❤️

எல்லா விமர்சனங்களுக்கும் பதில் சொல்லி அலைந்து கொண்டிருப்பது நம் வேலை அல்ல.

வேலையற்றவன், வீணாகி போனவன், முகவரியற்றவன், முகம் தொலைந்தவன் போன்றவர்கள்தான் ஏதோ வயித்தெரிச்சலில் குறை பேசிக்கொண்டு குற்றம் கண்டுபிடித்துக் கொண்டு கதறிக் கொண்டிருப்பார்கள்.நமக்கு அது வேலை அல்ல. நம்மைப் பொறுத்த வரையில் முகநூல் என்பது ஒரு விளம்பர ஊடகம். செய்திகளைப் பரப்பும் கருவி. அதைத்தாண்டி முகநூல் ஒன்றுமில்லை.

முகநூல், டூவிட்டர் பதிவுகளுக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருந்தால் எதையும் செய்ய முடியாது. குறை சொல்பவர்களுக்கு குறை சொல்வது மட்டும்தான் வேலை‌. நமக்கோ குறை சொல்பவனையும் உள்ளடக்கிய இந்த சமூகத்திற்காக உழைக்கின்ற வேலை. பதிவுகளுக்காக பதறாதீர்கள்.அலட்சியப் படுத்தக் கற்றுக் கொள்ளுங்கள். அது எளிதானதல்ல. அது ஒரு பயிற்சி. சொல்லப்போனால் அது ஒரு கலை.

நம் மனதிற்குள் எதைக் கொண்டு போக வேண்டும், எதைக் கொண்டு போகக் கூடாது என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.‌ மற்றபடி கண்ணெதிரே நின்று கத்தினாலும், கதறினாலும் ஜஸ்ட் லைக் தட் என அலட்சியப் படுத்தி கொண்டு நகர்ந்து பாருங்கள். அதுதான் கத்திய கதறிய அந்த முகம் தொலைந்தவனுக்கு‌ நாம் அளிக்கும் தண்டனை.பூகம்பமே வெடித்தாலும் புன்னகை செய்வதை மறந்து விடாதீர்கள். எதுவும் நம்மை ஒன்றுமே செய்துவிடமுடியாது என்று நினைப்பவர்கள்தான் இதுவரை உலகத்தை ஆண்டிருக்கிறார்கள். எனவே சமூக வலைதளங்களில் வரும் ஒவ்வொரு விமர்சனங்களுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருப்பது நமது பணி அல்ல. உங்கள் பதிவில் உங்களுக்கு வேண்டாத கருத்துக்களை, உங்களைப்பற்றி அவதூறான விமர்சனங்களை, நம் கட்சியை பற்றி தவறான விமர்சனங்களை எவனாவது முன் வைக்கிறானா .. உடனே அந்த பதிவை நீக்கிவிட்டு அவனை பிளாக் செய்து தடுத்து விடுங்கள்.

அந்த ஒரு நொடி தான் அவனுக்காக நாம் செலவு செய்த ‌ கடைசி நொடி ஆக இருக்க வேண்டும்.நமது வேட்பாளர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் கொளுத்தும் வெயிலில் மக்களை சந்தித்து கட்சியையும் சின்னத்தையும் கொண்டு போய் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த செய்திகளை மக்களிடம் கொண்டு சேருங்கள்.

நீங்கள் நாம் தமிழர் கட்சிக்காக பிரச்சாரம் செய்யும் படங்களை பெருமிதமாக சமூகவலைதளங்களில் பரப்புங்கள்.விளம்பரம் செய்யுங்கள்.அதைத்தாண்டி முகநூல் அல்லது ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களுக்கு பெரிய முக்கியத்துவத்தைத் தந்து நம்மை நாமே வீழ்த்திக் கொள்ள வழி ஆகிவிடக் கூடாது.மீண்டும் உறுதியாக சொல்கிறேன்.முகநூல் என்பது ஒரு விளம்பர ஊடகம். விவாத ஊடகம் அல்ல. கேள்விகளுக்கு பதில் சொல்லும் விடைத்தாள் அல்ல.

நம் கட்சிக்காக நாம் விளம்பரம் செய்வோம். பட்டித் தொட்டி எல்லாம் நாம் தமிழரை கொண்டுபோய் சேர்ப்போம். விவசாயி சின்னத்தை பரப்புவோம். அலைபேசி முழுவதும் அண்ணன் சீமானின் பேச்சுக்கள் பரவட்டும்.

வெல்லப் போறான் விவசாயி.❤️

558தமிழ வேள், Packiarajan Sethuramalingam and 556 others25 comments112 sharesLikeCommentShare

25