குழந்தைகளை
வேட்டையாடும்
சமூகம்
ஓநாய்களுக்கு
உரியவை.

பால் நிலாவின்
கதைப்பக்கங்களில்
நகரும் பிஞ்சு
விரல்களில்
உறைந்திருக்கும்
உதிரத்துளிகளை
நீண்டு சுழலும்
நாவினால் எட்டி
சுவைக்கின்றன
ஓநாய்கள்..

தனித்திருக்கும்
குழந்தைகளின் மீது
சாத்தானின் நிழல்
கவிய தொடங்கும்
தருணங்கள்
இப்பொதெல்லாம்
எல்லா நொடிகளிலும்
நிகழ தொடங்குவதைதான்
உறக்கத்தில் கூட
இறுகப் பற்றிக் கொள்ளும்
பிஞ்சுவிரல்களின்
நடுக்கங்கள்
அறிவிக்கின்றன.

இறுக்கி கட்டப்
பட்டிருக்கும்
வெள்ளைத்துணியினை
அவிழ்த்துப் பார்த்தால்
இறுகி இருக்கும்
விரல்களுக்கு நடுவில்
கசங்கிய பூ ஒன்று.

இவ்வாறாக
காற்றில் சருகென
தேவதைக்
குழந்தைகளின்
உடலங்கள்
மிதக்கிற நிலத்தில்
இனி சூரியகாந்திகள்
மலராது.

கொடும் இருள்
பீடித்த விழிகளில்
இருந்து கண்ணீர்
தளும்பாது.

இது உலகம்
எனவோ..
நாமெல்லாம்
மனிதர்கள்
எனவோ..

எதுவொன்றும்
அறிவிக்காது.

அன்புமகள்
ரித்யன்சீறிக்கு

 

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=483512