எப்போதும் தன்னை சூழ வரும் வன்ம வெறுப்பின் கழுகுகளை
சட்டென பறந்து பின்மாயும் சிறு ஈசல்களாக மாற்றி ரசிக்கும்
ஒரு விசித்திரக்காரனின் காதற் கதை இது.
————————–—–

எவராலும் வெல்ல முடியாத
அவனது புன்னகைக்குப் பின்னால் ஒரு தேவதையின் காதல் நம்பிக்கையாக மின்னுகிறது.

சுற்றி வீசும் சொற்களின் அவதூற்று சூறைகாற்றுக்கெல்லாம் முகம் கொடுக்கும் அவனது அசாத்திய மனத்துணிவு, கனிவு மிக்க அவன் துணையின் தாய்மைக் கரங்களால் தயார் செய்யப்பட்டது.

அவள் அவனை தன் பேரன்பு கவசங்களால் போர்த்திக் களத்திற்கு
அனுப்புகிறாள்.

அவனோ தன்னை நோக்கி வரும் பொய்மையின் அம்புகளை தன் சிறு
புன்னகையால் தகர்த்து விடுகிறான்‌.

அவனது மகத்தான செயல்களுக்கும்,வசீகரப் புன்னகைகளுக்கும் பின்னால் அந்த மாதேவியின் தீரா உடனிருப்பு துணையெழுத்தாக தொடர்கிறது..

அந்த உயிர் எழுத்தின் வலிமையில் தான் அனைத்திற்கும் முகம் கொடுக்கிற ஆயுத எழுத்தாக அவன் மாறி நிற்கிறான்.

…….
…….
…….
எகிறி வரும் எல்லா வித சொற்களுக்கும் பதிலாய் பத்துக்கு நூறு மடங்காய் எதிர் வினை ஆற்றி விடலாம் தான்.. ஆனாலும் ஒரு நிதானம். ஒரு கண நேர அமைதி. பிறகு ஒரு புன்னகையோடு கிளம்பி விடுகிற எங்களது அசாத்தியங்களுக்கு பின்னால் தகர்க்கவே முடியாத ஆதி நேசப் பசுங் கொடிகள் நினைவுகளாய் போர்த்தி இருக்கிற ஒரு வனக் கோட்டை இருக்கிறது.

அந்த அரண்மனையின் மாதரசி, எம் சோழர்க்குல இளவரசி, என் தங்கை Meera Packiarajan க்கும், என் மைத்துனர் தலPackiarajan Sethuramalingam க்கும் இனிய மணநாள் வாழ்த்துகள்.

 — with Meera Packiarajan.