எப்போதும்
மின்னிக் கொண்டிருந்த
அந்த நதிக்கரையில்
நட்சத்திரங்கள்
தரை இறங்கி
கிறங்கிக் கிடந்தன..

துடித்துக்
கொண்டிருந்த
நீரைப் போர்த்திக்
கிடந்த நிலவு
கூழாங்கற்களை
தழுவிக் கொண்டது…

ஒரு கவிதை
தன்னைத் தானே
மடல் விரித்து
எழுதத் தொடங்கிய
அக்கணத்தில் தான்,,,

அந்த
பின்னிரவில்…

இளையராஜா
பியானோ
வாசிக்கத்
தொடங்கி
இருந்தார்….