நான் தனித்தவன் என்கிற என் குறை உணர்ச்சியை,தாழ்வு மனப்பான்மையை தணித்தவன். என் தாய் தந்தையருக்கு அடுத்து என்னை அதிகம் சுமப்பவன். என் நிழலையும் தாண்டி என்னோடு நெருங்கி இருப்பவன். அவனின்றி எனக்கு எதுவுமில்லை. அவனை மிஞ்சியும் எனக்கு எதுவுமில்லை.

நான் இவ்வாழ்வில் அடைந்த மிகப் பெரிய சொத்து… அவன் தான். நான் சம்பாதித்த உச்சபட்ச தொகையும் அவன் தான்..

நான் தடுமாறிய பொழுதுகளில்.. என்னை பாதுகாத்து என்னை ஆற்றுப்படுத்தினான். என் காயங்களை பிறர் அறியாமல்..பிறர் தீண்டாமல் மூடி வைத்தான். நான் ஒரு நிதானத்திற்கு வரும் வரை உடனிருந்து அமைதியாய் என்னை காத்து நின்றான்.மீண்டும் நிமிர அவனே கரம் நீட்டினான்.

நடக்க முடியா என் பாதைகளில் அவன் தான் ஒடுகிறான். என் கரங்கள் நீளும் தொலைவில் தன் தோள்களை பொருத்துகிறான். நான் தேடும் திசைகளில் எல்லாம் சட்டென தோன்றுகிறான். நான் நினைத்ததை செயலாக்கி முடிக்கிறான்.

மணி செந்தில் … நான் சொற்கள் மட்டுமே.

என் தம்பி ஆனந்த் தான் நான் செய்வதாக இந்த உலகம் அறிகிற செயல்கள் அனைத்தும்….

நிறைய இருக்கின்றன. சொல்ல முடிந்தவைகளும்…சொல்ல முடியாதவைகளும்.. நினைத்தாலே கலங்குகின்றன விழிகள்.

நன்றி என்ற சொல் உனக்கெல்லாம் பொருந்தாதுடா. வாழ்வில் பார்த்துக் கொள்வோம்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் .
Made in Mani Senthil..kku .