22228191_351255648632643_1871345362821044997_n

தமிழ்த்தேசியம் என்பது தமிழ்த்தேசிய இன நலனிற்கான கருத்தியல். இத்தனை ஆண்டு காலம் உரிமைகள் மறுக்கப்பட்டு..அடிமை இனமாக ஆளப்பட்டு வருகிற ஒரு இனத்தின் மீள் எழுச்சிக்கான கருத்தியல்.

இது மற்ற இனங்களின் மீதான வெறுப்புணர்ச்சியில் கட்டமைக்கப்படும் கருத்தியல் அல்ல. மாறாக எம் இனத்தின் மீதான பற்றுணர்ச்சியில் உருவான கருத்தியல்.

அதுவும் வெறும் பற்றுணர்ச்சியில் உருவானது அல்ல.. ஒன்றரை லட்சத்திற்கும் மேலான எம் இனத்தாரை இழந்த போது..காக்க முடியாமல் போனது எதனால் என சிந்தித்ததன் விளைவு..புரிதல் .

தமிழ்நாட்டை நேசிக்கும் எவரும் தமிழ்நாட்டினை ஆள உரிமை உள்ளவர்கள் என பேசுபவர்கள் தன்னை தமிழ்த்தேசியர்களாக ஏன் காட்டிக் கொள்ள வேண்டும்… நீங்கள் சர்வ தேசியனாக காட்டிக் கொண்டு போக வேண்டியதுதானே..

ஆனால் தமிழ்த் தேசியராக அடையாளப்படுத்திக் கொண்டு..உலக தேசியம் பேசி கீழ்மைப் பட்டு அம்பலப்பட்டு நிற்கிற திராவிட கருத்தியலுக்கு காவடி தூக்குகிற வேலை.

தமிழ்நாடு தமிழருக்கே வா..இல்லை தமிழ் நாட்டை நேசிப்பவருக்கா… என்றால் வா..வாழ்..நேசி…நேசிக்கப்படு. ஆனால் இம் மண் அதன் பூர்வக்குடிகளுக்கானது என்ற புரிதலோடு நேசி.

என் மண் எனக்கானது என்பதை மறுத்து இங்கே வாழும் பிற மொழி சிறுபான்மை மக்களை இம் மண்ணின் பூர்வக்குடிகளுக்கான அரசியலை எதிர்ப்பு அரசியலாக காட்ட முனைவதுதான் தமிழ்த்தேசியமா..

பிறகு எதற்கு தமிழ்நாடு..தமிழர் உரிமை என்றெல்லாம் பேச வேண்டும்..

இதற்கு இந்தியத் தேசியம் பேசி காவிக்கொடி பிடிப்பவன் எவ்வளவோ மேலானவன். குழப்பாமல் நம்மை எதிர்க்கிறான்.

நாம் தெளிவாக இருக்கிறோம். எதிரிக்கும் இது புரிந்திக்கிறது.

நடுவே குழப்ப நங்கூரமிட்டு..குழப்பக் குட்டையில் திராவிட மீனை தேடும்
,”தோழர்கள் ” மீண்டும்..மீண்டும் அம்பலப்படுவார்கள்..

சாதி ஒழிப்பினை பிரதானப்படுத்துவதன் நுண்ணரசியல் இங்கே ஏற்கனவே வலிமையோடு திகழும் சாதீய உணர்வை இன்னும் வலிமைப்படுத்தவே..ஊரும் ,சேரியும் சேர ஓர்மைப்புள்ளிகளை பேசாது வெறுமனே சாதி ஒழிப்பு அரசியல் பேசுவது பலனற்றது..புனைவுகளுக்கு ஏன் பலன்..இன நலன்..?

வலிந்து கட்டப்படும் கதாநாயக பிம்பம் யாருக்காக..எந்த எழுச்சிக்கு எதிரானது என்றெல்லாம் நமக்கு புரியாமலில்லை..கண்டிருந்த வான் கோழிகளைப் பற்றி கான மயில்களுக்கு கவலை இல்லை.

இருந்தும் தமிழனின் வரலாற்றில் 50 வருடத்திய தவறுகள் மீண்டும் நிகழாமல் இருக்க..தூய்மை வாதி பட்டம் சுமப்பதில் தவறில்லை.

சொல்லப்போனால் அன்று சிங்கள பேரினவாத அரசிற்கு வால் பிடித்த..மிருதுவான..இவர்களைப் போலவே தமிழர் நலன் என்ற பெயரில் தமிழ் இன நுண்ணரசியல் பேசி குழப்பிய வரதராஜ பெருமாள் தான் நினைவிற்கு வருகிறார்.

ஆனால் வரலாறு வரதராஜ பெருமாள்களுக்கு உரித்தானது அல்ல..

அது பிரபாகரனுக்கானது.
தற்போது அவர் தம்பிக்கானது.

வேண்டுமென்றே வெளிச்சப் புள்ளிகள் செலுத்தி மின்ன வைக்க கட்டாயத்தில் நாங்கள் இருட்டில் திசைமாறிப் போன விட்டில் பூச்சிகள் அல்ல.

நாங்கள் பகலவன்கள்.

பற்றி எரிவோம். பற்றி பரவுவோம்.