road-trip-1

இப்படி ஒரு பயணம்.

தேநீர் கடைகள்.

இரவு ரசித்தல்..

இளையராஜா.

காலை விடியல் வான்
கண்டல்..

பல நினைவுப்புள்ளிகளோடு
கால நதியில் கல்லெறிந்து
பார்த்தல்..

சில துளி கண்ணீர்.

ஆங்காங்கே
பல சிறு புன்னகைகள்..

சாலையை கடக்கும்
முகம் அறியாத
வயதான தாய்
மீது காரணமின்றி
துளிர்க்கிற
மாசற்ற அன்பு..

பக்கத்து இருக்கையில்
நம்மோடு பயணிக்கிற
நமது நம்பிக்கை..

முடிவில் சில கவிதைகள்..

டாட் .