21_2bg

 

அந்த புன்னகை
கடல்.
யாரும்
கறைப் படுத்தி
விட முடியாது.

அந்தப் பார்வை
கடவுளின்
சாயலுடையது.
யாரும் களங்கப்
படுத்தி விட முடியாது.

அந்த வீரம்
வானம்.
யாரும் அளந்து
விட முடியாது.

அந்த அறம்
மழை.
யாரும் மலராமல்
இருக்க முடியாது.

அந்த நேர்மை
சுடர் விண்மீன்.
யாரும் கவனிக்காமல்
கடக்க முடியாது.

அந்த தியாகம்
பெருமழை அருவி.
யாரும் நனையாமல்
தப்ப முடியாது.

அந்த மொழி
வீசும் மென்சாறல்.
யாரும் சிலிர்க்காமல்
சிதற முடியாது.

அந்த கருணை
பாலையின் ஊற்று.
யாரும் தணியாமல்
தடம் புரள முடியாது.

மொத்தத்தில்..
அந்த
மனிதன் ..

யாரும்
கடக்கவே முடியா..
பெருங்காவியம்.

உலகத்தமிழர்களுக்கு..

தலைவர் பிறந்தநாள் வாழ்த்துகள்.