——————————–

அது ஒரு வெறும் உரையாடல்.

தன் கட்சியை சேர்ந்தவரிடம் அவர் பேசுகிறார்.

யாரை வேட்பாளராக நிறுத்துவது என்று பேசிக்கொள்கிறார்கள்.

தலைமைக்கு கட்டுப்பட கோருவதும், கண்டிப்பதும் அரசியல் அமைப்புகளில் மிக இயல்பாக நடைபெறுகிற ஒன்று.

அதை ஒரு செய்தியாக எடுத்துக் கொண்டு ஏதோ எதிர்மறைச் செய்தி போல பரப்பவதிலிருந்து..

அவர் குறித்து தவறான பிம்பத்தினை பரப்ப வேண்டும் என்கிற தவிப்பு பலருக்கும் இருப்பது புரிகிறது.

பல தவறானவைகளுக்கு அவர் பெரும் ஆபத்தாக திகழ்கிறார் என்பதும் புரிகிறது.

ஏன் இந்த கடுமையான வெறுப்புணர்ச்சி..

அவர் குறித்த பயம்தான்..

அலைஅலையாய் பரவ காத்திருக்கும் அவரது ஆவேச பரப்புரையை நினைத்து
எழும் அச்சம் தான்.

இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான்.

எதிரிகள் பயப்பட அவர் வாழ்கிறார்.

அவர்கள் அச்சத்தில் இவர் பற்றிய ஏதாவது கிடைக்காதா என தேடித் திரிகிறார்கள். அவர்கள் கனவில் கூட ஆழ்ந்த அச்சமாய்,நடுக்கமாய் அவர் உறைந்திருக்கிறார்.

அவருடைய அண்ணன் குறித்தும் இவ்வாறுதான் பல செய்திகளைப் பரப்பி பார்த்தார்கள்.

பயங்கரவாதி தீவிரவாதி முரட்டுத்தனமானவர் பிறரோடு உடன்படாது தனித்து நிற்கிற சர்வாதிகாரி என்றெல்லாம் பட்டம்கட்டி பார்த்தார்கள்.

அவருடைய அண்ணன் சமரசமில்லாது இதேபோல்தான் தனித்து கம்பீரமாக நின்றார்.

அவருக்குப் பிறகு பயம் ஏற்பட்டது இவரை பார்த்துதான்.

அவர்களின் அந்த அச்சம் நியாயமானது. தகுதியானது.

வரலாற்றில் சரியான ஒருவனை அவர்கள் மீண்டும் சந்தித்து விட்டார்கள்.

அதனால்தான் பதட்டம். இது போன்ற பரப்புரை.

ஆனால் இதற்க்கெல்லாம் அசருகிற ஆளா அவர்..

27 வல்லாதிக்க நாடுகள் ஒன்றாக எதிர்த்த போதும் தனி ஒருவனாக எதிர்கொண்ட ஒரு மாபெரும் வீரனின் தம்பி அல்லவா..

இது போன்ற சில்லறை சப்தங்களால் சினம் கொண்ட அவரது சொற்களை அணை கட்ட முடியாது.

இதுபோன்ற அவதூற்று சருகுகளின் ஓசைகள் அவரது இலட்சிய காலடிகளை தடுத்துவிட முடியாது.

ஏறி மிதித்துக் கொண்டு போய்க் கொண்டே இருப்பார்.

ஏனெனில் அவர்..எதிரிகளை இன்னமும் உறங்க விடாமல் உறுத்திக் கொண்டிருக்கிற பிரபாகரனின் தம்பி.

எதிரிகள் அச்சமுற வாழ்கின்ற அவரது வாழ்வென்பது..

நம் எல்லாராலும் ரசிக்கப்பட வேண்டியது கொண்டாடப்பட வேண்டியது.

அதில் உள்ள ஒரு செய்தியை ஆழமாக நாம் கற்க வேண்டியது.

எதிரி பயப்பட வாழ்.

சீமான்- எதிரிகளின் கனவில் உறையும் அச்சம்.

மணி செந்தில்.