3c69758c7da7fdb64651dff52fe2c007நமது உரையாடலின்
சொல் உதிர்தலில்
நமக்கான கவிதையை
நாம் தேடிய போதுதான்..

நீ உரையாடலை நிறுத்தி
மெளனமானாய்…

அடங்கா பசியை
அடர்த்தியாய்
சுமக்கும்
ஆடு ஒன்றாய்
எனை பார்த்து

ஆதி வனத்தின்
பசும் தழைகளாய்
எனை
மேய்ந்து விட்டு
போயேன்

என்று
உன் விழிகளால்
என்னிடம்
சொன்னாய்


இல்லை
இல்லை

மழைக்கால
சுடு தேநீரை
ஒரே மடக்கில்
குடித்து விடும்
வித்தை
நான் அறியேன்..

இது மீன் பிடிக்கும்
வேலை..

தூண்டிலுக்கும்
மீனுக்குமான
புரிதலில்..

ஏதோ

ஒரு தருணத்தில்
தூண்டில்
கனக்கும்..

மீன் சிக்கும்..

என்றேன் நான்..

உடனே
அவள்
என் தலை கோதி
சொன்னாள்..

நீதான் எனது
மொழியென….