16640712_255200901571452_3504575587698011278_n

 

 

வெம்மை பூக்கும்
இப்பாலையில்..
தனிமை யார்..
அனலேறிய
நினைவு யார்…

துளித்துளியாய்
வடியும் இந்த
இரவில்..
இருள் யார்..
குளிர் யார்..

அலை அலையாய்
தழுவி எழும்
இக் கடலில்
படகு யார்..
தத்தளிப்பு யார்..

நிலவொளி
சிலையாய்
உறைந்திருக்கும்
இந்தக் குளத்தில்
நீர் யார்..
மெளனம் யார்..

வானமே வழிந்து
ஓடுவதாய்
உணர வைக்கும்
இந்த அருவியில்
ஓசை யார்..
பாய்ச்சல் யார்..

மேகமாய் திரண்டு
வந்து பொழியும்
மழை மாலையில்..
தேநீர் யார்..
கவிதை யார்..

வியர்த்து அடங்கும்
நடுங்கும் நடுநிசிக்
கனவில்..
பிம்பம் யார்….
சொற்கள் யார்…

சலனங்கள்
தொலைத்த
என் விழிகளில்
காதல் யார்..
பிரிவு யார்..

தடுமாறுகிற
உன் சொற்களில்..
வலி யார்..
மொழி யார்…

முடிவாய்..
முடிந்தால்..
சொல்.

யார் ..
யார்..

நம்மில்

யார்..
யார்..

நீயும்
நானும்..