26195657_381630508928490_7593472573008726768_n

 

அவன்
என் இளமையின்
பொன்னிறத் துகள்.
என் விழிகளில் பிணைந்திருக்கிற..
வாஞ்சைமிகு வசீகரம்.
என் கவிதை ஏடுகளில்
நிறைந்திருக்கிற எனது அகம்..
பல சமயங்களில்
அவனே நானாக..நானே அவனாக
வாழ்ந்துக் கொண்டிருக்கிற
விசித்திர வாழ்வின் விந்தைக்கோடுகள்
நாங்கள் இருவரும்..

இதில் யார் குரு..யார் சீடன்..??
என்ற குழப்பமில்லை எமக்கு.
தானாகி போனதொரு வாழ்வில்
அன்பள்ள சிவக்கிறது கிழக்கு.

தோள் சேர்த்து.. கை பிணைத்து..
காலம் ஒன்றை கண் அசைவுகளால்..
வார்த்தை வளைவுகளால்.. கட்டி எழுப்ப
வாடா..வாடா..

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் Dhuruvan Selvamani Somu