் தான் இடம் பெற்றுள்ளனர். எனவே டி. ஆர்.பாலு,ராசா உள்ளிட்டவர்கள் இடம் பெற்றிருக்கும் ஒரு அவையை நோக்கிதான் கலைஞர் இன்று இறுதி வேண்டுகோள் வைத்துள்ளார் என்பது நமக்கு தெரிகிறது. கலைஞர் வேண்டுகோள் விடுக்க வைக்கிற, கலைஞரை கதற வைக்கிற ஒரு அமைச்சரவையில் தான் திமுக அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். கலைஞரை இந்த அளவிற்கு அய்யகோ என்று கண்ணீர் மல்க இரங்க செய்யும் மத்திய அமைச்சரவையில் திமுகவும் இடம் பெற்றுள்ளதுதான் நமக்கு நெருடுகிறது. உண்மையில்..உள்ளுக்குள் ..நிகழும் அரசியல் தான் என்ன..? அது என்னவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும்…ஒட்டு மொத்த ஈழத் தமிழினத்தை அழிப்பதற்காக நிகழ்கிறதே இந்த பாழாய் போன அரசியல் என்பதுதான் நமக்கு வேதனையை அளிக்கிறது.

மத்திய அரசை நோக்கி தீர்மானங்களாக அனுப்பி கொண்டிருக்கும் கலைஞரை மதிக்காத….விரும்பாத மத்திய அரசில் திமுக இன்னும் இடம் பெற்று விளங்குவது எதன் பொருட்டு…அப்படியென்றால் அய்யகோ தீர்மானங்கள் யாரை நோக்கி…

தமிழர்களின் பாதுகாப்பிற்காக அனுப்பப் பட்ட சிவசங்கரமேனனை இதுவரை அங்கு நடந்த பேச்சுக்கள் குறித்து தமிழக முதல்வரிடம் விவரிக்க அனுப்ப மறுக்கிறது.. இது வரை எப்போதுமில்லாத அளவிற்கு இலங்கையோடு இணக்கமாக உறவு இருக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக அறிவிக்கிறார் இலங்கை தூதர்.. இதே மலையாளிகளை கொன்று குவித்தால் மேனன் வாயில் இருந்து இப்படிப்பட்ட கும்மாள வார்த்தைகள் வருமா…?

அரசியல் சதுரங்கத்தில் தொடர்ந்து வெட்டப் படும் சேனையாக தமிழனம் ஆகி வருவது குறித்து தமிழக அரசியல்வாதிகளுக்கு கவலைகள் ஏதுமில்லை. பதவியும் அதன் இருப்புமே அவர்களின் எண்ணமாக இருக்கிறது.

மக்கள் எவ்வழியோ மன்னன் அவ்வழி என்று முதுமொழி ஒன்று உள்ளது. தமிழக மக்கள் தனது ஊர்களில் இடைத்தேர்தல் நடக்க வேண்டும் என்று திருமங்கல ஆசையில் வாழ கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். அதனால் ஒட்டு மொத்த தமிழகத்திற்கும் ஒரு விலை நிர்ணயித்து ஏலம் போட முடிவு செய்து விட்டனர் நம் தலைவர்கள். ஏலத்தொகை தேர்தலுக்கு தேர்தல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழக மக்கள் விழித்துக் கொள்வதும், இன உணர்வு கொள்வதும் தான் தற்போதைய ஈழ யுத்தக் களத்திற்கு நிகரான சவால்களாக நமக்கு தோன்றுகிறது..இப்போது எழுந்திருக்கும் மாணவர் போராட்டங்கள், வழக்கறிஞர்கள் போராட்டங்கள் ஆகியவை இன்னும் பல தளங்களுக்கு பரவ வேண்டியதும் காலத்தின் அவசிய அவசரத் தேவையாக இருக்கிறது..

இந்நிலையில் கலைஞர் மனோகரா காலத்து மதி மயக்கும் பழைய திரைப்பட வசனங்களை தீர்மானங்களாக அனுப்பி கொண்டிருப்பதில் என்ன பயன்..? பயனில்லை என்றால் திமுக பொதுக்குழு வில் விவாதிக்கப்பட்டு நல்ல முடிவு நாசமாக போனப் பின் எடுக்கப் படுமாம்.

தான் பதவி இழந்தால் தனி ஈழம் கிடைக்கும் என்றால் இப்போதே பதவி துறக்க தயார் என்கிறார் கலைஞர். தலைவா ..நம்மால் நாற்பதில் ஒன்றை கூட இழக்க முடியாத மனநிலை இருக்கிறது. இதில் முதல்வர் பதவியை இழப்பேன் என அறிவிப்பது யாரை ஏய்க்க..

தமிழ்ப் பெரும் இனமே..தந்தை பெரியாரால் இன்று இணையம் அளவிற்கு வளர்ந்து ,தமிழணர்வோடு விளங்கும் இணையத் தமிழர்களே…உலகமெலாம் பரவிக் கிடக்கின்ற தமிழினமே… நாம் ஒன்று பட்டு , அரசியல்வாதிகளை ஒதுக்கி வைத்து விட்டு தீவிரமாக பணிப்புரிய வேண்டிய சூழல் வந்து விட்டது. உங்கள் பகுதிகளில் இருக்கும் தமிழ் உணர்வாளர்களோடு இணைந்து ,தமிழின விரோதிகளை உணர்ந்து, அவர்களை ஒதுக்கி வைத்து விட்டு மக்களை திரட்ட வேண்டிய மகத்தான பணி நமக்கு முன் இருக்கிறது.. எங்கெங்கு தமிழர் நலம் கெடின் – அங்கெங்கு தலையிட்டு கிளர்ச்சி செய்வோம்..

நாம் போராடினால் சிங்களக்காரன் போரை நிறுத்தி விடுவானா..? என்ற கேள்வியை நம்மிடையே வாழும் ஞாநிகள் கேட்கிறார்கள்.. சரி ..போராட வேண்டாம்..வீட்டிலேயே சோற்று துருத்திகளாக, நடமாடும் சுமைகளாக, ஊதிய பிஸ்கட் கவ்வும் ஏவல் நாய்களாக ,இன உணர்வில்லாத இனப்பெருக்க பன்றிகளாக வாழ்வதில் யாரும் தடை விதிக்க போவதில்லை. உன் சகோதர-சகோதரிக்கு கூட போராடாத நீ …எதிர்த்து குரல் கொடுக்காமல் மெளனசாமியாக வேடிக்கை பார்க்கும் நீ மனிதனாக தான் பிறந்தோமா என்பதை மறுபரிசீலனை செய்யலாம்.

ஈழம் அழிவதை நாம் பொறுத்துக் கொள்வது நம் இனத்திற்கு நாம் செய்யும் துரோகம். ஈழத் தமிழினம் அழிவதை நாம் எவ்வித சலனமும் இன்றி மெளனமாக வேடிக்கை பார்ப்பது சிங்கள பேரினவாதத்தை விட கொடுமையானது. அதை விட கொடுமையானது இந்த அய்யகோ..போன்ற வசனங்கள்

அய்யகோ……

அய்யகோ….

தமிழக அரசு இந்த சொல்லை வைத்துக் கொண்டுதான் அல்லலுறும் ஈழத்தமிழர்களுக்காக மீண்டும் வரலாறு காணாத அளவிற்கு வறட்சித் தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறது..

இந்த தீர்மானத்திற்கு இருக்கும் அரசியல் காரணங்கள் அற்பமானவை. இப்போது தமிழகத்தில் கொழுந்து விட்டு எரியும் ஈழ ஆதரவு தீயை அணைப்பதற்காக அல்லது வலு இழக்க செய்வதற்கான குளிர் நீராய் ,காங்கிரஸ் மீதான காதலுக்காக கலைஞர் தாக்கல் செய்துள்ளார். அய்யகோ என்ற சொல்லே ..உண்மையான துயரத்தை செயற்கை மிகுந்ததாக மாற்றும் நாடகப் பாணியிலான சொல்லாகத்தான் நம்மால் பார்க்க இயலுகிறது. கலைஞர் சட்டமன்றத்தில் கொண்டு வந்திருக்கும் அந்த தீர்மானத்தில் வழக்கத்திற்கு மாறான…காங்கிரஸின் கட்டுப்பாட்டினை தாண்டிய வாக்கியங்கள் எதுவுமே இல்லை. இறுதி வேண்டுகோளில் எந்த தேதி இறுதி என குறிப்பிடவே இல்லை. இறுதி என்றால் யாருக்கு இறுதி ? எதற்கு இறுதி?

மேலும் கலைஞர் இறுதி வேண்டுகோள் விடுத்திருக்கும் மத்திய அரசில் திமுக அமைச்சர்களும் தான் இடம் பெற்றுள்ளனர். எனவே டி. ஆர்.பாலு,ராசா உள்ளிட்டவர்கள் இடம் பெற்றிருக்கும் ஒரு அவையை நோக்கிதான் கலைஞர் இன்று இறுதி வேண்டுகோள் வைத்துள்ளார் என்பது நமக்கு தெரிகிறது. கலைஞர் வேண்டுகோள் விடுக்க வைக்கிற, கலைஞரை கதற வைக்கிற ஒரு அமைச்சரவையில் தான் திமுக அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். கலைஞரை இந்த அளவிற்கு அய்யகோ என்று கண்ணீர் மல்க இரங்க செய்யும் மத்திய அமைச்சரவையில் திமுகவும் இடம் பெற்றுள்ளதுதான் நமக்கு நெருடுகிறது. உண்மையில்..உள்ளுக்குள் ..நிகழும் அரசியல் தான் என்ன..? அது என்னவாக வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும்…ஒட்டு மொத்த ஈழத் தமிழினத்தை அழிப்பதற்காக நிகழ்கிறதே இந்த பாழாய் போன அரசியல் என்பதுதான் நமக்கு வேதனையை அளிக்கிறது.

மத்திய அரசை நோக்கி தீர்மானங்களாக அனுப்பி கொண்டிருக்கும் கலைஞரை மதிக்காத….விரும்பாத மத்திய அரசில் திமுக இன்னும் இடம் பெற்று விளங்குவது எதன் பொருட்டு…அப்படியென்றால் அய்யகோ தீர்மானங்கள் யாரை நோக்கி…

தமிழர்களின் பாதுகாப்பிற்காக அனுப்பப் பட்ட சிவசங்கரமேனனை இதுவரை அங்கு நடந்த பேச்சுக்கள் குறித்து தமிழக முதல்வரிடம் விவரிக்க அனுப்ப மறுக்கிறது.. இது வரை எப்போதுமில்லாத அளவிற்கு இலங்கையோடு இணக்கமாக உறவு இருக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக அறிவிக்கிறார் இலங்கை தூதர்.. இதே மலையாளிகளை கொன்று குவித்தால் மேனன் வாயில் இருந்து இப்படிப்பட்ட கும்மாள வார்த்தைகள் வருமா…?

அரசியல் சதுரங்கத்தில் தொடர்ந்து வெட்டப் படும் சேனையாக தமிழனம் ஆகி வருவது குறித்து தமிழக அரசியல்வாதிகளுக்கு கவலைகள் ஏதுமில்லை. பதவியும் அதன் இருப்புமே அவர்களின் எண்ணமாக இருக்கிறது.

மக்கள் எவ்வழியோ மன்னன் அவ்வழி என்று முதுமொழி ஒன்று உள்ளது. தமிழக மக்கள் தனது ஊர்களில் இடைத்தேர்தல் நடக்க வேண்டும் என்று திருமங்கல ஆசையில் வாழ கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். அதனால் ஒட்டு மொத்த தமிழகத்திற்கும் ஒரு விலை நிர்ணயித்து ஏலம் போட முடிவு செய்து விட்டனர் நம் தலைவர்கள். ஏலத்தொகை தேர்தலுக்கு தேர்தல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழக மக்கள் விழித்துக் கொள்வதும், இன உணர்வு கொள்வதும் தான் தற்போதைய ஈழ யுத்தக் களத்திற்கு நிகரான சவால்களாக நமக்கு தோன்றுகிறது..இப்போது எழுந்திருக்கும் மாணவர் போராட்டங்கள், வழக்கறிஞர்கள் போராட்டங்கள் ஆகியவை இன்னும் பல தளங்களுக்கு பரவ வேண்டியதும் காலத்தின் அவசிய அவசரத் தேவையாக இருக்கிறது..

இந்நிலையில் கலைஞர் மனோகரா காலத்து மதி மயக்கும் பழைய திரைப்பட வசனங்களை தீர்மானங்களாக அனுப்பி கொண்டிருப்பதில் என்ன பயன்..? பயனில்லை என்றால் திமுக பொதுக்குழு வில் விவாதிக்கப்பட்டு நல்ல முடிவு நாசமாக போனப் பின் எடுக்கப் படுமாம்.

தான் பதவி இழந்தால் தனி ஈழம் கிடைக்கும் என்றால் இப்போதே பதவி துறக்க தயார் என்கிறார் கலைஞர். தலைவா ..நம்மால் நாற்பதில் ஒன்றை கூட இழக்க முடியாத மனநிலை இருக்கிறது. இதில் முதல்வர் பதவியை இழப்பேன் என அறிவிப்பது யாரை ஏய்க்க..

தமிழ்ப் பெரும் இனமே..தந்தை பெரியாரால் இன்று இணையம் அளவிற்கு வளர்ந்து ,தமிழணர்வோடு விளங்கும் இணையத் தமிழர்களே…உலகமெலாம் பரவிக் கிடக்கின்ற தமிழினமே… நாம் ஒன்று பட்டு , அரசியல்வாதிகளை ஒதுக்கி வைத்து விட்டு தீவிரமாக பணிப்புரிய வேண்டிய சூழல் வந்து விட்டது. உங்கள் பகுதிகளில் இருக்கும் தமிழ் உணர்வாளர்களோடு இணைந்து ,தமிழின விரோதிகளை உணர்ந்து, அவர்களை ஒதுக்கி வைத்து விட்டு மக்களை திரட்ட வேண்டிய மகத்தான பணி நமக்கு முன் இருக்கிறது.. எங்கெங்கு தமிழர் நலம் கெடின் – அங்கெங்கு தலையிட்டு கிளர்ச்சி செய்வோம்..

நாம் போராடினால் சிங்களக்காரன் போரை நிறுத்தி விடுவானா..? என்ற கேள்வியை நம்மிடையே வாழும் ஞாநிகள் கேட்கிறார்கள்.. சரி ..போராட வேண்டாம்..வீட்டிலேயே சோற்று துருத்திகளாக, நடமாடும் சுமைகளாக, ஊதிய பிஸ்கட் கவ்வும் ஏவல் நாய்களாக ,இன உணர்வில்லாத இனப்பெருக்க பன்றிகளாக வாழ்வதில் யாரும் தடை விதிக்க போவதில்லை. உன் சகோதர-சகோதரிக்கு கூட போராடாத நீ …எதிர்த்து குரல் கொடுக்காமல் மெளனசாமியாக வேடிக்கை பார்க்கும் நீ மனிதனாக தான் பிறந்தோமா என்பதை மறுபரிசீலனை செய்யலாம்.

ஈழம் அழிவதை நாம் பொறுத்துக் கொள்வது நம் இனத்திற்கு நாம் செய்யும் துரோகம். ஈழத் தமிழினம் அழிவதை நாம் எவ்வித சலனமும் இன்றி மெளனமாக வேடிக்கை பார்ப்பது சிங்கள பேரினவாதத்தை விட கொடுமையானது. அதை விட கொடுமையானது இந்த அய்யகோ..போன்ற வசனங்கள்

திருமாவளவன் விளைவு…..

தொல்.திருமாவளவனின் உண்ணாநிலை அறப்போராட்டத்தால் தமிழகத்தில் கொஞ்சம் மங்கி இருந்த ஈழ ஆதரவு மீண்டும் உணர்வுத் தளத்திற்கு திரும்பி இருக்கிறது.மீண்டும் சமூக அமைப்புகள்,மாணவர் இயக்கங்கள் ஆகியவை போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கின்றன.. பட்டாளி மக்கள் கட்சி இன்று அரசு அலுவலகங்கள் முன்னால் ஆர்பார்ட்டம் நடத்தியது. வரும் 23 ஆம் தேதி போராட்டம் அறிவித்துள்ளது. அனைந்திந்திய மாணவர் பெருமன்றம் உட்பட மாணவர் அமைப்புகள் நாளை கல்லூரி புறக்கணிப்பை அறிவித்துள்ளன.

தாயக தமிழகத்தில் இருந்து எழும் குரல்கள்,நடத்தப் படும் போராட்டங்கள் ஈழச்சகோதரர்களுக்கு மிகப் பெரிய துயரத்திலும் ஆறுதலாக அமையும் என்பதில் அய்யமில்லை. திருமாவாளவனின் உண்ணாவிரத அறப்போர் தனது நோக்கத்தை முழுமையாக எட்டி விட்டதாக சொல்லலாம். திருமாவளவனின் உண்ணாவிரதம் மக்கள் மத்தியில் உணர்வலைகளை அவர் நினைத்தவாறே எழுப்பியது. ஆங்காங்கு நிகழ்ந்த பேருந்து எரிப்புகளை தவிர இந்த போராட்டம் தனது மையப்புள்ளியை நோக்கி நகர்ந்து முடிந்தது.

கலைஞர் அனைத்து கட்சி பிரமுகர்களுடன் டெல்லியில் மன்மோகன் சிங்கினை சந்தித்து தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்த முயன்று தோற்றதில் இருந்து தமிழக மக்கள் உணர்வு ரீதியிலான இந்த பிரச்சனையில் தேங்கி நின்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். கிளிநொச்சி வீழ்ந்தது..ஆணையிறவும் அகன்றது …என்றெல்லாம் தினமலம் உள்ளிட்ட ராஜபக்சே ரசிகர் பட்டாளங்கள் அட்டகாசமாக செய்திகள் வெளியிட நமது மனங்கள் வெம்பி ததும்பின. அந்த நேரத்தில் தான் திருமா தனது ஆயுதத்தை சரியாக பயன்படுத்தினார். மீண்டும் ஆக்ரோஷமாக தமிழகம் தனது உணர்வுகளை வெளிப்படுத்த துவங்கி உள்ளது. உயர்நீதிமன்றம் முதல் கீழமை நீதிமன்றம் வரை வழக்கறிஞர்களும் போராட துவங்கி உள்ளனர். எல்லா நிலைகளிலும் உணர்வலைகள் உசுப்பப் பட்டுள்ளன.

இங்கு போராடி என்ன பயன் என்று சிலருக்கு தோன்றலாம். ஒரு இன அழிப்பை…அதுவும் நாம் பிறந்த இனம் ..நம் கண் முன்னாலேயே சிறுக சிறுக அழிவதை மெளனமாக பார்ப்பது சிங்கள பேரினவாதத்தை விட கொடுமையான ஒன்றாகும். ஆங்காங்கே வெடிக்கும் மக்கள் போராட்டங்களை நம் மத்திய அரசு மட்டும் கவனிக்க வில்லை..உலகச் சமூகமே கவனித்து வருகிறது… தனது தொப்புள் கொடி உறவுகளை பலிக் கொடுக்கும் வேளையிலும் கூட நாம் மவுனித்து, கண் மூடி, கைக் கட்டி நின்றோமானால் எதிர்காலம் நம் மேல் ஏறி நின்று காறித் துப்பாதா…?

தன் சகோதரியின் வயிற்றில் இருக்கும் சிசுவினை கூட கிழித்து எடுத்து தரையில் அடித்து கொன்று உதிரம் குடிப்பதை கூட நம்மால் மவுனமாக பார்க்க முடிகிறது. நம் வீட்டு பெண்களை நம் முன்னால் கதற கதற கற்பழித்து கொல்லும் போது கூட நம்மால் தொலைக்காட்சி இன்பத்தில் காதுகளை பொத்திக் கொள்ள முடிகிறது..கொத்து கொத்தாய் மடியும் நம் வீட்டின் குழந்தைகளின் பிணங்கள் கனவில் வந்தால் கூட நம்மால் அதை ஒதுக்கி வைத்து விட்டு உல்லாசமாக வாழ முடிகிறது. குற்ற உணர்ச்சியால் உறுத்தாத மனதோடு மானாட மயிலாட வில் மனதை பறிக் கொடுக்க முடிகிறது…இதையும் மீறி நம்மை உசுப்ப ஒரு திருமாவளவனின் தியாகம் இங்கே தேவைப்படுகிறது.

வெட்கமாக இல்லையா தோழர்களே..?நிலமிழந்து, வீடிழந்து, வாழ்விழந்து..இறுதியாக உயிரும் இழந்து வருகின்ற ஒரு சமூகத்தை மனித இனமாக கூட கருதாமல் கைக் கட்டி வேடிக்கை பார்ப்பதோடு மட்டுமில்லாமல் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு உலக சமூகம் ஆதரவும் ஆயுதமும் வழங்கி வருவதை நாம் காண்கிறோம்.

அந்த மக்கள் செய்த தவறு தான் என்ன..? தமிழர்களாய் பிறந்ததது தான். வரலாற்றில் யூத இன அழிப்பினை ஹிட்லர் என்ற ஒரு தனி மனிதன் முன்னெடுத்தான் .ஆனால் தமிழின அழிப்பினை உலக சமூகமே முன்னெடுத்து செல்கிறது. அந்த இன அழிப்பு படையின் தளபதியாக நம் மத்திய அரசு செயல்படுகிறது. இந்நேரம் கொல்லப்படுவது மலையாளிகளோ, கன்னடர்களோ ஆக இருந்தால் இந்நேரம் இந்தியா தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தலையீட்டே தீர வேண்டிய சூழல் வந்திருக்கும். ஆனால் அழிவது தமிழினம். கேட்பார் யாருமில்லை. சாதியால், கடவுளால், அரசியலால் பிரிந்துக் கிடக்கும் தமிழர்களை ஒரே உணர்வுத்தளத்தில் இணைப்பது ஈழ ஆதரவு போன்ற முழக்கங்கள் தான்.

ஈழ மக்களையும் அழித்தொழித்து விட்டால் இங்குள்ளவர்களுக்கு தான் தமிழர் என்பதையே எளிதாக மறக்கடித்து விடலாம். ஏற்கனவே சினிமா,சாராய போதையில் சீரழிந்துக் கிடக்கும் இச் சமூகத்தை என்றென்றும் அடிமைச் சமூகமாக ஆக்கி விடலாம் என்ற நோக்கத்தில் தான் காங்கிரஸ் அரசு ராஜபக்சேவிற்கு சேவை செய்து வருகிறது. கூட்டணியில் இருந்தாலும் திருமா இதை சரியாக புரிந்துக் கொண்டுதான் காங்கிரஸை கடுமையாக எதிர்க்க துவங்கினார். மக்களை மீண்டும் இணைக்க, உணர்வினை எழுப்ப திருமாவின் உண்ணாவிரதம் ஒரு உந்துக் கோல் என்றால் அது மிகையில்லை.
ஈழ மக்கள் உயிர் வாழ – இனியாவது ஒன்று சேர்ந்து போராடுவோம் தோழர்களே… நம் சகோதரர்களை காக்க, நம் தாய்மார்களை காக்க, நம் சகோதரிகளை காக்க, நம் குழந்தைகளை காக்க….நம்மையும் காக்க…நாம் போராடுவோம்…..

ஆங்காங்கு இருக்கும் உணர்வாளர்களை இணைத்து , உணர்வினை வெளிப்படுத்தும் போராட்டங்களை நாம் செய்ய வேண்டியதுதான் நமது கடமை.

அந்த வகையில் திருமாவளவன் விளைவு- தற்போதைய அவரசக்கால தேவை.

திருமாவளவன் விளைவு…..

தொல்.திருமாவளவனின் உண்ணாநிலை அறப்போராட்டத்தால் தமிழகத்தில் கொஞ்சம் மங்கி இருந்த ஈழ ஆதரவு மீண்டும் உணர்வுத் தளத்திற்கு திரும்பி இருக்கிறது.மீண்டும் சமூக அமைப்புகள்,மாணவர் இயக்கங்கள் ஆகியவை போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கின்றன.. பட்டாளி மக்கள் கட்சி இன்று அரசு அலுவலகங்கள் முன்னால் ஆர்பார்ட்டம் நடத்தியது. வரும் 23 ஆம் தேதி போராட்டம் அறிவித்துள்ளது. அனைந்திந்திய மாணவர் பெருமன்றம் உட்பட மாணவர் அமைப்புகள் நாளை கல்லூரி புறக்கணிப்பை அறிவித்துள்ளன.

தாயக தமிழகத்தில் இருந்து எழும் குரல்கள்,நடத்தப் படும் போராட்டங்கள் ஈழச்சகோதரர்களுக்கு மிகப் பெரிய துயரத்திலும் ஆறுதலாக அமையும் என்பதில் அய்யமில்லை. திருமாவாளவனின் உண்ணாவிரத அறப்போர் தனது நோக்கத்தை முழுமையாக எட்டி விட்டதாக சொல்லலாம். திருமாவளவனின் உண்ணாவிரதம் மக்கள் மத்தியில் உணர்வலைகளை அவர் நினைத்தவாறே எழுப்பியது. ஆங்காங்கு நிகழ்ந்த பேருந்து எரிப்புகளை தவிர இந்த போராட்டம் தனது மையப்புள்ளியை நோக்கி நகர்ந்து முடிந்தது.

கலைஞர் அனைத்து கட்சி பிரமுகர்களுடன் டெல்லியில் மன்மோகன் சிங்கினை சந்தித்து தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்த முயன்று தோற்றதில் இருந்து தமிழக மக்கள் உணர்வு ரீதியிலான இந்த பிரச்சனையில் தேங்கி நின்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். கிளிநொச்சி வீழ்ந்தது..ஆணையிறவும் அகன்றது …என்றெல்லாம் தினமலம் உள்ளிட்ட ராஜபக்சே ரசிகர் பட்டாளங்கள் அட்டகாசமாக செய்திகள் வெளியிட நமது மனங்கள் வெம்பி ததும்பின. அந்த நேரத்தில் தான் திருமா தனது ஆயுதத்தை சரியாக பயன்படுத்தினார். மீண்டும் ஆக்ரோஷமாக தமிழகம் தனது உணர்வுகளை வெளிப்படுத்த துவங்கி உள்ளது. உயர்நீதிமன்றம் முதல் கீழமை நீதிமன்றம் வரை வழக்கறிஞர்களும் போராட துவங்கி உள்ளனர். எல்லா நிலைகளிலும் உணர்வலைகள் உசுப்பப் பட்டுள்ளன.

இங்கு போராடி என்ன பயன் என்று சிலருக்கு தோன்றலாம். ஒரு இன அழிப்பை…அதுவும் நாம் பிறந்த இனம் ..நம் கண் முன்னாலேயே சிறுக சிறுக அழிவதை மெளனமாக பார்ப்பது சிங்கள பேரினவாதத்தை விட கொடுமையான ஒன்றாகும். ஆங்காங்கே வெடிக்கும் மக்கள் போராட்டங்களை நம் மத்திய அரசு மட்டும் கவனிக்க வில்லை..உலகச் சமூகமே கவனித்து வருகிறது… தனது தொப்புள் கொடி உறவுகளை பலிக் கொடுக்கும் வேளையிலும் கூட நாம் மவுனித்து, கண் மூடி, கைக் கட்டி நின்றோமானால் எதிர்காலம் நம் மேல் ஏறி நின்று காறித் துப்பாதா…?

தன் சகோதரியின் வயிற்றில் இருக்கும் சிசுவினை கூட கிழித்து எடுத்து தரையில் அடித்து கொன்று உதிரம் குடிப்பதை கூட நம்மால் மவுனமாக பார்க்க முடிகிறது. நம் வீட்டு பெண்களை நம் முன்னால் கதற கதற கற்பழித்து கொல்லும் போது கூட நம்மால் தொலைக்காட்சி இன்பத்தில் காதுகளை பொத்திக் கொள்ள முடிகிறது..கொத்து கொத்தாய் மடியும் நம் வீட்டின் குழந்தைகளின் பிணங்கள் கனவில் வந்தால் கூட நம்மால் அதை ஒதுக்கி வைத்து விட்டு உல்லாசமாக வாழ முடிகிறது. குற்ற உணர்ச்சியால் உறுத்தாத மனதோடு மானாட மயிலாட வில் மனதை பறிக் கொடுக்க முடிகிறது…இதையும் மீறி நம்மை உசுப்ப ஒரு திருமாவளவனின் தியாகம் இங்கே தேவைப்படுகிறது.

வெட்கமாக இல்லையா தோழர்களே..?நிலமிழந்து, வீடிழந்து, வாழ்விழந்து..இறுதியாக உயிரும் இழந்து வருகின்ற ஒரு சமூகத்தை மனித இனமாக கூட கருதாமல் கைக் கட்டி வேடிக்கை பார்ப்பதோடு மட்டுமில்லாமல் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு உலக சமூகம் ஆதரவும் ஆயுதமும் வழங்கி வருவதை நாம் காண்கிறோம்.

அந்த மக்கள் செய்த தவறு தான் என்ன..? தமிழர்களாய் பிறந்ததது தான். வரலாற்றில் யூத இன அழிப்பினை ஹிட்லர் என்ற ஒரு தனி மனிதன் முன்னெடுத்தான் .ஆனால் தமிழின அழிப்பினை உலக சமூகமே முன்னெடுத்து செல்கிறது. அந்த இன அழிப்பு படையின் தளபதியாக நம் மத்திய அரசு செயல்படுகிறது. இந்நேரம் கொல்லப்படுவது மலையாளிகளோ, கன்னடர்களோ ஆக இருந்தால் இந்நேரம் இந்தியா தன்னைக் காப்பாற்றிக் கொள்ள தலையீட்டே தீர வேண்டிய சூழல் வந்திருக்கும். ஆனால் அழிவது தமிழினம். கேட்பார் யாருமில்லை. சாதியால், கடவுளால், அரசியலால் பிரிந்துக் கிடக்கும் தமிழர்களை ஒரே உணர்வுத்தளத்தில் இணைப்பது ஈழ ஆதரவு போன்ற முழக்கங்கள் தான்.

ஈழ மக்களையும் அழித்தொழித்து விட்டால் இங்குள்ளவர்களுக்கு தான் தமிழர் என்பதையே எளிதாக மறக்கடித்து விடலாம். ஏற்கனவே சினிமா,சாராய போதையில் சீரழிந்துக் கிடக்கும் இச் சமூகத்தை என்றென்றும் அடிமைச் சமூகமாக ஆக்கி விடலாம் என்ற நோக்கத்தில் தான் காங்கிரஸ் அரசு ராஜபக்சேவிற்கு சேவை செய்து வருகிறது. கூட்டணியில் இருந்தாலும் திருமா இதை சரியாக புரிந்துக் கொண்டுதான் காங்கிரஸை கடுமையாக எதிர்க்க துவங்கினார். மக்களை மீண்டும் இணைக்க, உணர்வினை எழுப்ப திருமாவின் உண்ணாவிரதம் ஒரு உந்துக் கோல் என்றால் அது மிகையில்லை.
ஈழ மக்கள் உயிர் வாழ – இனியாவது ஒன்று சேர்ந்து போராடுவோம் தோழர்களே… நம் சகோதரர்களை காக்க, நம் தாய்மார்களை காக்க, நம் சகோதரிகளை காக்க, நம் குழந்தைகளை காக்க….நம்மையும் காக்க…நாம் போராடுவோம்…..

ஆங்காங்கு இருக்கும் உணர்வாளர்களை இணைத்து , உணர்வினை வெளிப்படுத்தும் போராட்டங்களை நாம் செய்ய வேண்டியதுதான் நமது கடமை.

அந்த வகையில் திருமாவளவன் விளைவு- தற்போதைய அவரசக்கால தேவை.

திருமா- மன உரம் தந்த அறம்…

மிகத் துயரமான சூழலில் அண்ணன் தொல் .திருமாவளவன் அவர்கள் இன்று மூன்றாம் நாள் உண்ணாவிரத அறப்போரை தொடர்ந்துள்ளார். மருத்துவர்கள் அவரது உடல் நலம் மோசமாகி வருவதை சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கின்றனர். வருகின்ற கட்சித் தொண்டர்களுக்காக மேடையில் உரையாற்ற வேண்டிய கட்டாயம் வேறு அவருக்கு.

நேற்றிரவு பேசிய பேரா.சுப.வீ கூட திருமாவை அடிக்கடி பேச வைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் இன்று ஊடகங்களில் வெளிவந்த முதல்வர் கலைஞரின் அறிக்கையும், சற்று முன் வந்த மேனன் சந்திப்பிற்கு பிறகு சிங்கள பேரினவாத அரசின் வெளியுறவு அமைச்சரின் பேட்டியும் கவனிக்க வேண்டியவைகளாக உள்ளன.

முதலாவது கலைஞரின் அறிக்கை. வழக்கம் போல பழமையான புள்ளி விபரங்களும்,சோர்வளிக்க கூடிய செய்திகளையும் தாங்கி வந்திருக்கிறது. எப்போதும் சொல்லும் போராட்டக் குழுக்களுக்கு இடையே நிலவிய பகைமையை பற்றி இப்போது மீண்டும் பாடி இருக்கிறார் கலைஞர். அங்கே நொடிக்கு நொடி உயிர் போய் கொண்டு இருக்கிறது. இங்கே பழைய பல்லவிகள்…விளக்கங்கள்..வில்லங்கங்கள்..

கலைஞர் அவர்களே..

உங்களிடமிருந்து இது போன்ற அறிக்கைகளை ஏராளம் படித்து விட்டோம் நாங்கள். தமிழின தேசியத் தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்கள் உங்களிடம் நிதி உதவி பெற மறுத்ததை மீண்டும் சுட்டிக் காட்டி உள்ளீர்கள்.

சரி ..இந்த அறிக்கைக்கு என்ன நேரடியான பொருள்..?

மேதகு.பிரபாகரன் அவர்கள் மீது தங்களது கோபம் குறைய வில்லை என்று நாங்கள் எடுத்துக் கொள்ளலாமா..? .கோபமும், வருத்தமும் கொள்ள வேண்டிய நேரமா…இது..

குவியல் குவியலாக மக்களை கொன்று குவித்து வரும் சிங்கள பேரினவாத அரசிற்கு எதிராக நாம் ஒன்றுமே செய்யாமல் ,நம் இனப்படுகொலையை ஆதரிக்கும் முகமாய் கள்ள மெளனத்துடன் கைக்கட்டி நிற்கிறோமே… இந்த ஈனச்செயலை புரியும் நம்மீது நம் ஈழச் சகோதரர்கள் வருத்தம் கொள்ள மாட்டார்களா..? பழைய வரலாறு,புள்ளி விபரங்களை பேச வேண்டிய நேரமா இது,…

தமிழினப் போராளியாக ,ஒன்று பட்ட தாயக தமிழகத்தின் ஒருமித்த குரலாய் இன்று சாகும் வரை உண்ணா விரதம் மேற்கொண்டு தன்னை வருத்தி, தனது இயலாமையை ஆற்றாமையை ,அர்ப்பணிப்பு உணர்வினை காட்டிக் கொண்டு நிற்கும் திருமாவின் உடல் நிலை மோசமாகிக் கொண்டுக் கொண்டிருக்கும் இச்சூழலில் இப்படிப்பட்ட அறிக்கைகள் முதல்வரிடமிருந்து தேவைதானா..?

ஒரு வார்த்தை..ஒரே ஒரு வார்த்தை..போரைநிறுத்து என்கிற ஒரு வார்த்தையை உதிர்க்க கூட மனமில்லாமல் தமிழினப் படுகொலையை ஆதரித்து நிற்கும் மத்திய அரசை பேச வைக்கும் மந்திரம் அறியாதவரா நம் முதல்வர்..?

கண்ணுக்கு எட்டிய தொலைவில் நம் தொப்புள் கொடி உறவுகள் உதிர்வதை காண்பதை நம்மால் இன்னும் சகித்து கொண்டு மானாட மயிலாட ஆடிக் கொண்டிக் கொண்டு இருக்கிறோம்..உலகிலேயே இனப்பற்று இல்லாமல் வேரற்று வீழப் போகும் இனம் தமிழினமாக இருப்பது தமிழ் குடியின் மூத்தக் குடி கலைஞருக்கு தெரிய வில்லையா..?

ஒரு கற்பனைக்கு வைத்துக் கொள்வோம். இந்த நேரம் ஜெயலலிதாவின் ஆட்சி நடைப் பெற்றுக் கொண்டு இருந்தால் கலைஞர் வீதியில் இறங்கி போராடி இருப்பாரே…இந்நேரம் முரசொலிக் கடிதங்கள் தமிழுணர்வையும், தன்மானத்தையும் பறை சாற்றி இருக்குமே…?

கலைஞர் அவர்களே…

இந்த பதவி…இந்த நாற்காலி …அனைத்தும் 5 வருடங்களுக்குதான்.. ஆனால் காலங் காலமாய் உங்களுக்காக மனதில் உயர்ந்த இடம் வைத்துக் கொண்டு ..உங்களது ஆறுதலுக்காக காத்திருக்கும் ஈழத் தமிழர்களை சிங்கள இன வெறியன் ராஜபக்சேவின் காலடியில் பலியாக்குவதற்காகவா இந்த அரசியல் விளையாட்டுக்கள்..?

வேதனையும்..கண்ணீரும் மிகுந்து நிற்கிற நம் சகோதரர்களை நட்டாற்றில் முழ்கடித்து விட்டு நம்மால் நிம்மதியாக வாழ முடியுமா..?

மத்திய அரசில் தனக்கு வேண்டிய பதவிகளை கேட்டு வாங்கிக் கொண்ட கலைஞரால் ..இன்று மத்திய அரசை பணிய வைக்க முடியவில்லை..

கலைஞர் அவர்களே…

உங்களைப் பற்றி எழுதிக் குவித்த ஞாநி,சோ,சுப்ரமணிய சுவாமி வகையறாக்களுக்கு எதிராக நாங்கள் தான் போர்க் குரல் எழுப்பினோம்..உங்கள் நாக்கை அறுப்பேன் என்று காவிக் கொடி தூக்கிய சாமியார் சாக்கடைகளுக்கு நாங்கள்தான் எதிர்ப்பை காட்டினோம்.. அந்த நள்ளிரவு கைதின் போது எங்கள் குடும்பத்து மூதாதையை கைது செய்வதாக கருதிக் கொண்டு நாங்கள் தான் போராட்ட களத்தில் நின்றோம்..

அப்போது இந்த ஈவிகேஎஸ்.இளங்கோவனோ..தினமலர் பத்திரிக்கையோ…உங்களுக்கு யாருமில்லை.. இந்த அப்பாவித் தமிழர்களை தவிர…

கிளிநொச்சி வீழ்ந்தது என்று அட்டகாசமாக சிரித்துக் கொண்டு செய்தி வெளியிட்ட ,உங்களை …உங்களது குடும்பத்தினரை ஆபாசமாக வசை பொழியும் தினமலரின் விழாவில் உங்களால் கலந்துக் கொள்ள முடிகிறது. உங்கள் ஆதரவின் தயவில் அவன் அண்ணன் திருமாவின் உண்ணா விரதத்தை நாடகம் என்று செய்தி போடுகிறான்..

பதவி இன்று வரும் ..நாளை போகும்… உங்களுக்கு ஒன்று என்றால் …காங்கிரஸ் காத தூரம் ஓடி விடும் ..அன்றும் இந்த தொல்.திருமாவும், ,அப்பாவித்தமிழனும் தான் வீதிக்கு வந்து நிற்பார்கள்…

இன்று சிங்கள பேரினவாத அரசின் வெளியுறவு துறை மந்திரியை நம் கேரளத்து மேனன் சந்தித்து முடித்த பிறகு அவர் ராஜீவ் –ஜெயவர்த்தனே ஒப்பந்தப் படி அனைத்து நடைபெற ஆவண செய்ய ,வேலைகள் நடப்பதற்காக, பணிகள் நடக்க இருப்பதாக மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்..

மக்களை கொன்று தீர்த்து விட்டு..ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் நிறை வேற்றப்படும் என்பதுதான் இதன் பொருள்..

கலைஞர் அறிக்கையில் சொல்லியவாறு சிவசங்கர மேனன் ‘சாதித்து’ காட்டி விட்டார்.

இந்த நிலையில் தொல்.திருமாவின் உணர்வுப் போராட்டம் நாம் இன்னும் உயிருடன் இருப்பதற்கான ஆதாரமாக விளங்குகிறது. தொல். திருமா ஏற்றி இருக்கும் இந்த உணர்வுத் தீயை நாடெங்கும் பரவச் செய்வதுதான் நம் இனக் கடமையாக இருக்கிறது..

தமிழினமே..

இனியாவது விழித்துக் கொள்.
விழிகளை காத்துக் கொள்…

திருமா- மன உரம் தந்த அறம்…

மிகத் துயரமான சூழலில் அண்ணன் தொல் .திருமாவளவன் அவர்கள் இன்று மூன்றாம் நாள் உண்ணாவிரத அறப்போரை தொடர்ந்துள்ளார். மருத்துவர்கள் அவரது உடல் நலம் மோசமாகி வருவதை சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கின்றனர். வருகின்ற கட்சித் தொண்டர்களுக்காக மேடையில் உரையாற்ற வேண்டிய கட்டாயம் வேறு அவருக்கு.

நேற்றிரவு பேசிய பேரா.சுப.வீ கூட திருமாவை அடிக்கடி பேச வைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் இன்று ஊடகங்களில் வெளிவந்த முதல்வர் கலைஞரின் அறிக்கையும், சற்று முன் வந்த மேனன் சந்திப்பிற்கு பிறகு சிங்கள பேரினவாத அரசின் வெளியுறவு அமைச்சரின் பேட்டியும் கவனிக்க வேண்டியவைகளாக உள்ளன.

முதலாவது கலைஞரின் அறிக்கை. வழக்கம் போல பழமையான புள்ளி விபரங்களும்,சோர்வளிக்க கூடிய செய்திகளையும் தாங்கி வந்திருக்கிறது. எப்போதும் சொல்லும் போராட்டக் குழுக்களுக்கு இடையே நிலவிய பகைமையை பற்றி இப்போது மீண்டும் பாடி இருக்கிறார் கலைஞர். அங்கே நொடிக்கு நொடி உயிர் போய் கொண்டு இருக்கிறது. இங்கே பழைய பல்லவிகள்…விளக்கங்கள்..வில்லங்கங்கள்..

கலைஞர் அவர்களே..

உங்களிடமிருந்து இது போன்ற அறிக்கைகளை ஏராளம் படித்து விட்டோம் நாங்கள். தமிழின தேசியத் தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்கள் உங்களிடம் நிதி உதவி பெற மறுத்ததை மீண்டும் சுட்டிக் காட்டி உள்ளீர்கள்.

சரி ..இந்த அறிக்கைக்கு என்ன நேரடியான பொருள்..?

மேதகு.பிரபாகரன் அவர்கள் மீது தங்களது கோபம் குறைய வில்லை என்று நாங்கள் எடுத்துக் கொள்ளலாமா..? .கோபமும், வருத்தமும் கொள்ள வேண்டிய நேரமா…இது..

குவியல் குவியலாக மக்களை கொன்று குவித்து வரும் சிங்கள பேரினவாத அரசிற்கு எதிராக நாம் ஒன்றுமே செய்யாமல் ,நம் இனப்படுகொலையை ஆதரிக்கும் முகமாய் கள்ள மெளனத்துடன் கைக்கட்டி நிற்கிறோமே… இந்த ஈனச்செயலை புரியும் நம்மீது நம் ஈழச் சகோதரர்கள் வருத்தம் கொள்ள மாட்டார்களா..? பழைய வரலாறு,புள்ளி விபரங்களை பேச வேண்டிய நேரமா இது,…

தமிழினப் போராளியாக ,ஒன்று பட்ட தாயக தமிழகத்தின் ஒருமித்த குரலாய் இன்று சாகும் வரை உண்ணா விரதம் மேற்கொண்டு தன்னை வருத்தி, தனது இயலாமையை ஆற்றாமையை ,அர்ப்பணிப்பு உணர்வினை காட்டிக் கொண்டு நிற்கும் திருமாவின் உடல் நிலை மோசமாகிக் கொண்டுக் கொண்டிருக்கும் இச்சூழலில் இப்படிப்பட்ட அறிக்கைகள் முதல்வரிடமிருந்து தேவைதானா..?

ஒரு வார்த்தை..ஒரே ஒரு வார்த்தை..போரைநிறுத்து என்கிற ஒரு வார்த்தையை உதிர்க்க கூட மனமில்லாமல் தமிழினப் படுகொலையை ஆதரித்து நிற்கும் மத்திய அரசை பேச வைக்கும் மந்திரம் அறியாதவரா நம் முதல்வர்..?

கண்ணுக்கு எட்டிய தொலைவில் நம் தொப்புள் கொடி உறவுகள் உதிர்வதை காண்பதை நம்மால் இன்னும் சகித்து கொண்டு மானாட மயிலாட ஆடிக் கொண்டிக் கொண்டு இருக்கிறோம்..உலகிலேயே இனப்பற்று இல்லாமல் வேரற்று வீழப் போகும் இனம் தமிழினமாக இருப்பது தமிழ் குடியின் மூத்தக் குடி கலைஞருக்கு தெரிய வில்லையா..?

ஒரு கற்பனைக்கு வைத்துக் கொள்வோம். இந்த நேரம் ஜெயலலிதாவின் ஆட்சி நடைப் பெற்றுக் கொண்டு இருந்தால் கலைஞர் வீதியில் இறங்கி போராடி இருப்பாரே…இந்நேரம் முரசொலிக் கடிதங்கள் தமிழுணர்வையும், தன்மானத்தையும் பறை சாற்றி இருக்குமே…?

கலைஞர் அவர்களே…

இந்த பதவி…இந்த நாற்காலி …அனைத்தும் 5 வருடங்களுக்குதான்.. ஆனால் காலங் காலமாய் உங்களுக்காக மனதில் உயர்ந்த இடம் வைத்துக் கொண்டு ..உங்களது ஆறுதலுக்காக காத்திருக்கும் ஈழத் தமிழர்களை சிங்கள இன வெறியன் ராஜபக்சேவின் காலடியில் பலியாக்குவதற்காகவா இந்த அரசியல் விளையாட்டுக்கள்..?

வேதனையும்..கண்ணீரும் மிகுந்து நிற்கிற நம் சகோதரர்களை நட்டாற்றில் முழ்கடித்து விட்டு நம்மால் நிம்மதியாக வாழ முடியுமா..?

மத்திய அரசில் தனக்கு வேண்டிய பதவிகளை கேட்டு வாங்கிக் கொண்ட கலைஞரால் ..இன்று மத்திய அரசை பணிய வைக்க முடியவில்லை..

கலைஞர் அவர்களே…

உங்களைப் பற்றி எழுதிக் குவித்த ஞாநி,சோ,சுப்ரமணிய சுவாமி வகையறாக்களுக்கு எதிராக நாங்கள் தான் போர்க் குரல் எழுப்பினோம்..உங்கள் நாக்கை அறுப்பேன் என்று காவிக் கொடி தூக்கிய சாமியார் சாக்கடைகளுக்கு நாங்கள்தான் எதிர்ப்பை காட்டினோம்.. அந்த நள்ளிரவு கைதின் போது எங்கள் குடும்பத்து மூதாதையை கைது செய்வதாக கருதிக் கொண்டு நாங்கள் தான் போராட்ட களத்தில் நின்றோம்..

அப்போது இந்த ஈவிகேஎஸ்.இளங்கோவனோ..தினமலர் பத்திரிக்கையோ…உங்களுக்கு யாருமில்லை.. இந்த அப்பாவித் தமிழர்களை தவிர…

கிளிநொச்சி வீழ்ந்தது என்று அட்டகாசமாக சிரித்துக் கொண்டு செய்தி வெளியிட்ட ,உங்களை …உங்களது குடும்பத்தினரை ஆபாசமாக வசை பொழியும் தினமலரின் விழாவில் உங்களால் கலந்துக் கொள்ள முடிகிறது. உங்கள் ஆதரவின் தயவில் அவன் அண்ணன் திருமாவின் உண்ணா விரதத்தை நாடகம் என்று செய்தி போடுகிறான்..

பதவி இன்று வரும் ..நாளை போகும்… உங்களுக்கு ஒன்று என்றால் …காங்கிரஸ் காத தூரம் ஓடி விடும் ..அன்றும் இந்த தொல்.திருமாவும், ,அப்பாவித்தமிழனும் தான் வீதிக்கு வந்து நிற்பார்கள்…

இன்று சிங்கள பேரினவாத அரசின் வெளியுறவு துறை மந்திரியை நம் கேரளத்து மேனன் சந்தித்து முடித்த பிறகு அவர் ராஜீவ் –ஜெயவர்த்தனே ஒப்பந்தப் படி அனைத்து நடைபெற ஆவண செய்ய ,வேலைகள் நடப்பதற்காக, பணிகள் நடக்க இருப்பதாக மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்..

மக்களை கொன்று தீர்த்து விட்டு..ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் நிறை வேற்றப்படும் என்பதுதான் இதன் பொருள்..

கலைஞர் அறிக்கையில் சொல்லியவாறு சிவசங்கர மேனன் ‘சாதித்து’ காட்டி விட்டார்.

இந்த நிலையில் தொல்.திருமாவின் உணர்வுப் போராட்டம் நாம் இன்னும் உயிருடன் இருப்பதற்கான ஆதாரமாக விளங்குகிறது. தொல். திருமா ஏற்றி இருக்கும் இந்த உணர்வுத் தீயை நாடெங்கும் பரவச் செய்வதுதான் நம் இனக் கடமையாக இருக்கிறது..

தமிழினமே..

இனியாவது விழித்துக் கொள்.
விழிகளை காத்துக் கொள்…

Page 47 of 53

Powered by WordPress & Theme by Anders Norén