இன்று (02-11-2013) அண்ணன் கொளத்தூர் மணி அவர்களின் கைது நடவடிக்கை. சேலம் வணிகவரித்துறை அலுவலகத்தின் மீது திவிகவினர் பெட்ரோல் குண்டு வீசியதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் இரவு 2 மணிக்கு கைது செய்யப்பட்டுள்ளார். அண்ணன் கொளத்தூர் மணி அவர்களின் கைது வழக்கில் தொடர்பில்லாத எவரையும் தனது அதிகாரத்தின் மூலமாக இணைக்கலாம் பிணைக்கலாம் என்கிற தமிழக அரசின் அதிகார ஆணவத்திற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு. ஜெ தமிழின உணர்விற்கு எதிரியாக இருக்கிறார் என்கிற நிலையை விட தமிழின உணர்வோடு இயங்கும் தமிழர்கள் ஆகிய நாம் உதிரிகளாக இருக்கிறோம் என்பதுதான் சிந்திக்க வேண்டியது.. # எம் அண்ணனுக்கு மற்றொரு வழக்கு. சிறிய புன்னகையின் மூலம் இதையும் கடந்துச்செல்லும் அவரின் மன உறுதி எந்த அதிகார ஆணவத்திற்கு முன்னாலும் அடி பணியாது. புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா..