பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

சிவப்பில் சிலிர்க்கும் கடல்..

உதிரம் உதிர கரிப்பினில் கடல் நீர்.

நீலத்தில் உறைந்த கடல் ரத்தத்தில் சிலிர்க்கிறது.

அனாதையாய் கிடக்கும் மீன் வலைக்குள்

மீன்கள் சுற்றி திரிகின்றன..

நடுங்கும் கடலில் நகராமல் நிற்கிற படகில்

கனவோடு திறந்த கண்கள்.

கழுகின் வெறித்த பார்வைக்குள் சிக்குகிறது

உடலம் மிதக்கும் படகின் நுனி.

உறக்கத்தின் ஒரு புள்ளியில்

திடுக்கிட்டு வெளுக்கிறது வானம்.

வீறீட்ட வானத்தில் சிவப்பாய்

பரவுகிறது தமிழனின் ரத்தம்.

குடிசைக்குள் குழந்தை அழுகிறது

உணராத சோகத்தின் அறியாத பசியாய்.

வரப் போகும் அரிசிக்காக

தணலாய் காத்திருக்கும் அடுப்பில்

விழுந்து ஓலமிடும் கண்ணீர்.

சால்வைகள் ரூபாய் தாள்களோடு

விலை பேசுகின்றன விலையில்லாதவற்றை.

காவல்காரர்கள் காத்துக் கொண்டு

இருக்கிறார்கள் வேலி தாண்டி

விழுங்கும் சிம்மத்தினை..

கணக்கற்ற கனத்தினால்

கடல் பொங்கிறது

சில சமயங்களில் சுனாமியாய்..

(தமிழக மீனவர் செல்லப்பன் சிங்கள ராணுவத்தினரால் கொல்லப்பட்டார்)

Previous

மைக்கேல் ஜாக்சன் – காற்றில் உலவும் பேரிசை

Next

கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்…

1 Comment

  1. Anonymous

    Its like you read my mind! You appear to know a lot about this, like
    you wrote the book in it or something. I think that you can do with some pics to drive the message home a
    bit, but instead of that, this is wonderful blog.
    A great read. I will definitely be back.

    Also visit my page – Raspberry Ketone Review

Powered by WordPress & Theme by Anders Norén