பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

வணக்கங்கள்.

அன்புள்ள தமிழ் மணம் உறவுகளுக்கு ..

வணக்கங்கள்.. தமிழ் மணம் நட்சத்திர வார எழுத்தாளனாக என்னைப் போன்ற எளியோனை தேர்வு செய்ததற்கு என் நன்றிகள்.. நான் இந்த வாரத்தினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முயல்கிறேன். என் பதிவுகளில் ஏதேனும் குறைகளோ, விமர்சனங்களோ தங்களுக்கு இருப்பின் தாராளமாய் எழுதுங்கள். நான் கற்றுக் கொள்கிறேன். சமூகத்தினை சாரா எழுத்துக்களில் எனக்கு சற்றும் நம்பிக்கை இல்லை . ஈராயிரம் ஆண்டுகளுக்கு மூத்த ஒரு மொழியின் துயராய்… தோல்வியுற்ற ஒரு இனத்தின் வலியாய் நான் எழுதுகிறேன். நாம் துயருற்ற கணங்களை நமக்குள்ளே நிறுத்துவோம் . அவை அளிக்கும் நமக்கான ஆற்றல் மிகுந்த வன்மத்தினை.

என் இனம் வீழ்ந்த துயரமே என்னை எழுத வைக்கிறது. தோல்வியின் வன்மமே என்னை இயங்க வைக்கிறது. எம் இனத்திற்கான விடுதலைக் கனவே என் எழுத்திற்கான அடிப்படை.

எழுதுவோம்..இயங்குவோம்..இறங்குவோம்.

நேசங்களுடன்

மணி.செந்தில்

Previous

சொற்களின் தூரிகை..

Next

சீமானின் கைது – தமிழ்த் தேசிய விடியலுக்கான புள்ளி.

9 Comments

  1. நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே!

  2. வாழ்த்துக்கள் தோழர்!

  3. வாழ்த்துகள் செந்தில்.
    பல வருடங்களுக்கு பிறகு உன் நன்னிலை அறிவதில் மகிழ்ச்சி. மின்னஞ்சலில் தொடர்பு கொள்கின்றேன்.

  4. நட்சத்திர வாழ்த்துகள்

  5. வாழ்த்துக்கள் திரு மணி செந்தில். நிறைய எழுதுங்க நம்பிக்கையோடு – நன்றி!

  6. இடுகையைப் படித்த பின் வார்த்தை இல்லை

  7. மதிபாலா

    வாழ்த்துக்கள் திரு.மணி செந்தில்.

    முடிந்தால் வேர்ட் வெரிபிகேஷனை பின்னூட்டப் பெட்டியில் இருந்து எடுத்துவிடவும்..

    சீமான் கைது செய்யப்பட்ட ஒரு சூழலில் உங்களின் நட்சத்திர வாரம் கருத்துக்கனலை வீசட்டும்.

  8. நட்சத்திர வாழ்த்துகள் செந்தில்..

    (word verufucationஐ நீக்கி விடவும். மறுமொழியிட சிரமம் தருகிறது)

  9. வாழ்த்துக்கள்…. கலக்குங்க வழக்கறிஞரே!

Powered by WordPress & Theme by Anders Norén