பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

Author: மணி செந்தில் Page 46 of 53

இலக்கியப் புடுங்கிகள்…

புடுங்கி என்ற சொல் நமது சாதாரண வாழ்வில் கோபத்தின் தொனியாய் வெளிப்படும் ஒரு சொல். அந்த சொல் அலட்சியத்தினையும்,கர்வத்தினையும் பிரபதிலிக்கும் நபர்கள் மீது பிரயோகிக்கப் பயன்படும் ஒரு சொல்..கீழ் வரும் ஆசாமிகளைப் பற்றி எழுத நினைக்கும் போது இந்த சொல்தான் சாலப் பொருத்தமாய் நின்றது. தன்னைத் தானே சிம்மாசனத்தின் மீது அமர வைத்துக் கொண்டு ,அரங்க கூட்ட அரசியல் செய்துக் கொண்டு..இவர்களாகவே இசக் குழுக்கள் அமைத்துக் கொண்டு ..எந்த அவலத்தின் மீதும் …துயரத்தின் மீது கரிசனப் பார்வை கூட செலுத்தாமல்..சுயநல இலக்கியம் படைப்பதாக சொல்லும் சில புடுங்கிகளைப் பற்றி நாம் இந்த நேரத்தில் யோசிப்போம். பிடுங்கி என்றுதான் எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் புடுங்கி என்ற சொல்லில் தொனிக்கும் கோபம் தான் என்னளவில் சரியாகப் பட்டது.ஈழம் நமக்குள் ரணமாய்,வலியாய்,துயரயாய் இருக்கும் இந்த சூழலில் …இனி என்ன செய்வது என வலியின் ஊடே தொக்கி நிற்கும் வினாக்களுக்கு விடை தெரியாமல் நாம் விக்கித்து நிற்கும் போது…வழக்கம் போல எதிர்வினை என்ற பெயரில் ஏதாவது வினை வைக்கவும், எகத்தாளம் செய்யவும் இலக்கிய அறங்காவலர்கள் சிலர் முளைத்து இருக்கின்றனர்.

ஈழ மக்கள் மீது திணிக்கப்பட்ட யுத்தம்..வல்லாதிக்க நாடுகளின் உதவியால் இன அழிவாய் நம் கண் முன்னால் விரிந்து..நம் இன மக்களை நம்மால் காப்பாற்ற இயல வில்லையே என்ற குற்ற உணர்ச்சியாய் நமக்குள் உறுத்திக் கொண்டிருக்கிறது. இது வரை மக்களின் அழிவைப் பற்றியோ..துயரைப் பற்றியோ.. வாய் திறக்காத இவர்கள்…யுத்தம் மக்களின் அழிவாய் ஒரு வலுக்கட்டாய முடிவிற்கு வந்திருக்கும் போது..இந்த இலக்கிய புடுங்கிகள் வழமை போலவே பிணத்தை அறுக்கும் வேலை பார்க்க வந்து விட்டனர். இந்த சமயத்தில் இன உணர்வால் போராடி முயன்றுக் கொண்டிருக்கிற …மிகச் சில எழுத்தாள ஆளுமைகள் இதற்கு வியப்பான..விதிவிலக்குகள்..

இந்த இலக்கிய இமயங்கள் இப்போது எழுத துவங்குவதற்கு பின்னால் உள்ள அரசியல் மிகவும் கவனிக்கத் தக்கது. இவர்கள் அங்கே மிஞ்சியிருக்கும் மக்களுக்காகவோ…உரிமைகளுக்காகவோ நாளைய தீர்வுகளுக்காவோ எழுதத் தலைப்பட வில்லை.மாறாக இங்கே இனப்பற்றின் விளைவாய்..உள்ளூணர்வின் உந்துதலால் வீதிக்கு வந்து மிகச் சில சக எழுத்தாளன் போராடும் போது…அந்த போராட்டம் பொய்த்து விட்டது எனவும்..தான் தான் தீர்க்கதரிசி எனவும் முரசுக் கொட்டவே இப்போது இறுமாப்புடன் எழுத துவங்கி உள்ளனர் இவர்கள்.

இலக்கியம்..இலக்கியத்திற்காகவே..தமக்காகவே….பிழைப்பிற்காகவே..சோத்திற்காகவே…சாதிக்காகவே என்றெல்லாம் கொள்கை (?) இவர்களாகவே கட்டிக் கொண்டு..ஊருக்கு நான்கு பேர் மட்டுமே வாசிக்கும் இதழில் பக்கம் பக்கமாய் சக எழுத்தாளனை வைது தீர்க்கும் பணியை..தன் வாழ்நாளின் ப(பி)ணியாய் செய்து வரும் இந்த இலக்கிய சிங்கங்கள் ..புத்தக விழாக்களுக்காகவும்..நூலக ஆணைகளுக்காகவும் யாரும் படித்து விடக் கூடாது என்ற காரணத்திற்காக 400, 500 பக்கங்களில் புத்தகம் போட்டு ஒருவரை ஒருவர் மாற்றி திட்டிக் கொண்டிருக்கின்றனர்.பின் நவீனத்துவ,முன் நவீனத்துவ..பக்க நவீனத்துவ..துக்க நவீனத்துவ.. என நான்கு திசைத்துவ எழுத்தாளர்களாய்..நாட்டில் நடக்கும் எது பற்றியும் அக்கறை காட்டாது.. மூடப்பட்ட சுவர்களுக்குள் நடக்கும் கூட்டத்தில்..அடித்த போதையில்.. அகப்பட்டவனை அடித்து துவைக்கும் இவர்களுக்கு எது பற்றியும் கவலை இல்லை. ஆனால் அனைத்தும் முடிந்த பின்னர்..தவித்த வாய்களுக்கு… தண்ணீர் அளிக்க கூட சிந்திக்காத இவர்கள்…தாகத்தினால் இறந்த ஒரு தலைமுறையின் பிணங்களை சவக்குழியில் இருந்து தோண்டி எடுத்து சவத்தின் மீது நெளியும் புழுக்களின் ஊடே அலையும் புழுவாய் …ஏன்..எதற்கு..எப்படி என ஆராய்ச்சி செய்வது போல பாசாங்கு கட்டுரை எழுத வந்து விட்டனர்.

இனம் அழிந்து போகும் தருணங்களில் இறுக வாய் மூடி மெளனத்திருந்த இவர்களது நா…ரத்த சுவையின் ஊடே ஊறும் ஊடக வெளிச்சத்தினை நக்கிப் பார்க்க அலைகின்றது.மலை முகடுகளில் ஒளிந்துக் கொண்டு ,எங்கேயாவது மாமிசம் விழுமா..பறந்து திரிந்து பறிக்கலாம் என அலையும் பிணக் கழுகுகள்… மலை மலையாய் செத்துக் கிடக்கும் மனித சவங்களின் மீது அலையத் துவங்கி இருக்கின்றன.. இனி இவர்கள் பக்கம் பக்கமாய் எழுதவும்..வழுக்கவும்.. இவர்களுக்கு ஈழம் ஒரு பிழைப்புக் காரணியாய் நின்று போகும். போர் புரிந்து இறந்த மாவீரர்களின் தடங்களை இவர்கள் ஆராய்ச்சி என்ற பெயரில் காசு கொடுக்கும் இன அழிப்பு எஜமானிடம் ஊதியம் வாங்கிக் கொண்டு …காட்டிக் கொடுக்கும் கள்ள கட்டுரைகள் எழுதுவார்கள்..இது வரை இல்லாத அளவிற்கு போட்டிக் குழு,போர்ப் பரப்பில் நின்ற சாதீய பார்வை என்றெல்லாம் பேனா மை இருக்கும் வரை ..கத்தை கத்தையாக காகிதங்களில் கசக்கி பிழிவார்கள்.. அலாவுதீனின் அற்புத பூதம் போல..இது வரை எங்கிருந்தார்களோ.. தெரியவில்லை. ஜீபூம்பா என்ற அழைப்பில்லாமலேயே பாய்ந்து வந்து பதறுகின்றனர் இந்த பாசாங்குக் காரார்கள்.

உலகமெல்லாம் பரந்து வாழும் எம் இன மக்களின் வியர்வைத் துளிகளினால் விளைந்த பணத்தை நோக்கி…புத்தகம் புத்தகமாக எழுதித் தள்ளும் இந்த கொள்ளைக்கார கும்பல்..அவர்களின் துயர் துடைக்க..தோள் கொடுக்காமல்..சவக் காட்டிலும் அரசியல் சதிராட்டம் நடத்தி..பிழைப்பு நடத்த வந்திருக்கிறார்கள். இனம் அழியும் போது எந்த இலக்கிய சங்கமும் வாய் திறக்கவில்லை. மாறாக இலக்கிய அபத்தங்களுக்கு ஆங்காங்கே கூட்டம் நடத்தி ,குழு சண்டை..குழாயடி சண்டை போட்டுக் கொண்டிருந்தன. முற்போக்காளர்களுக்கும் ஒரு பிரச்சனை… இதில் வாய் திறக்கலாமா..வாய் திறந்தால் கட்சியின் ஈ உள்ளே போய் விடுமே… கட்டுப்பாட்டு நாற்றம் வெளியேறி விடுமே என்ற பயம்.

இனம் ..மொழி என்ற ஒன்று இருந்தால்தானே..நம்மால் எழுதி கிழிக்க முடியும் என்ற உண்மை உறுத்தினாலும் தீர்க்கதரிசி பட்டம் பெற வேண்டும் என்ற ஆவலில் ஏதாவது உளற வேண்டும் என்பதற்காக கக்க வேண்டியதை காலம் கடந்தாலும் கக்கி விட வேண்டும் இவர்களுக்கு…

ஒரு பிரச்சனை உச்சத்தில் இருக்கும் போது உளறி கொட்டுவதில் இவர்களுக்கு சிக்கல் இருக்கிறது.அது என்னவென்றால்..உளறி கொட்டியதற்கு மாற்றாக ஏதாவது நடந்து விட்டால் தீர்க்கதரிசி பட்டம் போய் விடுமே என்ற பயம்.அது தான் இட்லி ஆறிய பிறகென்ன..ஊசிப் போன பிறகு கூட இவர்கள் சாப்பிட துணிவது…பிரச்சனை மையம் கொண்டிருக்கும் போது ஏதாவது பேசுவது இவர்களை பிரச்சனையில் சிக்க வைக்கவிடும் என்ற பயம் இவர்களின் இதயத்தினை கூட இறுக வைத்துவிடும்.

எல்லாம் முடிந்த பிறகு ….யாரும் கேட்க வர மாட்டார்கள் என்ற துணிவில்..தேனீக்கள் அற்ற வறண்ட தேன் கூட்டில் ..நக்கிப் பார்க்கும் திட்டத்தோடு இவர்கள் எழுத துவங்கி உள்ளார்கள். இனிமேலும் எழுதுவார்கள்..
வெகு ஜன பத்திரிக்கைகளில் ஏதாவது ஒன்றில் பக்கங்கள் கிடைத்து விட்டது என்பதற்காக வருடக் கணக்கில் பொதுத் தளத்தில் விஷத்தை மட்டும் தொடர்ந்து கக்கி வருகிறார் ஞாநி என்று தன்னை தானே அழைத்து கொள்கிற ஜிப்பா ஆசாமி. இவருக்கு என்ன வேலை என்ன வென்றால்..ஊர் முழுக்க தந்தி அனுப்பவும்,மனு போடவும் கற்றுக் கொடுக்கிற அதாரிட்டியாக அலப்பரையை கொடுப்பது.. ஏதாவது சொல்லும் போது..அன்றே சொன்னனே பார்த்தாயா என்று தீர்க்கதரிசி கிரீடத்தை தானே சூட்டிக் கொள்வது.இந்த வாரத்து குமுதம் இதழில் தமிழின தேசிய தலைவர் பிரபாகரனை ஈழ மாநில முதலமைச்சராய் ஆக இவர் ஆசைப்படுகிறார். உணர்வும் ,உண்மையும்,கொள்கையும், இனப்பற்றும் நிரம்பிய தலைவர் அவர்களை இவர் பதவிக்காக அலையும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் போல நினைத்து விட்டார் போலும்.பிரபாகரன் இருக்கிறாரோ,இல்லையோ என்று ஆங்காங்கு விருப்பங்களின் இடைச் செருகல்கள் வேறு.
சிங்கத்தினை சீண்டி பார்க்கும் சிறு நரிக் கூட்டமே..உங்களுக்காகவது எம் தலைவர் வருவார்..வந்தே தீருவார்.

உலக வரலாற்றில் எழுத்தாளர்களின் மனமும்,எழுத்தும் சாதித்தவை மிக அதிகம்.எப்போது எல்லாம் மக்கள் இன்னலுற்று ..அவதியுற்று நிர்கதியாய் நிற்கிறார்களோ அப்போதெல்லாம் படைப்பு மனம்தான் போர் முரசு கொட்டி நிற்கும்..என் கண்ணால் மக்ஸீம் கார்க்கி, பாப்லோ நெரூதா,பாரதி, பாரதிதாசன்,காசி ஆனந்தன், இன்குலாப்,அறிவுமதி, என பட்டியல் நீள்கிறது.ஆனால் நம் படைப்புவாதிகளோ எதற்கும் உதவாமல்..அறைக் கூட்டம் நடத்தி அடித்துக் கொள்ள மட்டுமே எழுதுகிறார்கள். சாதாரண மனிதனுக்கு உள்ள சமூக பொறுப்புணர்ச்சி கூட இவர்களுக்கு ஏன் இல்லாமல் போனது..?.கேட்டால் படைப்பு மனம் சிதைந்து விடுமாம். பாவிகளே…சமூகம் என்ற ஒன்றும்..உரிமை என்ற ஒன்றும் இருந்தால் தான் படைப்பு… வெங்காயம் இதெல்லாம்..
எங்கேயோ இருக்கும் பிஜீத் தீவில் சமூகம் படும் அவலம் கண்டு கண்கலங்கி..எழுதினானே பாரதி..அவனும் படைப்பாளிதானே..

குடிப்பதையும் பற்றியும்..இல்லாத இதிகாசங்கள் பற்றியும் புனைவு மொழியில் வரிந்துக் கட்டிய இவர்களால் ஏன் ஈழம் என்று வரும் போது கைகளை இறுக்க மூடிக்கொண்டு விடுகிறார்கள்.தமிழ் சமூக வரலாற்றில் இதுவரை நடைபெற்றிராத இந்த இன அழிவின் போது சிறு சலனத்தை கூட காட்டாத இவர்கள்..இனி எதற்கு யாருக்கு எழுதப் போகிறார்கள் ?

அய்யா…இலக்கிய இசங்களை கரைத்து குடித்து..வேதாந்த ஆராய்ச்சியில் முழ்கி திளைத்து…இதிகாச மீள் புனைவில் மீண்டெழுந்து.. குடிப்பதையும்.. குடிச்சாலைகளையும்… ஊற்றெடுக்கும் காமத்தினையும்…வரிசை கட்டி எழுதி வரும் கணவான்களே…

ஈழத்தினையும்..மக்களையும் விட்டு விடுங்கள்…

அவர்களுக்கான விதியை அவர்களே சமைப்பார்கள்.

காரண…காரிய ஆதி மூல ஆராய்ச்சிகளை கடலுக்கு இந்த பக்கம் மட்டுமே.. வைத்துக்கொண்டு… ஏற்கனவே பணத்திற்காகவும்.. சாராயத்திற்காகவும்… தங்களை தாமே விற்றுக் கொண்டு விட்ட இந்த கூட்டத்திடம் உங்கள் பம்மாத்து வேலைகளை தொடருங்கள்.

எவனும் இங்கே எதற்கும் கேட்கப் போவதில்லை. தின்னது செரிக்கவும்.. பட்டங்களை பறிக்கவும்.. எழுதுங்கள். கலகம் என்ற பெயரில் அடித்துக் கொள்ளவும்..இலக்கியம் என்ற பெயரில் குடித்துக் கொள்ளவும் எழுதுங்கள்…உங்களுக்கு பிறகான சமூகத்தினை பற்றி உங்களுக்கு கவலை இல்லை.

நீங்கள் வாந்தி எடுப்பதை எல்லாம் ..எழுத்தாக எண்ணி பதிப்பிக்க ISDN பதிப்பகங்களும் அவற்றின் பத்திரிக்கைகளும் உள்ளன..மேலும் விளம்பரம் கொடுத்து போஷிக்க ஜவுளிக் கடையும், அல்வா கடையும் இருக்கவே இருக்கின்றன..இது போதாதா..கூட்டம் நடத்தவும்..கும்மி அடிக்கவும்…?

உள் மன இருட்டுதான் உங்களுக்கு வசதியாக இருக்கிறது.

ஆனால் எதற்கும் உண்டு விடியல்.

விடியலின் கதிர்களில் எரிந்து போக இருப்பது.

நீங்களும்..உங்களும் எழுத்துக்களும் தான்.

வணக்கம் .இலக்கியப்புடுங்கிகளே..

சீக்கிரம் கடந்து போங்கள்.

இல்லையேல் கடத்தப் படுவீர்கள்.

.மணி.செந்தில்…
www.manisenthil.com

ஈழத் தமிழர்களும் … இலக்கியப் புடுங்கிகளும்..

புடுங்கி என்ற சொல் நமது சாதாரண வாழ்வில் கோபத்தின் தொனியாய் வெளிப்படும் ஒரு சொல். அந்த சொல் அலட்சியத்தினையும்,கர்வத்தினையும் பிரபதிலிக்கும் நபர்கள் மீது பிரயோகிக்கப் பயன்படும் ஒரு சொல்..கீழ் வரும் ஆசாமிகளைப் பற்றி எழுத நினைக்கும் போது இந்த சொல்தான் சாலப் பொருத்தமாய் நின்றது. தன்னைத் தானே சிம்மாசனத்தின் மீது அமர வைத்துக் கொண்டு ,அரங்க கூட்ட அரசியல் செய்துக் கொண்டு..இவர்களாகவே இசக் குழுக்கள் அமைத்துக் கொண்டு ..எந்த அவலத்தின் மீதும் …துயரத்தின் மீது கரிசனப் பார்வை கூட செலுத்தாமல்..சுயநல இலக்கியம் படைப்பதாக சொல்லும் சில புடுங்கிகளைப் பற்றி நாம் இந்த நேரத்தில் யோசிப்போம். பிடுங்கி என்றுதான் எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் புடுங்கி என்ற சொல்லில் தொனிக்கும் கோபம் தான் என்னளவில் சரியாகப் பட்டது.

ஈழம் நமக்குள் ரணமாய்,வலியாய்,துயரயாய் இருக்கும் இந்த சூழலில் …இனி என்ன செய்வது என வலியின் ஊடே தொக்கி நிற்கும் வினாக்களுக்கு விடை தெரியாமல் நாம் விக்கித்து நிற்கும் போது…வழக்கம் போல எதிர்வினை என்ற பெயரில் ஏதாவது வினை வைக்கவும், எகத்தாளம் செய்யவும் இலக்கிய அறங்காவலர்கள் சிலர் முளைத்து இருக்கின்றனர்.

ஈழ மக்கள் மீது திணிக்கப்பட்ட யுத்தம்..வல்லாதிக்க நாடுகளின் உதவியால் இன அழிவாய் நம் கண் முன்னால் விரிந்து..நம் இன மக்களை நம்மால் காப்பாற்ற இயல வில்லையே என்ற குற்ற உணர்ச்சியாய் நமக்குள் உறுத்திக் கொண்டிருக்கிறது. இது வரை மக்களின் அழிவைப் பற்றியோ..துயரைப் பற்றியோ.. வாய் திறக்காத இவர்கள்…யுத்தம் மக்களின் அழிவாய் ஒரு வலுக்கட்டாய முடிவிற்கு வந்திருக்கும் போது..இந்த இலக்கிய புடுங்கிகள் வழமை போலவே பிணத்தை அறுக்கும் வேலை பார்க்க வந்து விட்டனர். இந்த சமயத்தில் இன உணர்வால் போராடி முயன்றுக் கொண்டிருக்கிற …மிகச் சில எழுத்தாள ஆளுமைகள் இதற்கு வியப்பான..விதிவிலக்குகள்..

இந்த இலக்கிய இமயங்கள் இப்போது எழுத துவங்குவதற்கு பின்னால் உள்ள அரசியல் மிகவும் கவனிக்கத் தக்கது. இவர்கள் அங்கே மிஞ்சியிருக்கும் மக்களுக்காகவோ…உரிமைகளுக்காகவோ நாளைய தீர்வுகளுக்காவோ எழுதத் தலைப்பட வில்லை.மாறாக இங்கே இனப்பற்றின் விளைவாய்..உள்ளூணர்வின் உந்துதலால் வீதிக்கு வந்து மிகச் சில சக எழுத்தாளன் போராடும் போது…அந்த போராட்டம் பொய்த்து விட்டது எனவும்..தான் தான் தீர்க்கதரிசி எனவும் முரசுக் கொட்டவே இப்போது இறுமாப்புடன் எழுத துவங்கி உள்ளனர் இவர்கள்.

இலக்கியம்..இலக்கியத்திற்காகவே..தமக்காகவே….பிழைப்பிற்காகவே..சோத்திற்காகவே…சாதிக்காகவே என்றெல்லாம் கொள்கை (?) இவர்களாகவே கட்டிக் கொண்டு..ஊருக்கு நான்கு பேர் மட்டுமே வாசிக்கும் இதழில் பக்கம் பக்கமாய் சக எழுத்தாளனை வைது தீர்க்கும் பணியை..தன் வாழ்நாளின் ப(பி)ணியாய் செய்து வரும் இந்த இலக்கிய சிங்கங்கள் ..புத்தக விழாக்களுக்காகவும்..நூலக ஆணைகளுக்காகவும் யாரும் படித்து விடக் கூடாது என்ற காரணத்திற்காக 400, 500 பக்கங்களில் புத்தகம் போட்டு ஒருவரை ஒருவர் மாற்றி திட்டிக் கொண்டிருக்கின்றனர்.பின் நவீனத்துவ,முன் நவீனத்துவ..பக்க நவீனத்துவ..துக்க நவீனத்துவ.. என நான்கு திசைத்துவ எழுத்தாளர்களாய்..நாட்டில் நடக்கும் எது பற்றியும் அக்கறை காட்டாது.. மூடப்பட்ட சுவர்களுக்குள் நடக்கும் கூட்டத்தில்..அடித்த போதையில்.. அகப்பட்டவனை அடித்து துவைக்கும் இவர்களுக்கு எது பற்றியும் கவலை இல்லை. ஆனால் அனைத்தும் முடிந்த பின்னர்..தவித்த வாய்களுக்கு… தண்ணீர் அளிக்க கூட சிந்திக்காத இவர்கள்…தாகத்தினால் இறந்த ஒரு தலைமுறையின் பிணங்களை சவக்குழியில் இருந்து தோண்டி எடுத்து சவத்தின் மீது நெளியும் புழுக்களின் ஊடே அலையும் புழுவாய் …ஏன்..எதற்கு..எப்படி என ஆராய்ச்சி செய்வது போல பாசாங்கு கட்டுரை எழுத வந்து விட்டனர்.

இனம் அழிந்து போகும் தருணங்களில் இறுக வாய் மூடி மெளனத்திருந்த இவர்களது நா…ரத்த சுவையின் ஊடே ஊறும் ஊடக வெளிச்சத்தினை நக்கிப் பார்க்க அலைகின்றது.மலை முகடுகளில் ஒளிந்துக் கொண்டு ,எங்கேயாவது மாமிசம் விழுமா..பறந்து திரிந்து பறிக்கலாம் என அலையும் பிணக் கழுகுகள்… மலை மலையாய் செத்துக் கிடக்கும் மனித சவங்களின் மீது அலையத் துவங்கி இருக்கின்றன.. இனி இவர்கள் பக்கம் பக்கமாய் எழுதவும்..வழுக்கவும்.. இவர்களுக்கு ஈழம் ஒரு பிழைப்புக் காரணியாய் நின்று போகும். போர் புரிந்து இறந்த மாவீரர்களின் தடங்களை இவர்கள் ஆராய்ச்சி என்ற பெயரில் காசு கொடுக்கும் இன அழிப்பு எஜமானிடம் ஊதியம் வாங்கிக் கொண்டு …காட்டிக் கொடுக்கும் கள்ள கட்டுரைகள் எழுதுவார்கள்..இது வரை இல்லாத அளவிற்கு போட்டிக் குழு,போர்ப் பரப்பில் நின்ற சாதீய பார்வை என்றெல்லாம் பேனா மை இருக்கும் வரை ..கத்தை கத்தையாக காகிதங்களில் கசக்கி பிழிவார்கள்.. அலாவுதீனின் அற்புத பூதம் போல..இது வரை எங்கிருந்தார்களோ.. தெரியவில்லை. ஜீபூம்பா என்ற அழைப்பில்லாமலேயே பாய்ந்து வந்து பதறுகின்றனர் இந்த பாசாங்குக் காரார்கள்.

உலகமெல்லாம் பரந்து வாழும் எம் இன மக்களின் வியர்வைத் துளிகளினால் விளைந்த பணத்தை நோக்கி…புத்தகம் புத்தகமாக எழுதித் தள்ளும் இந்த கொள்ளைக்கார கும்பல்..அவர்களின் துயர் துடைக்க..தோள் கொடுக்காமல்..சவக் காட்டிலும் அரசியல் சதிராட்டம் நடத்தி..பிழைப்பு நடத்த வந்திருக்கிறார்கள். இனம் அழியும் போது எந்த இலக்கிய சங்கமும் வாய் திறக்கவில்லை. மாறாக இலக்கிய அபத்தங்களுக்கு ஆங்காங்கே கூட்டம் நடத்தி ,குழு சண்டை..குழாயடி சண்டை போட்டுக் கொண்டிருந்தன. முற்போக்காளர்களுக்கும் ஒரு பிரச்சனை… இதில் வாய் திறக்கலாமா..வாய் திறந்தால் கட்சியின் ஈ உள்ளே போய் விடுமே… கட்டுப்பாட்டு நாற்றம் வெளியேறி விடுமே என்ற பயம்.

இனம் ..மொழி என்ற ஒன்று இருந்தால்தானே..நம்மால் எழுதி கிழிக்க முடியும் என்ற உண்மை உறுத்தினாலும் தீர்க்கதரிசி பட்டம் பெற வேண்டும் என்ற ஆவலில் ஏதாவது உளற வேண்டும் என்பதற்காக கக்க வேண்டியதை காலம் கடந்தாலும் கக்கி விட வேண்டும் இவர்களுக்கு…

ஒரு பிரச்சனை உச்சத்தில் இருக்கும் போது உளறி கொட்டுவதில் இவர்களுக்கு சிக்கல் இருக்கிறது.அது என்னவென்றால்..உளறி கொட்டியதற்கு மாற்றாக ஏதாவது நடந்து விட்டால் தீர்க்கதரிசி பட்டம் போய் விடுமே என்ற பயம்.அது தான் இட்லி ஆறிய பிறகென்ன..ஊசிப் போன பிறகு கூட இவர்கள் சாப்பிட துணிவது…பிரச்சனை மையம் கொண்டிருக்கும் போது ஏதாவது பேசுவது இவர்களை பிரச்சனையில் சிக்க வைக்கவிடும் என்ற பயம் இவர்களின் இதயத்தினை கூட இறுக வைத்துவிடும்.

எல்லாம் முடிந்த பிறகு ….யாரும் கேட்க வர மாட்டார்கள் என்ற துணிவில்..தேனீக்கள் அற்ற வறண்ட தேன் கூட்டில் ..நக்கிப் பார்க்கும் திட்டத்தோடு இவர்கள் எழுத துவங்கி உள்ளார்கள். இனிமேலும் எழுதுவார்கள்..

வெகு ஜன பத்திரிக்கைகளில் ஏதாவது ஒன்றில் பக்கங்கள் கிடைத்து விட்டது என்பதற்காக வருடக் கணக்கில் பொதுத் தளத்தில் விஷத்தை மட்டும் தொடர்ந்து கக்கி வருகிறார் ஞாநி என்று தன்னை தானே அழைத்து கொள்கிற ஜிப்பா ஆசாமி. இவருக்கு என்ன வேலை என்ன வென்றால்..ஊர் முழுக்க தந்தி அனுப்பவும்,மனு போடவும் கற்றுக் கொடுக்கிற அதாரிட்டியாக அலப்பரையை கொடுப்பது.. ஏதாவது சொல்லும் போது..அன்றே சொன்னனே பார்த்தாயா என்று தீர்க்கதரிசி கிரீடத்தை தானே சூட்டிக் கொள்வது.இந்த வாரத்து குமுதம் இதழில் தமிழின தேசிய தலைவர் பிரபாகரனை ஈழ மாநில முதலமைச்சராய் ஆக இவர் ஆசைப்படுகிறார். உணர்வும் ,உண்மையும்,கொள்கையும், இனப்பற்றும் நிரம்பிய தலைவர் அவர்களை இவர் பதவிக்காக அலையும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் போல நினைத்து விட்டார் போலும்.பிரபாகரன் இருக்கிறாரோ,இல்லையோ என்று ஆங்காங்கு விருப்பங்களின் இடைச் செருகல்கள் வேறு.
சிங்கத்தினை சீண்டி பார்க்கும் சிறு நரிக் கூட்டமே..உங்களுக்காகவது எம் தலைவர் வருவார்..வந்தே தீருவார்.

உலக வரலாற்றில் எழுத்தாளர்களின் மனமும்,எழுத்தும் சாதித்தவை மிக அதிகம்.எப்போது எல்லாம் மக்கள் இன்னலுற்று ..அவதியுற்று நிர்கதியாய் நிற்கிறார்களோ அப்போதெல்லாம் படைப்பு மனம்தான் போர் முரசு கொட்டி நிற்கும்..என் கண்ணால் மக்ஸீம் கார்க்கி, பாப்லோ நெரூதா,பாரதி, பாரதிதாசன்,காசி ஆனந்தன், இன்குலாப்,அறிவுமதி, என பட்டியல் நீள்கிறது.ஆனால் நம் படைப்புவாதிகளோ எதற்கும் உதவாமல்..அறைக் கூட்டம் நடத்தி அடித்துக் கொள்ள மட்டுமே எழுதுகிறார்கள். சாதாரண மனிதனுக்கு உள்ள சமூக பொறுப்புணர்ச்சி கூட இவர்களுக்கு ஏன் இல்லாமல் போனது..?.கேட்டால் படைப்பு மனம் சிதைந்து விடுமாம். பாவிகளே…சமூகம் என்ற ஒன்றும்..உரிமை என்ற ஒன்றும் இருந்தால் தான் படைப்பு… வெங்காயம் இதெல்லாம்..
எங்கேயோ இருக்கும் பிஜீத் தீவில் சமூகம் படும் அவலம் கண்டு கண்கலங்கி..எழுதினானே பாரதி..அவனும் படைப்பாளிதானே..

குடிப்பதையும் பற்றியும்..இல்லாத இதிகாசங்கள் பற்றியும் புனைவு மொழியில் வரிந்துக் கட்டிய இவர்களால் ஏன் ஈழம் என்று வரும் போது கைகளை இறுக்க மூடிக்கொண்டு விடுகிறார்கள்.தமிழ் சமூக வரலாற்றில் இதுவரை நடைபெற்றிராத இந்த இன அழிவின் போது சிறு சலனத்தை கூட காட்டாத இவர்கள்..இனி எதற்கு யாருக்கு எழுதப் போகிறார்கள் ?

அய்யா…இலக்கிய இசங்களை கரைத்து குடித்து..வேதாந்த ஆராய்ச்சியில் முழ்கி திளைத்து…இதிகாச மீள் புனைவில் மீண்டெழுந்து.. குடிப்பதையும்.. குடிச்சாலைகளையும்… ஊற்றெடுக்கும் காமத்தினையும்…வரிசை கட்டி எழுதி வரும் கணவான்களே…

ஈழத்தினையும்..மக்களையும் விட்டு விடுங்கள்…

அவர்களுக்கான விதியை அவர்களே சமைப்பார்கள்.

காரண…காரிய ஆதி மூல ஆராய்ச்சிகளை கடலுக்கு இந்த பக்கம் மட்டுமே.. வைத்துக்கொண்டு… ஏற்கனவே பணத்திற்காகவும்.. சாராயத்திற்காகவும்… தங்களை தாமே விற்றுக் கொண்டு விட்ட இந்த கூட்டத்திடம் உங்கள் பம்மாத்து வேலைகளை தொடருங்கள்.

எவனும் இங்கே எதற்கும் கேட்கப் போவதில்லை. தின்னது செரிக்கவும்.. பட்டங்களை பறிக்கவும்.. எழுதுங்கள். கலகம் என்ற பெயரில் அடித்துக் கொள்ளவும்..இலக்கியம் என்ற பெயரில் குடித்துக் கொள்ளவும் எழுதுங்கள்…உங்களுக்கு பிறகான சமூகத்தினை பற்றி உங்களுக்கு கவலை இல்லை.

நீங்கள் வாந்தி எடுப்பதை எல்லாம் ..எழுத்தாக எண்ணி பதிப்பிக்க ISDN பதிப்பகங்களும் அவற்றின் பத்திரிக்கைகளும் உள்ளன..மேலும் விளம்பரம் கொடுத்து போஷிக்க ஜவுளிக் கடையும், அல்வா கடையும் இருக்கவே இருக்கின்றன..இது போதாதா..கூட்டம் நடத்தவும்..கும்மி அடிக்கவும்…?

உள் மன இருட்டுதான் உங்களுக்கு வசதியாக இருக்கிறது.

ஆனால் எதற்கும் உண்டு விடியல்.

விடியலின் கதிர்களில் எரிந்து போக இருப்பது.

நீங்களும்..உங்களும் எழுத்துக்களும் தான்.

வணக்கம் .இலக்கியப்புடுங்கிகளே..

சீக்கிரம் கடந்து போங்கள்.

இல்லையேல் கடத்தப் படுவீர்கள்.

.மணி.செந்தில்…
www.manisenthil.com

எங்கள் அண்ணன் சீமான் தான் இது

வேந்தன் என்பவர் பெயரில் எங்கள் சீமானா இது..? என்ற தலைப்பில் எனக்கு ஒரு மின் அஞ்சல் வந்துள்ளது. அண்ணன் சீமான் இப்போது அ.இ.அ.தி.மு.வை ஆதரிப்பது குறித்த நிலைப்பாடு குறித்து மிக தவறுதலான ,உள்ளீடற்ற வெற்றுக் கருத்துக்கள் அந்த மின் அஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளன. யாருக்கும் ஓட்டு போட வேண்டாம் என வேண்டுகோளை வைத்து முடியும் அந்த கட்டுரையில் எதை செய்தாலும் குறை கூறி சிதைக்கும் மனப்பான்மையும் ,சாத்தியமில்லா தீர்வுகளும் தான் மிகுதியாக உள்ளன. அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் தலித்துக்கள் பாதிக்கப்பட்டதாக புதிதான ஒன்று போல சொல்லியிருக்கும் வேந்தன் அடிப்படையில் ஒன்றை மிகத் தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும். தலித்துகள் மீதான வன்முறை என்பதும்…அடக்குமுறை என்பதும் அதிமுக ஆட்சிக்கு மட்டும் சொந்தமானது அல்ல.இங்கே கும்பகோணம் பகுதிகளுக்கு வந்து பாருங்கள். திமுக உள்ளூர் அரசியல் பிரமுகர் மூலமாக தான் காட்டூர் என்ற பகுதியில் வைக்கப்பட்ட அண்ணல் அம்பேத்கார் சிலை அகற்றப்பட்டது. அதன் விளைவாக நடைபெற்ற போராட்டங்களில் தலித் இளைஞர்கள் மீது எண்ணற்ற வழக்குகள் போடப்பட்டன. நீலப்புலிகள் இயக்கம் என்ற தலித் இயக்கம் தான் அந்த போராட்டத்தை இது நாள் வரை கூர் மழுங்காமல் வைத்து போராடி வருகிறது. எல்லா ஆட்சியிலும் தான் தலித் மக்கள் மீதான வன்முறை நடந்துக் கொண்டே இருக்கிறது..இதை நான் சொல்வதால் தலித்துக்கள் மீதான வன்முறையை விட்டு விடலாம் என்று பொருளல்ல.. இன்று அனைத்திற்கும் அப்பாற்பட்டு ஒரு உணர்வு மிக்க ஒரு விஷயத்தில் கை கோர்த்து நிற்கிறோம்
அது இன எதிரி காங்கிரஸை தோற்கடிப்பது.வேந்தன் சொல்வது போல தேர்தலை தமிழுணர்வாளர்களும், இன உணர்வாளர்களும் புறக்கணித்தால் அது யாருக்கு சாதகமாக அமையும்…? இதற்கு வேந்தன் நேரடியாக காங்கிரஸ்க்கு ஓட்டு கேட்கலாம். வீடு எரிந்துக் கொண்டிருக்கிறது ..தூய்மைப் படுத்தப்பட்ட மினரல் வாட்டரை கொண்டுதான் தீயை அணைப்போம் என்கிறார் வேந்தன். நாங்கள் எங்கள் பக்கத்தில் ஓடுகின்ற வாய்க்காலில் ஓடுகின்ற சாக்கடை நீரை கொண்டு தீயை அணைக்கிறோம். ஜெயலலிதாவை ஆதரிப்பது எங்களது பிரதான நோக்கமல்ல.காங்கிரசை தோற்கடிப்பது. அதற்கு ஓட்டு போடாமல் இருப்பதும், 49 o போடுவதும், சுயேட்சைகளுக்கும், சிறிய கட்சிகளுக்கும் வாக்களிப்பதும் தீர்வில்லை. இவ்வாறு செய்தால் ஓட்டுக்கள் பிரிந்து அது காங்கிரஸ்க்கு வெற்றியை அளிக்குமே ஒழிய ,கண்டிப்பாக நம் இனத்திற்கான அரசியல் விருப்பங்களை நிறைவேற்றாது.
காங்கிரஸ் எதற்காக தோற்கவேண்டும் என்பது குறித்தான புரிதல் நம் அனைவருக்குமே உண்டு. இந்த முறை காங்கிரஸ் தோற்பதுதான் நாளை இனநலன்களுக்கு எதிராக செயல்பட எண்ணும் அரசியல் கட்சிகளுக்கு ஒரு அச்சத்தை கொடுக்கும். காங்கிரஸ் வெற்றி பெற்றால் இன்று ஆதரவு தெரிவிக்கும் ஜெயலலிதாவிற்கே நாம் தனி ஈழத்திற்கு ஆதரவு தந்தது தவறு என்ற எண்ணம் உண்டாகி விடும் அல்லவா..? .மக்களின் பொங்கி எழுகின்ற உணர்வினை கண்டு எதிரிகளே நம் கோட்டைக்குள் வருகின்றனர். வருபவர் வந்து நம் கழுத்தறுத்தால் …நாம் கொண்டாடிய கருணாநிதிக்கே இந்த கதி என்றால் … எதிரிக்கு எந்த கதி என்பதை காலம் சொல்லும்.
அண்ணன் சீமான் இடதுசாரி தமிழ் தேசிய அரசியல் பரப்பில் இன்று மின்னும் நம்பிக்கையாக தெரிகிறார்.அவரின் அப்பழுக்கற்ற தியாகமும், போர்க்குணமும் எண்ணற்ற இளைஞர்களை கவர்ந்து வருகிறது. காங்கிரஸ் தோற்பது மட்டும் தான் எங்கள் நோக்கமாக இருக்கிறது.தோற்றால் ஈழ அவலம் தீர்ந்திடுமா…என்ற கேள்விக்கு…எங்களிடம் இப்போதைக்கு பதிலில்லை. அதற்காக எம் இனத்தை அழித்தவர்களை, துணை போனவர்களை எங்களால் எதன் பொருட்டும் வெற்றி பெற அனுமதிக்க இயலாது. தனி ஈழம் அமைத்து தருவேன் என்று ஜெயலலிதாவின் சொல்லுக்கு இந்த முறை வெற்றியை கொடுத்துதான் பார்ப்போமே..வசனங்களை நம்பியும்..வாதுரைகளை நம்பியும் எத்தனை முறை நாம் வாய்க்கரிசி போட்டுக்கொண்டதில்லையா….? – நம்பிக்கைதான் வாழ்க்கை..
தேர்தல் புறக்கணிப்பு என்பதற்கு பதிலாக நேரடியாக காங்கிரஸ்க்கு ஓட்டு போடுங்கள் என்று வேந்தன் நேரிடையாக கேட்டுவிடலாம். இப்படி உணர்வாளர்களை ஓட்டு போடாமல் தடுப்பது யாருக்கு உதவும் என்று நினைக்கிறீர்கள்…கண்டிப்பாக அது காங்கிரஸ்க்குதான் தட்டில் வெற்றியை வைத்து அளித்து போல ஆகும். எதை எதையோ நினைத்து அவலை இடிப்பது போல..சீமானை போகிற போக்கில் சம்பந்தமே இல்லாமல் பொத்தாம் பொதுவாக விமர்சித்து விட்டு போவது எந்த விதத்திலும் நியாயமில்லை.
இழிவிலும்,அவலத்திலும் சிக்குண்டு கிடக்கிறது நம் இனம். எதிர்காலம் ஒன்றே நமக்கெல்லாம் உண்டா என்ற கேள்வியோடும்..பதைபதைப்பும்,விரக்தியும்,வேதனையும் மிஞ்ச ..ஏதாவது நல்லது நடக்காதா என்ற கனவில் அலைகிறோம் நாங்கள். இணையத் தளங்களில் எழுதினாலும் களத்திலும் இறங்கி இணையத்தமிழர் இயக்கம், உலகத் தமிழ் மக்கள் அரங்கம், தமிழ்நாடு அரசியல், தமிழ் இளையோர் கூட்டமைப்பு,என பல்வேறு குழுமங்களை சேர்ந்த தோழர்கள் வீதியில் இறங்கி காங்கிரசை வீழ்த்தி விட முயன்று கொண்டு இருக்கின்றனர். அண்ணன் சீமானும் அதைத்தான் செய்கிறார். எது இப்போதைய உடனடி தேவை என்று புரிந்துக் கொள்வது மிக அவசியம். இனம் ,மொழி…என்று ஏதாவது ஒன்று இருந்தால் தான் வேந்தன் போன்றோர் போகிற போக்கில் எழுதி விட்டு போக முடியும்.தேர்தல் புறக்கணிப்பு என்ற சொல்லுக்கு எங்களைப் பொறுத்தவரை இப்போதைய அர்த்தம் காங்கிரசை காப்பாற்றுவது.
அண்ணன் சீமான் உலகமெங்கும் வாழும் தமிழர்களின் அடையாளமாய் இருக்கிறார்.முழங்கி விட்டு போவது மட்டுமில்லாமல் களத்தில் இறங்கியும் எதிரிகளை நிர்மூலப்படுத்தி வருகிறார்.இந்த இனத்திற்காக தனிமைச் சிறைக் கண்டு,தடைகள் பல உடைத்து ,தியாகத்தின் சின்னமாக…நாம் காணும் புரட்சிக்காரனாக இருக்கிறார். இது போன்று கட்டுரைகள் வரைவது அவரை பாதிப்பதை விட..ஒட்டு மொத்த இனவெழுச்சி உணர்ச்சியையே அது சிதைக்கும்..வேண்டாம்.. நம்மை நாமே திட்டிக் கொள்ளவும்..கூட்டம் சேர்த்துக் கொண்டு குறை கூறி ஏசிக் கொள்ளவும் வேறு காலங்கள் வரும்..இதுவல்ல நேரம்.
காங்கிரசினை தோற்கடிப்போம்..தேர்தல் களத்தினில் துரோகிகளை அழிப்போம்…எதிரியாய் இருப்போர் ஒன்று அழிய வேண்டும்…இல்லையேல் நண்பர்களாக வேண்டும்…இல்லையேல் நண்பர்கள் போலவாவது நடிக்க வேண்டும்…இது எது சரி என்பதை எதிரியே தீர்மானிக்கட்டும்.
என்னை தாக்கிய அம்பைத்தான்
இன்று ஆயுதமாக ஏந்தி இருக்கிறேன்…
அது என்னை காப்பாற்றாமல் போனாலும்
பரவாயில்லை..
எதிரிகளை வீழ்த்தட்டும்

எங்கள் அண்ணன் சீமான் தான் இது

வேந்தன் என்பவர் பெயரில் எங்கள் சீமானா இது..? என்ற தலைப்பில் எனக்கு ஒரு மின் அஞ்சல் வந்துள்ளது. அண்ணன் சீமான் இப்போது அ.இ.அ.தி.மு.வை ஆதரிப்பது குறித்த நிலைப்பாடு குறித்து மிக தவறுதலான ,உள்ளீடற்ற வெற்றுக் கருத்துக்கள் அந்த மின் அஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளன. யாருக்கும் ஓட்டு போட வேண்டாம் என வேண்டுகோளை வைத்து முடியும் அந்த கட்டுரையில் எதை செய்தாலும் குறை கூறி சிதைக்கும் மனப்பான்மையும் ,சாத்தியமில்லா தீர்வுகளும் தான் மிகுதியாக உள்ளன. அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் தலித்துக்கள் பாதிக்கப்பட்டதாக புதிதான ஒன்று போல சொல்லியிருக்கும் வேந்தன் அடிப்படையில் ஒன்றை மிகத் தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும். தலித்துகள் மீதான வன்முறை என்பதும்…அடக்குமுறை என்பதும் அதிமுக ஆட்சிக்கு மட்டும் சொந்தமானது அல்ல.இங்கே கும்பகோணம் பகுதிகளுக்கு வந்து பாருங்கள். திமுக உள்ளூர் அரசியல் பிரமுகர் மூலமாக தான் காட்டூர் என்ற பகுதியில் வைக்கப்பட்ட அண்ணல் அம்பேத்கார் சிலை அகற்றப்பட்டது. அதன் விளைவாக நடைபெற்ற போராட்டங்களில் தலித் இளைஞர்கள் மீது எண்ணற்ற வழக்குகள் போடப்பட்டன. நீலப்புலிகள் இயக்கம் என்ற தலித் இயக்கம் தான் அந்த போராட்டத்தை இது நாள் வரை கூர் மழுங்காமல் வைத்து போராடி வருகிறது. எல்லா ஆட்சியிலும் தான் தலித் மக்கள் மீதான வன்முறை நடந்துக் கொண்டே இருக்கிறது..இதை நான் சொல்வதால் தலித்துக்கள் மீதான வன்முறையை விட்டு விடலாம் என்று பொருளல்ல.. இன்று அனைத்திற்கும் அப்பாற்பட்டு ஒரு உணர்வு மிக்க ஒரு விஷயத்தில் கை கோர்த்து நிற்கிறோம்
அது இன எதிரி காங்கிரஸை தோற்கடிப்பது.வேந்தன் சொல்வது போல தேர்தலை தமிழுணர்வாளர்களும், இன உணர்வாளர்களும் புறக்கணித்தால் அது யாருக்கு சாதகமாக அமையும்…? இதற்கு வேந்தன் நேரடியாக காங்கிரஸ்க்கு ஓட்டு கேட்கலாம். வீடு எரிந்துக் கொண்டிருக்கிறது ..தூய்மைப் படுத்தப்பட்ட மினரல் வாட்டரை கொண்டுதான் தீயை அணைப்போம் என்கிறார் வேந்தன். நாங்கள் எங்கள் பக்கத்தில் ஓடுகின்ற வாய்க்காலில் ஓடுகின்ற சாக்கடை நீரை கொண்டு தீயை அணைக்கிறோம். ஜெயலலிதாவை ஆதரிப்பது எங்களது பிரதான நோக்கமல்ல.காங்கிரசை தோற்கடிப்பது. அதற்கு ஓட்டு போடாமல் இருப்பதும், 49 o போடுவதும், சுயேட்சைகளுக்கும், சிறிய கட்சிகளுக்கும் வாக்களிப்பதும் தீர்வில்லை. இவ்வாறு செய்தால் ஓட்டுக்கள் பிரிந்து அது காங்கிரஸ்க்கு வெற்றியை அளிக்குமே ஒழிய ,கண்டிப்பாக நம் இனத்திற்கான அரசியல் விருப்பங்களை நிறைவேற்றாது.
காங்கிரஸ் எதற்காக தோற்கவேண்டும் என்பது குறித்தான புரிதல் நம் அனைவருக்குமே உண்டு. இந்த முறை காங்கிரஸ் தோற்பதுதான் நாளை இனநலன்களுக்கு எதிராக செயல்பட எண்ணும் அரசியல் கட்சிகளுக்கு ஒரு அச்சத்தை கொடுக்கும். காங்கிரஸ் வெற்றி பெற்றால் இன்று ஆதரவு தெரிவிக்கும் ஜெயலலிதாவிற்கே நாம் தனி ஈழத்திற்கு ஆதரவு தந்தது தவறு என்ற எண்ணம் உண்டாகி விடும் அல்லவா..? .மக்களின் பொங்கி எழுகின்ற உணர்வினை கண்டு எதிரிகளே நம் கோட்டைக்குள் வருகின்றனர். வருபவர் வந்து நம் கழுத்தறுத்தால் …நாம் கொண்டாடிய கருணாநிதிக்கே இந்த கதி என்றால் … எதிரிக்கு எந்த கதி என்பதை காலம் சொல்லும்.
அண்ணன் சீமான் இடதுசாரி தமிழ் தேசிய அரசியல் பரப்பில் இன்று மின்னும் நம்பிக்கையாக தெரிகிறார்.அவரின் அப்பழுக்கற்ற தியாகமும், போர்க்குணமும் எண்ணற்ற இளைஞர்களை கவர்ந்து வருகிறது. காங்கிரஸ் தோற்பது மட்டும் தான் எங்கள் நோக்கமாக இருக்கிறது.தோற்றால் ஈழ அவலம் தீர்ந்திடுமா…என்ற கேள்விக்கு…எங்களிடம் இப்போதைக்கு பதிலில்லை. அதற்காக எம் இனத்தை அழித்தவர்களை, துணை போனவர்களை எங்களால் எதன் பொருட்டும் வெற்றி பெற அனுமதிக்க இயலாது. தனி ஈழம் அமைத்து தருவேன் என்று ஜெயலலிதாவின் சொல்லுக்கு இந்த முறை வெற்றியை கொடுத்துதான் பார்ப்போமே..வசனங்களை நம்பியும்..வாதுரைகளை நம்பியும் எத்தனை முறை நாம் வாய்க்கரிசி போட்டுக்கொண்டதில்லையா….? – நம்பிக்கைதான் வாழ்க்கை..
தேர்தல் புறக்கணிப்பு என்பதற்கு பதிலாக நேரடியாக காங்கிரஸ்க்கு ஓட்டு போடுங்கள் என்று வேந்தன் நேரிடையாக கேட்டுவிடலாம். இப்படி உணர்வாளர்களை ஓட்டு போடாமல் தடுப்பது யாருக்கு உதவும் என்று நினைக்கிறீர்கள்…கண்டிப்பாக அது காங்கிரஸ்க்குதான் தட்டில் வெற்றியை வைத்து அளித்து போல ஆகும். எதை எதையோ நினைத்து அவலை இடிப்பது போல..சீமானை போகிற போக்கில் சம்பந்தமே இல்லாமல் பொத்தாம் பொதுவாக விமர்சித்து விட்டு போவது எந்த விதத்திலும் நியாயமில்லை.
இழிவிலும்,அவலத்திலும் சிக்குண்டு கிடக்கிறது நம் இனம். எதிர்காலம் ஒன்றே நமக்கெல்லாம் உண்டா என்ற கேள்வியோடும்..பதைபதைப்பும்,விரக்தியும்,வேதனையும் மிஞ்ச ..ஏதாவது நல்லது நடக்காதா என்ற கனவில் அலைகிறோம் நாங்கள். இணையத் தளங்களில் எழுதினாலும் களத்திலும் இறங்கி இணையத்தமிழர் இயக்கம், உலகத் தமிழ் மக்கள் அரங்கம், தமிழ்நாடு அரசியல், தமிழ் இளையோர் கூட்டமைப்பு,என பல்வேறு குழுமங்களை சேர்ந்த தோழர்கள் வீதியில் இறங்கி காங்கிரசை வீழ்த்தி விட முயன்று கொண்டு இருக்கின்றனர். அண்ணன் சீமானும் அதைத்தான் செய்கிறார். எது இப்போதைய உடனடி தேவை என்று புரிந்துக் கொள்வது மிக அவசியம். இனம் ,மொழி…என்று ஏதாவது ஒன்று இருந்தால் தான் வேந்தன் போன்றோர் போகிற போக்கில் எழுதி விட்டு போக முடியும்.தேர்தல் புறக்கணிப்பு என்ற சொல்லுக்கு எங்களைப் பொறுத்தவரை இப்போதைய அர்த்தம் காங்கிரசை காப்பாற்றுவது.
அண்ணன் சீமான் உலகமெங்கும் வாழும் தமிழர்களின் அடையாளமாய் இருக்கிறார்.முழங்கி விட்டு போவது மட்டுமில்லாமல் களத்தில் இறங்கியும் எதிரிகளை நிர்மூலப்படுத்தி வருகிறார்.இந்த இனத்திற்காக தனிமைச் சிறைக் கண்டு,தடைகள் பல உடைத்து ,தியாகத்தின் சின்னமாக…நாம் காணும் புரட்சிக்காரனாக இருக்கிறார். இது போன்று கட்டுரைகள் வரைவது அவரை பாதிப்பதை விட..ஒட்டு மொத்த இனவெழுச்சி உணர்ச்சியையே அது சிதைக்கும்..வேண்டாம்.. நம்மை நாமே திட்டிக் கொள்ளவும்..கூட்டம் சேர்த்துக் கொண்டு குறை கூறி ஏசிக் கொள்ளவும் வேறு காலங்கள் வரும்..இதுவல்ல நேரம்.
காங்கிரசினை தோற்கடிப்போம்..தேர்தல் களத்தினில் துரோகிகளை அழிப்போம்…எதிரியாய் இருப்போர் ஒன்று அழிய வேண்டும்…இல்லையேல் நண்பர்களாக வேண்டும்…இல்லையேல் நண்பர்கள் போலவாவது நடிக்க வேண்டும்…இது எது சரி என்பதை எதிரியே தீர்மானிக்கட்டும்.
என்னை தாக்கிய அம்பைத்தான்
இன்று ஆயுதமாக ஏந்தி இருக்கிறேன்…
அது என்னை காப்பாற்றாமல் போனாலும்
பரவாயில்லை..
எதிரிகளை வீழ்த்தட்டும்

கவிஞர். தாமரை அவர்களின் பதில்.

vanakkam adv mani avaragale,

  Sorry that I’ve to reply in english as i don have tamil font .  I keep getting a lot of cals from all over the world as a response to my speech .  T;hough i am not an orator, i spoke bec , as you said, that is the only thing we can do now. Your letter explains perfectly the feeling of an ordinary tamilian .  

 Lets hope for a good news.   Til then let us do whatever we can , to eradicate congress from tamil soil. 

  Nanri thozhar.

anbudan thamarai

கவிஞர். தாமரை அவர்களின் பதில்.

vanakkam adv mani avaragale,

  Sorry that I’ve to reply in english as i don have tamil font .  I keep getting a lot of cals from all over the world as a response to my speech .  T;hough i am not an orator, i spoke bec , as you said, that is the only thing we can do now. Your letter explains perfectly the feeling of an ordinary tamilian .  

 Lets hope for a good news.   Til then let us do whatever we can , to eradicate congress from tamil soil. 

  Nanri thozhar.

anbudan thamarai

எப்போது விடியும்…?

அன்புள்ள தோழர் தாமரை அவர்களுக்கு…வணக்கம்.
திரைத்துறையினர் நடத்திய தொடர் முழக்க நிகழ்வில் உணர்வு மிகுந்த தங்களது உரையினை இணையத்தளம் மூலமாக கேட்டேன்..மிகத் தெளிவும், உணர்வும் நிரம்பிய தங்களது பேச்சில் நம் இன உணர்வு பொங்கிப் பாய்ந்தது. நடக்கும் அவலத்தை கேட்பார் யாருமின்றி அழியும் நம் இனத்தின் அழிவை, வலியை மிக அழகாக.நேர்த்தியாக,துணிவாக பதிவு செய்துள்ளீர்கள். பிற மொழி கலப்பின்றி நம் மொழியின் ஊடாகவே நவீன இசையின் அனைத்து உச்சங்களையும் உங்கள் பாடல் வரிகளால் தொட்டு விட்ட தாங்கள் இப்போது நம் இன அழிவினை எதிர்க்கும் ஆயுதமாக உருவாகி உள்ளீர்கள்.. வலி மிகுந்த நேரத்திலும் தங்கள் பணி ஆறுதல் தருகின்றது. 
தாங்கள் சொன்னது போலவே நடக்கும் அவலங்களை கண்டு எதுவும் செய்ய இயலாத, முத்துக்குமார் போல சாகவும் துணிவின்றி தினந்தோறும் நல்ல செய்தி ஏதேனும் வராதா என அலைந்து கொண்டிருக்கும் எண்ணற்ற தமிழர்களில் நானும் ஒருவன். தினந்தோறும் வீதிகளில் இறங்கி போராடுகிறேன்.யார் ஈழத்திற்காக போராட்டம் நடத்தினாலும் வலிய சென்று கலந்துக் கொண்டு கத்தி தீர்க்கிறேன். இரவில் திடுக்கிட்டு விழித்து அவசர அவசரமாக இணையத் தளங்களை மேய்கிறேன். அலை அலையாய் பாய்ந்து வரும் வதந்திகளில் மனதை இழந்து கலங்கி அழுகிறேன்.என்னருகே தூங்கிக் கொண்டிருக்கும் என் மகனும்..ஈழத்தில் இறந்துக்கிடக்கும் மகனும் வெவ்வேறல்ல என்று உணர்ந்து கசிகிறேன். உற்றார், உறவினர், கூட பணிபுரிபவர் என அனைவராலும் என் அலைகழிப்பும், பதைபதைப்பும் வேடிக்கையாகவும் ,விசித்திரமாகவும் பார்க்கப் படும் நிலையில்…உணர்வுள்ள தோழர்களை தேடிப்பிடித்து கவலையும், கலக்கமும் நிறைந்த குரலில் யுத்தக் கள செய்திகளை பகிர்ந்துல் கொண்டிருக்கிறேன். இதுதான் என்னைப் போன்ற எண்ணற்றவர்களின் நிலை.
இரவெல்லாம் தூக்கமின்றி சிவந்து கிடக்கின்றன..பிழைப்பிற்காக நீதிமன்றம் செல்ல வேண்டி நேர்ந்தாலும் உதடுகள் ஒட்டிக் கொண்டு பேச்சு வர மறுக்கிறது..கனத்துப் போன இதயத்துடன் நடக்கவே சிரமமாக உள்ளது..யாரிடமும் பேச விருப்பமற்று தலையை குனிந்தவாறே கடந்து விடுகிறேன். எதிலும் விருப்பமற்று மனம் மரத்துப் போய் வருகிறது. எதையாவது சுவையாக சாப்பிட்டாலோ. நிம்மதியாக கண் மூடி உறங்கினாலோ, கேளிக்கை,சினிமா என ஈடுபட்டாலோ… குற்ற உணர்ச்சியால் உடைந்துப் போய் விடுகிறேன்
என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. என் சகோதர, சகோதரிகளை, குழந்தைகளை, என் போராளிகளை காப்ப்பாற்ற இயலவில்லை.இந்த உணர்ச்சி….என்னுள் குற்ற உணர்ச்சியாய் பதிந்து என்னை நிம்மதியற்றவனாக அலை கழிக்க வைக்கிறது. என்னால் எதையும் இந்த குற்ற உணர்ச்சியை தவிர்த்து விட்டு செய்ய இயலவில்லை. வழக்கறிஞராக உள்ள நான் நீதிமன்றங்களில் என் இன அழிவின் வலியை சுமந்து பணியாற்ற முடியாமல் தவிக்கிறேன். 
இருந்த போதும் நான் போராடாமல் இருந்து விடக்கூடாது என்பதற்காகவே எனக்குள் இருக்கும் வலி மிகுந்த குற்ற உணர்ச்சியை ஆதிக்கம் செலுத்த விடாமல் போராடி வருகிறேன். அதற்கு தங்களைப் போன்றவர்களின் செயல்பாடுகளும், உரைவீச்சுகளும் உதவுகின்றன.
நன்றி.
இந்த இனத்தில் இறுதியாய் உணர்வுள்ள ஒருவன் இருக்கும் வரை கத்தி, கதறி தீர்ப்போம்..
நமக்கு நேர்ந்த அரசியல் துரோகங்களை, வலிகளை நமது பிள்ளைகளிடம் சொல்லிக் கொடுப்போம்.
வரலாற்றின் எந்த பக்கங்களிலும் பார்த்தாலும் கிடைக்காத அறம் நிறைந்த மாவீரர் பிரபாகரன் நம் இனத்தின் தலைவராக இருப்பதை பெருமையாக நம் பிள்ளைகளிடம் கதை கதையாக சொல்லிக் கொடுப்போம்.
அடுத்த தலைமுறையாவது ஏமாறாமல், கையறு நிலைக்கு சிக்காமல், குற்ற உணர்ச்சிக்கு ஆளாகாமல் இருக்கட்டும்.
எப்போது விடியும்…?
விடிந்தாலும்..விடியலை தரிசிக்க விழிகள் இருக்குமா…?
விழிகள் இருந்தாலும்…..விழிகளுக்கு உயிர் இருக்குமா..?
பதில்களில்லா கேள்விகளுடன்
மணி.செந்தில்
www.manisenthil.blogspot.com

எப்போது விடியும்…?

அன்புள்ள தோழர் தாமரை அவர்களுக்கு…வணக்கம்.
திரைத்துறையினர் நடத்திய தொடர் முழக்க நிகழ்வில் உணர்வு மிகுந்த தங்களது உரையினை இணையத்தளம் மூலமாக கேட்டேன்..மிகத் தெளிவும், உணர்வும் நிரம்பிய தங்களது பேச்சில் நம் இன உணர்வு பொங்கிப் பாய்ந்தது. நடக்கும் அவலத்தை கேட்பார் யாருமின்றி அழியும் நம் இனத்தின் அழிவை, வலியை மிக அழகாக.நேர்த்தியாக,துணிவாக பதிவு செய்துள்ளீர்கள். பிற மொழி கலப்பின்றி நம் மொழியின் ஊடாகவே நவீன இசையின் அனைத்து உச்சங்களையும் உங்கள் பாடல் வரிகளால் தொட்டு விட்ட தாங்கள் இப்போது நம் இன அழிவினை எதிர்க்கும் ஆயுதமாக உருவாகி உள்ளீர்கள்.. வலி மிகுந்த நேரத்திலும் தங்கள் பணி ஆறுதல் தருகின்றது.
தாங்கள் சொன்னது போலவே நடக்கும் அவலங்களை கண்டு எதுவும் செய்ய இயலாத, முத்துக்குமார் போல சாகவும் துணிவின்றி தினந்தோறும் நல்ல செய்தி ஏதேனும் வராதா என அலைந்து கொண்டிருக்கும் எண்ணற்ற தமிழர்களில் நானும் ஒருவன். தினந்தோறும் வீதிகளில் இறங்கி போராடுகிறேன்.யார் ஈழத்திற்காக போராட்டம் நடத்தினாலும் வலிய சென்று கலந்துக் கொண்டு கத்தி தீர்க்கிறேன். இரவில் திடுக்கிட்டு விழித்து அவசர அவசரமாக இணையத் தளங்களை மேய்கிறேன். அலை அலையாய் பாய்ந்து வரும் வதந்திகளில் மனதை இழந்து கலங்கி அழுகிறேன்.என்னருகே தூங்கிக் கொண்டிருக்கும் என் மகனும்..ஈழத்தில் இறந்துக்கிடக்கும் மகனும் வெவ்வேறல்ல என்று உணர்ந்து கசிகிறேன். உற்றார், உறவினர், கூட பணிபுரிபவர் என அனைவராலும் என் அலைகழிப்பும், பதைபதைப்பும் வேடிக்கையாகவும் ,விசித்திரமாகவும் பார்க்கப் படும் நிலையில்…உணர்வுள்ள தோழர்களை தேடிப்பிடித்து கவலையும், கலக்கமும் நிறைந்த குரலில் யுத்தக் கள செய்திகளை பகிர்ந்துல் கொண்டிருக்கிறேன். இதுதான் என்னைப் போன்ற எண்ணற்றவர்களின் நிலை.
இரவெல்லாம் தூக்கமின்றி சிவந்து கிடக்கின்றன..பிழைப்பிற்காக நீதிமன்றம் செல்ல வேண்டி நேர்ந்தாலும் உதடுகள் ஒட்டிக் கொண்டு பேச்சு வர மறுக்கிறது..கனத்துப் போன இதயத்துடன் நடக்கவே சிரமமாக உள்ளது..யாரிடமும் பேச விருப்பமற்று தலையை குனிந்தவாறே கடந்து விடுகிறேன். எதிலும் விருப்பமற்று மனம் மரத்துப் போய் வருகிறது. எதையாவது சுவையாக சாப்பிட்டாலோ. நிம்மதியாக கண் மூடி உறங்கினாலோ, கேளிக்கை,சினிமா என ஈடுபட்டாலோ… குற்ற உணர்ச்சியால் உடைந்துப் போய் விடுகிறேன்
என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. என் சகோதர, சகோதரிகளை, குழந்தைகளை, என் போராளிகளை காப்ப்பாற்ற இயலவில்லை.இந்த உணர்ச்சி….என்னுள் குற்ற உணர்ச்சியாய் பதிந்து என்னை நிம்மதியற்றவனாக அலை கழிக்க வைக்கிறது. என்னால் எதையும் இந்த குற்ற உணர்ச்சியை தவிர்த்து விட்டு செய்ய இயலவில்லை. வழக்கறிஞராக உள்ள நான் நீதிமன்றங்களில் என் இன அழிவின் வலியை சுமந்து பணியாற்ற முடியாமல் தவிக்கிறேன்.
இருந்த போதும் நான் போராடாமல் இருந்து விடக்கூடாது என்பதற்காகவே எனக்குள் இருக்கும் வலி மிகுந்த குற்ற உணர்ச்சியை ஆதிக்கம் செலுத்த விடாமல் போராடி வருகிறேன். அதற்கு தங்களைப் போன்றவர்களின் செயல்பாடுகளும், உரைவீச்சுகளும் உதவுகின்றன.
நன்றி.
இந்த இனத்தில் இறுதியாய் உணர்வுள்ள ஒருவன் இருக்கும் வரை கத்தி, கதறி தீர்ப்போம்..
நமக்கு நேர்ந்த அரசியல் துரோகங்களை, வலிகளை நமது பிள்ளைகளிடம் சொல்லிக் கொடுப்போம்.
வரலாற்றின் எந்த பக்கங்களிலும் பார்த்தாலும் கிடைக்காத அறம் நிறைந்த மாவீரர் பிரபாகரன் நம் இனத்தின் தலைவராக இருப்பதை பெருமையாக நம் பிள்ளைகளிடம் கதை கதையாக சொல்லிக் கொடுப்போம்.
அடுத்த தலைமுறையாவது ஏமாறாமல், கையறு நிலைக்கு சிக்காமல், குற்ற உணர்ச்சிக்கு ஆளாகாமல் இருக்கட்டும்.
எப்போது விடியும்…?
விடிந்தாலும்..விடியலை தரிசிக்க விழிகள் இருக்குமா…?
விழிகள் இருந்தாலும்…..விழிகளுக்கு உயிர் இருக்குமா..?
பதில்களில்லா கேள்விகளுடன்
மணி.செந்தில்
www.manisenthil.com

சீமான்…கம்பிகளைத் தாண்டி வீசும் காற்று.

.
திமிங்கிலம்
ஆழ ஆழ அது செல்கையில்
உயர உயர எழுகிறது
அதன் வால்!
(ஜென் கவிதை) -யோஸா பூஸன்.

கால வரலாற்றில் தேவை ஏற்படும் இயற்கையே தனக்காக தேவையை தானே உருவாக்கும் . அப்படித்தான் அண்ணன் சீமான் உருவாகியுள்ளார்.உலகின் மிகப்பெரிய ஜனநாயக சுதந்திர நாட்டில் தனது இன மானத்திற்கான கருத்தை பேசியதால் புதுச்சேரியின் நெடிய சிறை மதிர்ச்சுவர்களுக்கு ஊடே ,பல அடுக்கு பாதுகாப்பு வளையங்களுக்கு மத்தியில் எல்லாவிதமான சுதந்திரங்களும் மறுக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார்.
இணையத் தமிழர் இயக்கம் சார்பாக 2-04-09 அன்று அண்ணன் சீமானை காண செல்ல வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நான், தோழர்,விஷ்ணுபுரம் சரவணன்,ஒட்டக்கூத்தர், கவிஞர்.கண்ணகன், இணையத்தளங்களில் புதிய தமிழுணர்வாளராக உருவாகி வரும் வினோபா உட்பட தமிழுணர்வாளர்கள் புதுச்சேரிக்கு பயணமானோம். புதுவையில் அண்ணன் சீமானை காண புறப்பட்ட போது அருமைத் தோழர் நெல்லை அருள்மணி மதியம் 2 மணிக்கு வந்தால் அண்ணனை சந்திக்கலாம். இன்று வியாழக்கிழமை. ஆதலால் அனைவருக்கும் அனுமதி உண்டு என்ற மகிழ்வான தகவலை தந்தார். நாங்கள் சரியாக 1.50 மணிக்கு சிறை வாசலுக்கு சென்று விட்டோம். அங்கு எங்களை தோழர் ஓட்டக்கூத்தர்,பெரியார் திக அண்ணன் லோகு. அய்யப்பன், நெல்லை அருள்மணி ஆகியோர் எங்களை வரவேற்றனர். அங்கு சென்றவுடன் அண்ணன் சீமானை பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை என்ற தகவல் எங்களை பேரிடியாக தாக்கியது. தமிழ் பெரியவர் இறைக்குருவனார் , இயக்குநர் அமீர், மற்றும் சீமானின் குடும்பத்தினர் யாவரும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வெளியே காத்திருந்தனர்.

நான் சிறை வெளி வாயிலில் இருந்த வாயிற் காவலரிடம் அண்ணன் சீமானை காணவேண்டும் என்று கூறி அனுமதி கோரும் விண்ணப்ப படிவத்தினை கேட்டேன்.மிகுந்த இறுக்கமான குரலில் யாருக்கும் அனுமதி கிடையாது என்று காவலர் கூறினார். நான் உங்கள் மேலதிகாரிகளிடம் பேச வேண்டும் என்று கேட்ட போது எனக்கு அதே இறுக்கமான பார்வை மட்டுமே பதிலாக கிடைத்தது. பெரியார் தி.க அமைப்பாளர் அண்ணன் லோகு.அய்யப்பன் எங்களை எப்படியாவது உள்ளே அனுப்ப எல்லாவிதமான முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருந்தார். புதுவை மாநில சிறைத்துறை ஐ.ஜிக்கு அண்ணன் லோகு அய்யப்பன் அலை பேசியில் பேசி தோல்வி அடைந்த நிலையில் , என்னை பேச சொல்லி அலை பேசியை அளித்தார். கிட்டத்தட்ட அந்த வேற்று மாநில சிறைத்துறை அதிகாரியிடம் நான் எவ்வளவு பேசியும் யாருக்கும் அனுமதி கிடையாது என்றும், தேர்தல் ஆணையத்திடமிருந்து சீமானை பார்க்க வரும் பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது என்ற உத்தரவு வந்துள்ளதாகவும், ஒரு வாரத்தில் மூன்றே மூன்று பேருக்குத்தான் அனுமதி என்றும் கண்டிப்பாக கூறினார்.மேலும் நேற்றைய தினம் வந்த பண்ருட்டி எம்.எல்.ஏ வேல்முருகன் மற்றும் பாமக தலைவர் கோ.கா.மணிக்கும் அனுமதி மறுக்கப்பட்டதை சொல்லி மறுத்தார்
பிறகு என்னை நான் வழக்கறிஞர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகும் இதே இழிபறி நிலைநீடித்தது.ஒரு ஜனநாயக நாட்டில், அனைத்து சுதந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக சட்டம் சொல்லியுள்ள ஒரு நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஒரு நபரை அவரது வழக்கறிஞர்கள் சந்திக்க உரிமை உண்டு என்றும் மறுக்கும் பட்சத்தில் இது குறித்து தமிழுணர்வாளர்கள், வழக்கறிஞர்கள் மீண்டும் போராட துவங்குவார்கள் என்றும், உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடப்படும் என்றும் கடுமையான குரலில் நானும் விவாதிக்க ஆரம்பித்தேன். இருவருக்கும் காரசாரமான விவாதங்கள் நீண்டு கொண்டே இருந்தன.பிறகு அரைமணி நேரம் தொடர்ந்த உரையாடலின் முடிவில் வழக்கறிஞர்களை மட்டும் வழக்கு குறித்து பேச அனுமதிப்பதாக சலிப்பான குரலில் கூறினார்.
எங்களுடன் வந்திருந்த தமிழுணர்வாளர்கள் மிகப்பெரிய ஏமாற்றம் அடைந்தனர். பிறகு அங்கு இருந்தவர்கள் முதலில் வழக்கறிஞர்கள் என்ற முறைமையில் மணி.செந்திலும், வினோபாவும் மட்டுமாவது பார்த்து வரட்டும் என்று முடிவு எடுத்தனர் .தோழர் நெல்லை அருள்மணி அங்கு இருந்த அனைவரிடமும் இருந்த புத்தகங்களை பெற்று என்னிடம் அளித்தார்.தமிழ்ப் பெரியவர் இறைக்குருவனார் தான் எடுத்து வந்த பெருஞ்சித்திரனார் புத்தகங்களை ஏமாற்றத்துடன் கண்கள் பனிக்க என்னிடம் அளித்தார்.
சீமான் என்பவர் தனி மனிதன் அல்ல. தன் சொந்த சகோதர சகோதரிகளை காப்பாற்ற வழி தெரியாமல் தனக்குள்ளேயே சிதைந்து கொண்டிருக்கும் ஒரு தேசிய இனத்தின் குரல் என்பதை அங்கு நின்ற தமிழ்உணர்வாளர்கள் அனைவரும் நிரூபித்துக் கொண்டிருந்தனர். நானும் ,வினோபாவும் அவசர அவசரமாக புத்தகங்களை எடுத்துக் கொண்டு சிறையின் மிகப் பெரிய வாயிற் கதவின் வழியே உள் நுழைந்தோம்.
நான் பிறந்தது முதல் இனத்திற்காக எவ்வித சமரசமுமின்றி போர்க்குரல் கொடுத்து,அனைத்து அதிகார மையங்களுக்கும் தன் வீரம் செறிந்த உரைகளினால் பெரும் அச்சுறுத்தலாக திகழ்ந்துக் கொண்டிருக்கும் சாசகம் நிறைந்த ஒரு புரட்சியாளரை சந்திக்க போவது இதுதான் முதல் முறை. இன்று காலை நான் குடந்தையில் இருந்து கிளம்பியது முதலே மிகுந்த உணர்வு வயப்பட்ட நிலையில் இருந்தேன்.
அண்ணனை சிறையில் காணப்போகும் ஆவலும், உணர்வும் என்னை வெகுவாக ஆட்டிப்படைக்க சிறைச்சாலையின் இரண்டாவது மிகப்பெரிய இரும்பு கதவுகளுக்கு முன்னால் போய் நின்றேன். கூட வந்த வினோபா அங்கிருந்த காவலரிடம் நாங்கள் வந்திருக்கும் நோக்கம் பற்றி சொன்னார். அதற்கு அங்கிருந்த யாரிடமும் எவ்வித பதிலுமில்லை. அதிகாரிகள் இல்லை என்றும் ,வழக்கறிஞர்கள் சந்திப்பது குறித்து அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் மீண்டும் எங்களை தடுக்க துவங்கும் முயற்சியில் இறங்கியது புதுவை சிறைத்துறை. மீண்டும் அங்கேயும் விவாதம். அண்ணன் சீமானை பார்க்காமல் நாங்கள் சிறையை விட்டு வெளியே வர மாட்டோம். எங்களையும் இங்கேயே அடையுங்கள் என்று நாங்கள் இருவரும் உரத்தக் குரலில் விவாதிக்க துவங்கினோம். நேரம் ஆகிக் கொண்டு இருந்தது. அங்கிருந்த அதிகாரிகள் உள்ளே போவதும் ,வருவதுமாக இருந்தனர். ஆலோசனைகள் செய்தனர். நாங்களும் தளராமல் அதிகார மையத்தின் அனைத்து பிரிவுகளோடும் போராடிய வண்ணம் நின்று கொண்டிருந்தோம்.
இறுதியாக சீருடை அணியாத ஒரு அதிகாரி நீங்கள் போய் பார்க்கலாம். ஆனால் நிபந்தனை..புத்தகங்கள் கொடுக்க கூடாது.வழக்கைப் பற்றி மட்டும் தான் பேச வேண்டும் என்றார். …
என்னால் இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை. புத்தகங்கள் கூட கொடுக்க கூடாதென்றால்….அப்படியென்ன சீமான் யாரும் செய்யக் கூடாத கடும் குற்றத்தை செய்து விட்டார் ..இனத்திற்காக,இன அழிவினை கண்டித்து ஒருவன் குரல் எழுப்பினால் அவ்வளவு பெரிய குற்றமா.. என்றெல்லாம் கத்திக் கொண்டிருந்தேன். அதற்குள் கூட வந்த வினோபா முதலில் அண்ணனை பார்த்து விடுவோம்..மீதத்தை வந்து வைத்துக்கொள்ளலாம் என்றார். அனைத்து விதமான பரிசோதனைகளுக்கு மத்தியில்…எங்களது அலைபேசிகள் வாங்கப்பட்டன
இறுதியாக எளிதாக திறக்காத அந்த மாபெரும் அடக்குமுறையின் சின்னமாய் உயர்ந்திருந்த இருப்புக் கதவு தந்தை பெரியாரின் வியர்வையினால் எங்களுக்கு கிடைத்த கல்விக்காக திறந்தது.
உள்ளே மங்கலான வெளிச்சம்.வரிசையாக அதிகாரிகளின் அறைகள். வேக வேகமாக நடந்து செல்லும் போதே ஒரு அறையில் ..வாருங்கள் வழக்கறிஞர்களே…என்ற குரல்..
தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று எந்தக் குரல் உணர்வூட்டியதோ…என் தமிழுக்கு எதிரியை நிர்மூலமாக்கி சிதற அடிக்கும் வல்லமை உண்டு என்று எந்த குரல் நிருபித்ததோ..பெரியாரையும், அம்பேத்காரையும், காரல் மார்க்ஸையும், தலைவர் பிரபாகரனையும் ஒரே அலைவரிசைக்குள் கொண்டு வந்து எந்த குரல் அசத்தி உயர்த்திக் காட்டியதோ….மங்கி மக்காய் கிடந்த தமிழனை தன் அதட்டலால் எந்த குரல் மானமுள்ள போராளியாக்க துடித்ததோ …
அதே குரல்…
குரல் கேட்டவுடன் எனக்கு முன்னால் பாய்ந்து போனார் வினோபா..அந்த நொடியிலேயே என் கண்கள் கலங்கத் துவங்கி விட்டன..தவிப்புடன், பதைபதைப்புடன் நானும் அந்த அறைக்குள் போனேன்.
அங்குதான்..
தாயகத் தமிழகத்தில் இந்த தலைமுறையின் தன்னிகரற்ற போர் முரசு அண்ணன் சீமான் நின்றுக் கொண்டிருந்தார். எனக்கு முன்னால் சென்ற வினோபா கைக் குலுக்கி கொண்டே நின்றார்..
நான் ஆச்சர்யமும், தவிப்பும், பதைபதைப்பும்..இன்னும் பிற அனைத்து விதமான உணர்வு கலவைகளோடும் நின்றுக் கொண்டிருந்தேன்.ஒரு நொடி உற்று நோக்கிய பிறகு அண்ணன் வாடா என்று சொன்னதுதான் தாமதம் ..பாய்ந்து கட்டி அணைத்தேன். என் கண்களில் நான் தேக்கி வைத்திருந்த கண்ணீர் உடைந்துக் கொண்டு வெள்ளமென பாய்ந்தது.
ஒரு சிறைச்சாலையில்… சிறையில் அடைக்கப்பட்டவரை பார்க்கப் போன ஒரு வழக்கறிஞர் உணர்வினால் உந்தப்பட்டு கண்ணீர் சிந்துவதும், உணர்ச்சி வசப்படுவதும் என் தொழில் நியதிகளுக்கு முரணானதுதான். ஆனால் நான் அந்த இடத்தில் வழக்கறிஞராகவோ ,அதிகாரத்தின் கரங்களுக்குள் சிக்கிக் கொண்டவரை மீட்கப் போன மீட்பராகவோ… இருக்க முடியவில்லை.மாறாக அனைத்து விதமான சூழ்ச்சிகளுக்கும் சிக்கிக் கொண்டு, தன் கண் முன்னால் சொந்த சகோதர சகோதரிகளை பறிக்கொடுத்து…எல்லாவிதமான அரசியல் பித்தலாட்டத்தனங்களிலும் விற்கப் பட்டு…மீறி எழும் இனமான உணர்வினையும் ..சுய வாழ்க்கை நிர்பந்தங்களுக்காக அடக்கி, அடங்கிக் கிடந்த ஒரு தேசிய இனத்தின் உக்கிர வலியாய்…சூழ்ந்திருக்கும் இறுகிய இருட்டினில் துடித்தெழுந்த வெளிச்சத் தெறிப்பாய்…அண்ணன் சீமானின் தம்பியாகத்தான் என்னால் இருக்க முடிந்தது.
என் புலன்கள் என்னையும் மீறி…ஆதிச்சுழியாய்..சுனையாய் என்னுள் சுரந்து கொண்டிருக்கும் என் இன மூதாதையின் மிச்சமாய் இன்னும் என்னுள் ஒளிந்திருக்கும் உணர்வின் தொடர்ச்சிகளில் என்னை நான் ஒப்புக் கொடுத்துவிட்டேன் .அண்ணனும் கலங்கி..நானும் கலங்கி இருவரும் எங்களுக்குள் இருந்த நெருக்கத்தை உணர்ந்த அற்புத தருணம் அது.
அப்பா ..எப்படியிருக்கார்..திமுக காரர் ..அவரிடம் வம்பு வளர்க்காத..பாவம் டா அவரு..என்று என் தந்தையைப் பற்றி நலம் விசாரிக்க துவங்கிய அண்ணன்..அறிவுமதி அண்ணனைப் பற்றி பேச துவங்கியவுடன் மெளனமாக என்னை உற்று நோக்கினார். அண்ணனை பத்திரமாக பார்த்துக்குங்கடா…தினந்தோறும் தொலைபேசியில் அவருடன் பேசி அவரைத் தேற்று என்றார். தோழர் பாமரனின் விசாரித்தல்களை சொன்னபோது அவர் மிகவும் உற்சாகமாக பாமரனை பற்றி விசாரிக்க துவங்கினார்.
எங்களைச் சுற்றிலும் காக்கி உடைகள் நாங்கள் பேசுவதை ,கலங்குவதை கவனித்துக் கொண்டும் ,பதிவு செய்துக் கொண்டும் இருந்தன…
நான் படித்த சட்டமும், பட்டமும் என் வாழ்நாளில் எனக்கு மிகவும் உபயோகப்பட்ட தினமாய் இதை நான் கருதுகிறேன் என்று அண்ணனிடம் சொன்னேன். அதற்கு அண்ணன் சிரித்தார்.
சிறை ஒரு மனிதனை உளவியல் ரீதியில் பலவீனப்படுத்தி, சீர்குலையச் செய்யும் என்பதை சீமான் முற்றிலும் பொய்யாக்கிக் கொண்டு இருந்தார். அவருடைய வருத்தமெல்லாம் ஒட்டுப் பொறுக்கி அரசியலில் சிக்கிக் கொண்டு ஈழத்து அவலங்களுக்கான தார்மீக எதிர்ப்புக் குரல் மங்கி விட்டதே என்று. தனக்கு யார் குறித்தும் வெறுப்போ, வருத்தமோ இல்லை என்றார் அண்ணன் சீமான். இன்று இன எதிரிகளை வெற்றிப் பெற விட்டோமானால் எதிர்காலம் என்ற ஒன்றே இந்த இனத்திற்கில்லை என்பதை நாங்கள் இருவரும் பகிர்ந்துக் கொண்டோம். மேலும் உலகமெல்லாம் இருக்கின்ற தமிழுணர்வாளர்களை ஒரு இழையில் கொண்டு வர இணையத்தமிழர் இயக்கம் துவங்கப்பட்டுள்ளதை மகிழ்வுடன் கேட்டார். உலகத் தமிழர்களுக்கும், இயக்கத்திற்கும் தன்னுடைய அன்பினையும், வாழ்த்துக்களையும் உவகையோடு சொன்னார் அந்த மாமனிதன்.விடுதலைக்கு பிறகு செய்ய வேண்டிய பணிகள் குறித்து வினோபா பேசினார்.
வெளியே பலரும் காத்துக் கொண்டிருக்கிற விபரமும், அவரது அண்ணன் மகள் யாழினி பிறந்த நாள் வாழ்த்து பெற வந்திருப்பதையும் அண்ணனிடம் சொன்ன போது அவரின் முகம் இறுகியது.
சுற்றி நின்ற காவலர்களை பார்த்து ஏன் இப்படி என்னையும், என்னை பார்க்க வருகின்றவர்களையும் நடத்துகிறீர்கள் …அடிப்படை உரிமை கூட எனக்கு மறுக்கப்படுகிறது. தனிமைச் சிறை. புத்தகங்கள் கூட அனுமதிக்கப்படவில்லை..பார்வையாளர்களை அனுமதிப்பதில்லை. முதலில் வியாழக்கிழமை என்றீர்கள்.இப்போது வியாழக்கிழமை 3 பேர் மட்டும் அனுமதி என்கிறீர்கள். என் குடும்பத்தை பார்க்க கூட எனக்கு அனுமதியில்லை ..ஏன் இப்படி அனைத்து சட்ட விதிகளுக்கும் புறம்பாக நடந்துக் கொள்கிறீர்கள் என அண்ணன் கேட்டார்.
அந்த சிறைச்சாலையில் அண்ணன் சீமானுக்கு உடற்பயிற்சி செய்யவும், நடைப்பயிற்சி போகவும் கூட அனுமதியில்லை. தமிழினத்திற்காக மிகப் பெரிய கட்டுப்பாடுகள் என்ற பெயரில் நடத்தப்படும் கொடுமைகளுக்கு உள்ளாகி வருகிறார் அண்ணன் சீமான்.எல்லாவிதமான அடிப்படை மனித உரிமைகளும் அவருக்கு அங்கே மறுக்கப்பட்டு வருகிறது.தேர்தல் ஆணையம் அவருக்கு மட்டும் சிறப்பு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக அங்கு உள்ள காவலர்கள் தெரிவித்தனர்.அந்த உத்திரவின் நகலை கேட்டதற்கு அதையும் தர மறுத்து விட்டனர்.

இதற்குள் வெளியே நின்ற விஷ்ணுபுரம் சரவணன்,ஒட்டக்கூத்தர்,உள்ளிட்ட தமிழுணர்வாளர்கள் வாயிலை மறைத்து போராட்டத்தை துவக்கி இருந்தனர். அதை தூரத்தில் இருந்து அந்த அறையில் இருந்த மிகச்சிறிய ஜன்னல் மூலம் அண்ணன் சீமான் பார்த்தார். அவர் மேலும் உணர்ச்சிவயப்பட துவங்கினார். என்னை பார்க்க வரும் என் உறவுகளை ஏன் இப்படி நடத்துகிறீர்கள்..ஏன் அனுமதி ,மறுக்கிறீர்கள் என்று காவலர்களிடம் அவர் கேட்ட போது அவர்களிடம் பதிலில்லை.
எதற்கும் அவர்களிடத்தில் பதில் கிடையாது. பதில் தர வேண்டிய அதிகாரிகள் யாரும் அங்கில்லை.
அவரது அண்ணன் மகள் யாழினிக்கு அவர் பிறந்தநாள் வாழ்த்து கவிதை ஒன்று எழுதி வைத்திருந்தார்.அந்த தாளை என்னிடம் அளித்து கொண்டு சென்று என் மகளிடம் கொடு என்றார்.நானும் அதை பெற்று மடித்த போது ..மடிக்காமல் கொண்டு செல் என்றார் அந்த மயிலிறகு மனசுக்காரர்.
நேரம் ஆகி விட்டது என அலுவலர்கள் தெரிவித்தனர் . அண்ணனிடம் மீண்டும் கைக்குலுக்கி கொண்டோம்.வீட்டில் உன் மகனிடம் பெரியப்பா விசாரித்தான் என சொல் என்று சொன்ன அந்த நேசமிகு உறவினை கண்கள் பனிக்க பார்த்து விட்டு மெதுவாய் அறையை விட்டு வெளியே வந்தேன்.
வெளியே அதிகாரிகள் நின்று கொண்டிருந்தனர். நான் வெளியே நின்ற அதிகாரிகளிடம் அவர் நம்மை நேசித்த குற்றத்திற்காக உள்ளே இருக்கிறார். எனக்காகவும்,உங்களுக்காகவும் தான் அவர் பேசினார். அந்த மாபெரும் மனிதனை உரிய மதிப்போடும், உரிமைகளோடும் நடத்துங்கள் என்றேன்.
என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. மீண்டும் அறைக்குள் சென்றேன். அண்ணன் சீமான் அமைதியாய் அமர்ந்திருந்தார். என்னடா தம்பி என கேட்டார் .மீண்டும் அந்த மகத்தான சகோதரனை மீண்டும் இறுக்க கட்டி அணைத்தேன்..நீங்கள் எங்களுக்கு வேண்டும்..கொள்கையாய்..வழிகாட்டியாய்..ஆசானாய்..உறவாய் என்றேன்..
கண்டிப்பாக..என் வாழ்க்கை என் தம்பிகளுக்காகத்தான் என்றான் அந்த பாசமிகு அண்ணன்.
சிறை வெளியே தோழர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தனர்.நான் சீமானின் அண்ணன் மகள் யாழினிக்கு அவர் அளித்த கவிதையினை வாசித்து காண்பித்து அளித்தேன். அந்த பெண்ணும், அவரது தாயாரும் கதறி அழுதனர்.
தோழர்களின் போராட்டம் வலுக்கவே..இறுதியாக மூவருக்கு மட்டும் பலவிதமான கெடுபிடிகளோடு அனுமதி தந்தது புதுவை சிறைத்துறை. இயக்குனர் அமீர், இறைக்குருவனார், யாழினி ஆகியோர் மட்டும் உள்ளே சென்று பார்த்து விட்டு வந்தனர்.
எல்லாவித உரிமைகளும் மறுக்கப்பட்ட நிலையில்,,,தேர்தலை மட்டுமே மனதில் வைத்து சீமானை சிறையில் அடைத்து வைத்திருக்கிறது. கருத்துச் சுதந்திரம் என்ற அடிப்படை உரிமைக்கு எதிராக சீமானின் சிறை வாசம் இருக்கிறது. காங்கிரஸ்க்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்ல கலைஞர்.மு.கருணாநிதிக்கு உரிமை இருக்கிறது என்றால்…ஓட்டு போடாதீர்கள் என்று சொல்ல சீமானுக்கு உரிமை இல்லையா..?

விடுதலைப்புலிகளுக்கு எதிராக காங்கிரஸ் முழங்கலாம் என்றால்….அதை ஆதரித்து சீமான் முழங்கக்கூடாதா…இந்த நாட்டில் துரோகி கருணாவை பாராட்டி பேசினால் தவறில்லை. இந்த நாட்டின் எம்பி தனது மகளின் திருமணத்திற்காக இன எதிரி ராஜபக்சேவை அழைத்து வந்தால் தவறில்லை.ஆனால் பாதிக்கப்பட்ட சகோதர ..சகோதரிகளுக்காக ஒருவன் பேசினால் அது தவறு. உரிமைகளுக்காக ஒருவன் முழங்கினால் அது தவறு..
மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் தமிழ்நாட்டு அறிவுலகத்தீரே…
தூக்கு தண்டனையை நீக்க குரல் கொடுக்கும் கணவான்களே..
காஷ்மீருக்கு எல்லாம் சென்று ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்களே…
ஏனய்யா …உங்கள் கண்களில் சீமானின் கைது சிக்க மாட்டேன் என்கிறது..
அந்த மனிதன் உண்மையை பேசுகின்றான் என்பதாலா..?
அவனின் உண்மையும் ,தியாகமும் ஏன் உங்களை உறுத்துகிறது?
அந்த உறுத்தலின் வடிவம் தானே உங்களது மெளனம்?

.
வண்டி கிளம்பியது.
கனத்த மவுனத்துடன் அந்த சிறை மதிற்சுவர்களை பார்த்தேன்.
காற்று வேகமாக வீசியது..
அந்த காற்று …சிறை மதிற் சுவர்களை தாண்டியும் வீசும்..
காற்றை கைது செய்ய முடியுமா என்ன?.
.

சீமான்…கம்பிகளைத் தாண்டி வீசும் காற்று.

.
திமிங்கிலம்
ஆழ ஆழ அது செல்கையில்
உயர உயர எழுகிறது
அதன் வால்!
(ஜென் கவிதை) -யோஸா பூஸன்.

கால வரலாற்றில் தேவை ஏற்படும் இயற்கையே தனக்காக தேவையை தானே உருவாக்கும் . அப்படித்தான் அண்ணன் சீமான் உருவாகியுள்ளார்.உலகின் மிகப்பெரிய ஜனநாயக சுதந்திர நாட்டில் தனது இன மானத்திற்கான கருத்தை பேசியதால் புதுச்சேரியின் நெடிய சிறை மதிர்ச்சுவர்களுக்கு ஊடே ,பல அடுக்கு பாதுகாப்பு வளையங்களுக்கு மத்தியில் எல்லாவிதமான சுதந்திரங்களும் மறுக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார்.
இணையத் தமிழர் இயக்கம் சார்பாக 2-04-09 அன்று அண்ணன் சீமானை காண செல்ல வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நான், தோழர்,விஷ்ணுபுரம் சரவணன்,ஒட்டக்கூத்தர், கவிஞர்.கண்ணகன், இணையத்தளங்களில் புதிய தமிழுணர்வாளராக உருவாகி வரும் வினோபா உட்பட தமிழுணர்வாளர்கள் புதுச்சேரிக்கு பயணமானோம். புதுவையில் அண்ணன் சீமானை காண புறப்பட்ட போது அருமைத் தோழர் நெல்லை அருள்மணி மதியம் 2 மணிக்கு வந்தால் அண்ணனை சந்திக்கலாம். இன்று வியாழக்கிழமை. ஆதலால் அனைவருக்கும் அனுமதி உண்டு என்ற மகிழ்வான தகவலை தந்தார். நாங்கள் சரியாக 1.50 மணிக்கு சிறை வாசலுக்கு சென்று விட்டோம். அங்கு எங்களை தோழர் ஓட்டக்கூத்தர்,பெரியார் திக அண்ணன் லோகு. அய்யப்பன், நெல்லை அருள்மணி ஆகியோர் எங்களை வரவேற்றனர். அங்கு சென்றவுடன் அண்ணன் சீமானை பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை என்ற தகவல் எங்களை பேரிடியாக தாக்கியது. தமிழ் பெரியவர் இறைக்குருவனார் , இயக்குநர் அமீர், மற்றும் சீமானின் குடும்பத்தினர் யாவரும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வெளியே காத்திருந்தனர்.

நான் சிறை வெளி வாயிலில் இருந்த வாயிற் காவலரிடம் அண்ணன் சீமானை காணவேண்டும் என்று கூறி அனுமதி கோரும் விண்ணப்ப படிவத்தினை கேட்டேன்.மிகுந்த இறுக்கமான குரலில் யாருக்கும் அனுமதி கிடையாது என்று காவலர் கூறினார். நான் உங்கள் மேலதிகாரிகளிடம் பேச வேண்டும் என்று கேட்ட போது எனக்கு அதே இறுக்கமான பார்வை மட்டுமே பதிலாக கிடைத்தது. பெரியார் தி.க அமைப்பாளர் அண்ணன் லோகு.அய்யப்பன் எங்களை எப்படியாவது உள்ளே அனுப்ப எல்லாவிதமான முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருந்தார். புதுவை மாநில சிறைத்துறை ஐ.ஜிக்கு அண்ணன் லோகு அய்யப்பன் அலை பேசியில் பேசி தோல்வி அடைந்த நிலையில் , என்னை பேச சொல்லி அலை பேசியை அளித்தார். கிட்டத்தட்ட அந்த வேற்று மாநில சிறைத்துறை அதிகாரியிடம் நான் எவ்வளவு பேசியும் யாருக்கும் அனுமதி கிடையாது என்றும், தேர்தல் ஆணையத்திடமிருந்து சீமானை பார்க்க வரும் பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது என்ற உத்தரவு வந்துள்ளதாகவும், ஒரு வாரத்தில் மூன்றே மூன்று பேருக்குத்தான் அனுமதி என்றும் கண்டிப்பாக கூறினார்.மேலும் நேற்றைய தினம் வந்த பண்ருட்டி எம்.எல்.ஏ வேல்முருகன் மற்றும் பாமக தலைவர் கோ.கா.மணிக்கும் அனுமதி மறுக்கப்பட்டதை சொல்லி மறுத்தார்
பிறகு என்னை நான் வழக்கறிஞர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகும் இதே இழிபறி நிலைநீடித்தது.ஒரு ஜனநாயக நாட்டில், அனைத்து சுதந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக சட்டம் சொல்லியுள்ள ஒரு நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஒரு நபரை அவரது வழக்கறிஞர்கள் சந்திக்க உரிமை உண்டு என்றும் மறுக்கும் பட்சத்தில் இது குறித்து தமிழுணர்வாளர்கள், வழக்கறிஞர்கள் மீண்டும் போராட துவங்குவார்கள் என்றும், உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடப்படும் என்றும் கடுமையான குரலில் நானும் விவாதிக்க ஆரம்பித்தேன். இருவருக்கும் காரசாரமான விவாதங்கள் நீண்டு கொண்டே இருந்தன.பிறகு அரைமணி நேரம் தொடர்ந்த உரையாடலின் முடிவில் வழக்கறிஞர்களை மட்டும் வழக்கு குறித்து பேச அனுமதிப்பதாக சலிப்பான குரலில் கூறினார்.
எங்களுடன் வந்திருந்த தமிழுணர்வாளர்கள் மிகப்பெரிய ஏமாற்றம் அடைந்தனர். பிறகு அங்கு இருந்தவர்கள் முதலில் வழக்கறிஞர்கள் என்ற முறைமையில் மணி.செந்திலும், வினோபாவும் மட்டுமாவது பார்த்து வரட்டும் என்று முடிவு எடுத்தனர் .தோழர் நெல்லை அருள்மணி அங்கு இருந்த அனைவரிடமும் இருந்த புத்தகங்களை பெற்று என்னிடம் அளித்தார்.தமிழ்ப் பெரியவர் இறைக்குருவனார் தான் எடுத்து வந்த பெருஞ்சித்திரனார் புத்தகங்களை ஏமாற்றத்துடன் கண்கள் பனிக்க என்னிடம் அளித்தார்.
சீமான் என்பவர் தனி மனிதன் அல்ல. தன் சொந்த சகோதர சகோதரிகளை காப்பாற்ற வழி தெரியாமல் தனக்குள்ளேயே சிதைந்து கொண்டிருக்கும் ஒரு தேசிய இனத்தின் குரல் என்பதை அங்கு நின்ற தமிழ்உணர்வாளர்கள் அனைவரும் நிரூபித்துக் கொண்டிருந்தனர். நானும் ,வினோபாவும் அவசர அவசரமாக புத்தகங்களை எடுத்துக் கொண்டு சிறையின் மிகப் பெரிய வாயிற் கதவின் வழியே உள் நுழைந்தோம்.
நான் பிறந்தது முதல் இனத்திற்காக எவ்வித சமரசமுமின்றி போர்க்குரல் கொடுத்து,அனைத்து அதிகார மையங்களுக்கும் தன் வீரம் செறிந்த உரைகளினால் பெரும் அச்சுறுத்தலாக திகழ்ந்துக் கொண்டிருக்கும் சாசகம் நிறைந்த ஒரு புரட்சியாளரை சந்திக்க போவது இதுதான் முதல் முறை. இன்று காலை நான் குடந்தையில் இருந்து கிளம்பியது முதலே மிகுந்த உணர்வு வயப்பட்ட நிலையில் இருந்தேன்.
அண்ணனை சிறையில் காணப்போகும் ஆவலும், உணர்வும் என்னை வெகுவாக ஆட்டிப்படைக்க சிறைச்சாலையின் இரண்டாவது மிகப்பெரிய இரும்பு கதவுகளுக்கு முன்னால் போய் நின்றேன். கூட வந்த வினோபா அங்கிருந்த காவலரிடம் நாங்கள் வந்திருக்கும் நோக்கம் பற்றி சொன்னார். அதற்கு அங்கிருந்த யாரிடமும் எவ்வித பதிலுமில்லை. அதிகாரிகள் இல்லை என்றும் ,வழக்கறிஞர்கள் சந்திப்பது குறித்து அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் மீண்டும் எங்களை தடுக்க துவங்கும் முயற்சியில் இறங்கியது புதுவை சிறைத்துறை. மீண்டும் அங்கேயும் விவாதம். அண்ணன் சீமானை பார்க்காமல் நாங்கள் சிறையை விட்டு வெளியே வர மாட்டோம். எங்களையும் இங்கேயே அடையுங்கள் என்று நாங்கள் இருவரும் உரத்தக் குரலில் விவாதிக்க துவங்கினோம். நேரம் ஆகிக் கொண்டு இருந்தது. அங்கிருந்த அதிகாரிகள் உள்ளே போவதும் ,வருவதுமாக இருந்தனர். ஆலோசனைகள் செய்தனர். நாங்களும் தளராமல் அதிகார மையத்தின் அனைத்து பிரிவுகளோடும் போராடிய வண்ணம் நின்று கொண்டிருந்தோம்.
இறுதியாக சீருடை அணியாத ஒரு அதிகாரி நீங்கள் போய் பார்க்கலாம். ஆனால் நிபந்தனை..புத்தகங்கள் கொடுக்க கூடாது.வழக்கைப் பற்றி மட்டும் தான் பேச வேண்டும் என்றார். …
என்னால் இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை. புத்தகங்கள் கூட கொடுக்க கூடாதென்றால்….அப்படியென்ன சீமான் யாரும் செய்யக் கூடாத கடும் குற்றத்தை செய்து விட்டார் ..இனத்திற்காக,இன அழிவினை கண்டித்து ஒருவன் குரல் எழுப்பினால் அவ்வளவு பெரிய குற்றமா.. என்றெல்லாம் கத்திக் கொண்டிருந்தேன். அதற்குள் கூட வந்த வினோபா முதலில் அண்ணனை பார்த்து விடுவோம்..மீதத்தை வந்து வைத்துக்கொள்ளலாம் என்றார். அனைத்து விதமான பரிசோதனைகளுக்கு மத்தியில்…எங்களது அலைபேசிகள் வாங்கப்பட்டன
இறுதியாக எளிதாக திறக்காத அந்த மாபெரும் அடக்குமுறையின் சின்னமாய் உயர்ந்திருந்த இருப்புக் கதவு தந்தை பெரியாரின் வியர்வையினால் எங்களுக்கு கிடைத்த கல்விக்காக திறந்தது.
உள்ளே மங்கலான வெளிச்சம்.வரிசையாக அதிகாரிகளின் அறைகள். வேக வேகமாக நடந்து செல்லும் போதே ஒரு அறையில் ..வாருங்கள் வழக்கறிஞர்களே…என்ற குரல்..
தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று எந்தக் குரல் உணர்வூட்டியதோ…என் தமிழுக்கு எதிரியை நிர்மூலமாக்கி சிதற அடிக்கும் வல்லமை உண்டு என்று எந்த குரல் நிருபித்ததோ..பெரியாரையும், அம்பேத்காரையும், காரல் மார்க்ஸையும், தலைவர் பிரபாகரனையும் ஒரே அலைவரிசைக்குள் கொண்டு வந்து எந்த குரல் அசத்தி உயர்த்திக் காட்டியதோ….மங்கி மக்காய் கிடந்த தமிழனை தன் அதட்டலால் எந்த குரல் மானமுள்ள போராளியாக்க துடித்ததோ …
அதே குரல்…
குரல் கேட்டவுடன் எனக்கு முன்னால் பாய்ந்து போனார் வினோபா..அந்த நொடியிலேயே என் கண்கள் கலங்கத் துவங்கி விட்டன..தவிப்புடன், பதைபதைப்புடன் நானும் அந்த அறைக்குள் போனேன்.
அங்குதான்..
தாயகத் தமிழகத்தில் இந்த தலைமுறையின் தன்னிகரற்ற போர் முரசு அண்ணன் சீமான் நின்றுக் கொண்டிருந்தார். எனக்கு முன்னால் சென்ற வினோபா கைக் குலுக்கி கொண்டே நின்றார்..
நான் ஆச்சர்யமும், தவிப்பும், பதைபதைப்பும்..இன்னும் பிற அனைத்து விதமான உணர்வு கலவைகளோடும் நின்றுக் கொண்டிருந்தேன்.ஒரு நொடி உற்று நோக்கிய பிறகு அண்ணன் வாடா என்று சொன்னதுதான் தாமதம் ..பாய்ந்து கட்டி அணைத்தேன். என் கண்களில் நான் தேக்கி வைத்திருந்த கண்ணீர் உடைந்துக் கொண்டு வெள்ளமென பாய்ந்தது.
ஒரு சிறைச்சாலையில்… சிறையில் அடைக்கப்பட்டவரை பார்க்கப் போன ஒரு வழக்கறிஞர் உணர்வினால் உந்தப்பட்டு கண்ணீர் சிந்துவதும், உணர்ச்சி வசப்படுவதும் என் தொழில் நியதிகளுக்கு முரணானதுதான். ஆனால் நான் அந்த இடத்தில் வழக்கறிஞராகவோ ,அதிகாரத்தின் கரங்களுக்குள் சிக்கிக் கொண்டவரை மீட்கப் போன மீட்பராகவோ… இருக்க முடியவில்லை.மாறாக அனைத்து விதமான சூழ்ச்சிகளுக்கும் சிக்கிக் கொண்டு, தன் கண் முன்னால் சொந்த சகோதர சகோதரிகளை பறிக்கொடுத்து…எல்லாவிதமான அரசியல் பித்தலாட்டத்தனங்களிலும் விற்கப் பட்டு…மீறி எழும் இனமான உணர்வினையும் ..சுய வாழ்க்கை நிர்பந்தங்களுக்காக அடக்கி, அடங்கிக் கிடந்த ஒரு தேசிய இனத்தின் உக்கிர வலியாய்…சூழ்ந்திருக்கும் இறுகிய இருட்டினில் துடித்தெழுந்த வெளிச்சத் தெறிப்பாய்…அண்ணன் சீமானின் தம்பியாகத்தான் என்னால் இருக்க முடிந்தது.
என் புலன்கள் என்னையும் மீறி…ஆதிச்சுழியாய்..சுனையாய் என்னுள் சுரந்து கொண்டிருக்கும் என் இன மூதாதையின் மிச்சமாய் இன்னும் என்னுள் ஒளிந்திருக்கும் உணர்வின் தொடர்ச்சிகளில் என்னை நான் ஒப்புக் கொடுத்துவிட்டேன் .அண்ணனும் கலங்கி..நானும் கலங்கி இருவரும் எங்களுக்குள் இருந்த நெருக்கத்தை உணர்ந்த அற்புத தருணம் அது.
அப்பா ..எப்படியிருக்கார்..திமுக காரர் ..அவரிடம் வம்பு வளர்க்காத..பாவம் டா அவரு..என்று என் தந்தையைப் பற்றி நலம் விசாரிக்க துவங்கிய அண்ணன்..அறிவுமதி அண்ணனைப் பற்றி பேச துவங்கியவுடன் மெளனமாக என்னை உற்று நோக்கினார். அண்ணனை பத்திரமாக பார்த்துக்குங்கடா…தினந்தோறும் தொலைபேசியில் அவருடன் பேசி அவரைத் தேற்று என்றார். தோழர் பாமரனின் விசாரித்தல்களை சொன்னபோது அவர் மிகவும் உற்சாகமாக பாமரனை பற்றி விசாரிக்க துவங்கினார்.
எங்களைச் சுற்றிலும் காக்கி உடைகள் நாங்கள் பேசுவதை ,கலங்குவதை கவனித்துக் கொண்டும் ,பதிவு செய்துக் கொண்டும் இருந்தன…
நான் படித்த சட்டமும், பட்டமும் என் வாழ்நாளில் எனக்கு மிகவும் உபயோகப்பட்ட தினமாய் இதை நான் கருதுகிறேன் என்று அண்ணனிடம் சொன்னேன். அதற்கு அண்ணன் சிரித்தார்.
சிறை ஒரு மனிதனை உளவியல் ரீதியில் பலவீனப்படுத்தி, சீர்குலையச் செய்யும் என்பதை சீமான் முற்றிலும் பொய்யாக்கிக் கொண்டு இருந்தார். அவருடைய வருத்தமெல்லாம் ஒட்டுப் பொறுக்கி அரசியலில் சிக்கிக் கொண்டு ஈழத்து அவலங்களுக்கான தார்மீக எதிர்ப்புக் குரல் மங்கி விட்டதே என்று. தனக்கு யார் குறித்தும் வெறுப்போ, வருத்தமோ இல்லை என்றார் அண்ணன் சீமான். இன்று இன எதிரிகளை வெற்றிப் பெற விட்டோமானால் எதிர்காலம் என்ற ஒன்றே இந்த இனத்திற்கில்லை என்பதை நாங்கள் இருவரும் பகிர்ந்துக் கொண்டோம். மேலும் உலகமெல்லாம் இருக்கின்ற தமிழுணர்வாளர்களை ஒரு இழையில் கொண்டு வர இணையத்தமிழர் இயக்கம் துவங்கப்பட்டுள்ளதை மகிழ்வுடன் கேட்டார். உலகத் தமிழர்களுக்கும், இயக்கத்திற்கும் தன்னுடைய அன்பினையும், வாழ்த்துக்களையும் உவகையோடு சொன்னார் அந்த மாமனிதன்.விடுதலைக்கு பிறகு செய்ய வேண்டிய பணிகள் குறித்து வினோபா பேசினார்.
வெளியே பலரும் காத்துக் கொண்டிருக்கிற விபரமும், அவரது அண்ணன் மகள் யாழினி பிறந்த நாள் வாழ்த்து பெற வந்திருப்பதையும் அண்ணனிடம் சொன்ன போது அவரின் முகம் இறுகியது.
சுற்றி நின்ற காவலர்களை பார்த்து ஏன் இப்படி என்னையும், என்னை பார்க்க வருகின்றவர்களையும் நடத்துகிறீர்கள் …அடிப்படை உரிமை கூட எனக்கு மறுக்கப்படுகிறது. தனிமைச் சிறை. புத்தகங்கள் கூட அனுமதிக்கப்படவில்லை..பார்வையாளர்களை அனுமதிப்பதில்லை. முதலில் வியாழக்கிழமை என்றீர்கள்.இப்போது வியாழக்கிழமை 3 பேர் மட்டும் அனுமதி என்கிறீர்கள். என் குடும்பத்தை பார்க்க கூட எனக்கு அனுமதியில்லை ..ஏன் இப்படி அனைத்து சட்ட விதிகளுக்கும் புறம்பாக நடந்துக் கொள்கிறீர்கள் என அண்ணன் கேட்டார்.
அந்த சிறைச்சாலையில் அண்ணன் சீமானுக்கு உடற்பயிற்சி செய்யவும், நடைப்பயிற்சி போகவும் கூட அனுமதியில்லை. தமிழினத்திற்காக மிகப் பெரிய கட்டுப்பாடுகள் என்ற பெயரில் நடத்தப்படும் கொடுமைகளுக்கு உள்ளாகி வருகிறார் அண்ணன் சீமான்.எல்லாவிதமான அடிப்படை மனித உரிமைகளும் அவருக்கு அங்கே மறுக்கப்பட்டு வருகிறது.தேர்தல் ஆணையம் அவருக்கு மட்டும் சிறப்பு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக அங்கு உள்ள காவலர்கள் தெரிவித்தனர்.அந்த உத்திரவின் நகலை கேட்டதற்கு அதையும் தர மறுத்து விட்டனர்.

இதற்குள் வெளியே நின்ற விஷ்ணுபுரம் சரவணன்,ஒட்டக்கூத்தர்,உள்ளிட்ட தமிழுணர்வாளர்கள் வாயிலை மறைத்து போராட்டத்தை துவக்கி இருந்தனர். அதை தூரத்தில் இருந்து அந்த அறையில் இருந்த மிகச்சிறிய ஜன்னல் மூலம் அண்ணன் சீமான் பார்த்தார். அவர் மேலும் உணர்ச்சிவயப்பட துவங்கினார். என்னை பார்க்க வரும் என் உறவுகளை ஏன் இப்படி நடத்துகிறீர்கள்..ஏன் அனுமதி ,மறுக்கிறீர்கள் என்று காவலர்களிடம் அவர் கேட்ட போது அவர்களிடம் பதிலில்லை.
எதற்கும் அவர்களிடத்தில் பதில் கிடையாது. பதில் தர வேண்டிய அதிகாரிகள் யாரும் அங்கில்லை.
அவரது அண்ணன் மகள் யாழினிக்கு அவர் பிறந்தநாள் வாழ்த்து கவிதை ஒன்று எழுதி வைத்திருந்தார்.அந்த தாளை என்னிடம் அளித்து கொண்டு சென்று என் மகளிடம் கொடு என்றார்.நானும் அதை பெற்று மடித்த போது ..மடிக்காமல் கொண்டு செல் என்றார் அந்த மயிலிறகு மனசுக்காரர்.
நேரம் ஆகி விட்டது என அலுவலர்கள் தெரிவித்தனர் . அண்ணனிடம் மீண்டும் கைக்குலுக்கி கொண்டோம்.வீட்டில் உன் மகனிடம் பெரியப்பா விசாரித்தான் என சொல் என்று சொன்ன அந்த நேசமிகு உறவினை கண்கள் பனிக்க பார்த்து விட்டு மெதுவாய் அறையை விட்டு வெளியே வந்தேன்.
வெளியே அதிகாரிகள் நின்று கொண்டிருந்தனர். நான் வெளியே நின்ற அதிகாரிகளிடம் அவர் நம்மை நேசித்த குற்றத்திற்காக உள்ளே இருக்கிறார். எனக்காகவும்,உங்களுக்காகவும் தான் அவர் பேசினார். அந்த மாபெரும் மனிதனை உரிய மதிப்போடும், உரிமைகளோடும் நடத்துங்கள் என்றேன்.
என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. மீண்டும் அறைக்குள் சென்றேன். அண்ணன் சீமான் அமைதியாய் அமர்ந்திருந்தார். என்னடா தம்பி என கேட்டார் .மீண்டும் அந்த மகத்தான சகோதரனை மீண்டும் இறுக்க கட்டி அணைத்தேன்..நீங்கள் எங்களுக்கு வேண்டும்..கொள்கையாய்..வழிகாட்டியாய்..ஆசானாய்..உறவாய் என்றேன்..
கண்டிப்பாக..என் வாழ்க்கை என் தம்பிகளுக்காகத்தான் என்றான் அந்த பாசமிகு அண்ணன்.
சிறை வெளியே தோழர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தனர்.நான் சீமானின் அண்ணன் மகள் யாழினிக்கு அவர் அளித்த கவிதையினை வாசித்து காண்பித்து அளித்தேன். அந்த பெண்ணும், அவரது தாயாரும் கதறி அழுதனர்.
தோழர்களின் போராட்டம் வலுக்கவே..இறுதியாக மூவருக்கு மட்டும் பலவிதமான கெடுபிடிகளோடு அனுமதி தந்தது புதுவை சிறைத்துறை. இயக்குனர் அமீர், இறைக்குருவனார், யாழினி ஆகியோர் மட்டும் உள்ளே சென்று பார்த்து விட்டு வந்தனர்.
எல்லாவித உரிமைகளும் மறுக்கப்பட்ட நிலையில்,,,தேர்தலை மட்டுமே மனதில் வைத்து சீமானை சிறையில் அடைத்து வைத்திருக்கிறது. கருத்துச் சுதந்திரம் என்ற அடிப்படை உரிமைக்கு எதிராக சீமானின் சிறை வாசம் இருக்கிறது. காங்கிரஸ்க்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்ல கலைஞர்.மு.கருணாநிதிக்கு உரிமை இருக்கிறது என்றால்…ஓட்டு போடாதீர்கள் என்று சொல்ல சீமானுக்கு உரிமை இல்லையா..?

விடுதலைப்புலிகளுக்கு எதிராக காங்கிரஸ் முழங்கலாம் என்றால்….அதை ஆதரித்து சீமான் முழங்கக்கூடாதா…இந்த நாட்டில் துரோகி கருணாவை பாராட்டி பேசினால் தவறில்லை. இந்த நாட்டின் எம்பி தனது மகளின் திருமணத்திற்காக இன எதிரி ராஜபக்சேவை அழைத்து வந்தால் தவறில்லை.ஆனால் பாதிக்கப்பட்ட சகோதர ..சகோதரிகளுக்காக ஒருவன் பேசினால் அது தவறு. உரிமைகளுக்காக ஒருவன் முழங்கினால் அது தவறு..
மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் தமிழ்நாட்டு அறிவுலகத்தீரே…
தூக்கு தண்டனையை நீக்க குரல் கொடுக்கும் கணவான்களே..
காஷ்மீருக்கு எல்லாம் சென்று ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்களே…
ஏனய்யா …உங்கள் கண்களில் சீமானின் கைது சிக்க மாட்டேன் என்கிறது..
அந்த மனிதன் உண்மையை பேசுகின்றான் என்பதாலா..?
அவனின் உண்மையும் ,தியாகமும் ஏன் உங்களை உறுத்துகிறது?
அந்த உறுத்தலின் வடிவம் தானே உங்களது மெளனம்?

.
வண்டி கிளம்பியது.
கனத்த மவுனத்துடன் அந்த சிறை மதிற்சுவர்களை பார்த்தேன்.
காற்று வேகமாக வீசியது..
அந்த காற்று …சிறை மதிற் சுவர்களை தாண்டியும் வீசும்..
காற்றை கைது செய்ய முடியுமா என்ன?.
.

Page 46 of 53

Powered by WordPress & Theme by Anders Norén