கீழடியில் கிமு ஆறாம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுதப்படிக்க தெரிந்தவர்கள் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்து விட்டன என்றவுடன்… திராவிட கும்பலுக்கு உடலெங்கும் வியர்த்து கொட்டத் தொடங்கி விட்டது.

எங்களின் மொழித் தொன்மை, இலக்கிய இலக்கண வளமை, பற்றி எந்த செய்தி வந்தாலும் உடல் நடுங்கி, நாக்கு குழற உளரத்தொடங்குவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.

நாங்கள் சொல்வது மிக எளிது.

பூர்வகுடிகள் நாங்கள். மூத்தோர் வழிபாடும்,நாகரிகமும், கல்வியறிவும் கொண்ட ஒரு இனத்தின் மக்கள் நாங்கள்.
நாங்கள் தனித்த தேசிய இனம். நாங்கள் திராவிடர் இனம் அல்ல. நாங்கள் தமிழர் என்கின்ற தேசிய இனத்தின் மக்கள். எமக்கென கலை பண்பாடு நாகரிகம் கல்வி என்ற பல காரணிகளின் வரலாற்றுத் தொடர்ச்சி இருக்கிறது. பண்பாட்டு செழுமை இருக்கிறது.

அதைத்தான் கீழடி உறுதி செய்கிறது.

இதுவரை… புற அரசியல் செயல்பாடுகளை வைத்துக்கொண்டு தமிழ் தேசிய இனத்தின் வரலாற்று மூலங்களை மறைத்து பொய் வரலாறு எழுதிய திராவிடத்தின் முகமூடி கிழிந்து தொங்குகிறது.

திராவிட இயக்கத்தின் வளர்ச்சியால் தான் தமிழர்கள் அனைத்தும் அடைந்தார்கள் என்ற பொய்க்கதை கீழடி போன்ற உண்மைகள் வெளிவருவதால் இன்றைய இளைய தலைமுறை தமிழர்களால் எள்ளி நகையாடப்படுகிறது.

கல்வியறிவு என்பதை இவர்கள் கையெழுத்து போடுவது மட்டும் தான் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பண்பாட்டின் தொடர்ச்சி மூலம், வரலாற்று செழுமை மூலம் அடைந்த அறிவும் ..கல்வியறிவே. அவ்வகையில் தமிழர்கள் தங்கள் வாழ்வியல் மூலமாக அடைந்திருந்த வானியல், வேளாண்மை, பொருளாதாரம், உணவு முறை, மெய்யியல் என பல துறைகளின் உச்சம் திராவிடர்கள் சுட்டிக்காட்டுகிற கல்வி அறிவை விட உயர்ந்தது. அதைத் தமிழர்கள் தங்கள் மரபின் தொடர்ச்சி யிலேயே இயல்பாக பெற்றிருந்தார்கள்.

இடையில் வந்த ஆரியர்கள் எம் இனத்தின் வரலாற்றை மாற்றி எழுதி தங்கள் வர்ணாசிரம தர்மத்தை நிலைநாட்ட.. எமது வழிபாட்டை பண்பாட்டை நாகரீகத்தை கொள்ளையடித்தார்கள்.

ஆனாலும் நாங்கள் சித்தர் மரபில் இருந்து ஆரிய எதிர்ப்பை மிகச் சரியாக கடைப்பிடித்து வருகிறோம். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனை எங்கள் மன்னனாக கொண்டோம். ஆரிய மன்னர்கள் கனக விசயன் தலையில் கல் எடுத்து வந்து கண்ணகிக்கு கோவில் கட்டினோம். ஆரிய எதிர்ப்பு என்பது எங்களது மரபு. உதிரத்தோடு கலந்தது.

அதை எந்த திராவிடமும் எங்களுக்கு கற்பிக்கவில்லை.

எங்களது பல்வகை அறிவு வளர்ச்சியின் தொடக்கம் கிமு ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னதாக நிகழ்ந்திருக்கிறது என்பதைத்தான் கீழடி ஆய்வுகள் வலியுறுத்தி வருகின்றன.

எங்களது பண்பாட்டு வரலாற்று மூலத்தை நினைத்து நாங்கள் பெருமிதம் அடைகிறோம். எங்களது வேர் 5000 வருடத்திற்கு முந்தையது என எண்ணி பெருமையடைகிறோம்.

 

சரி.

அதை நினைத்து திராவிடம் ஏன் பதற வேண்டும்..??

காரணங்கள் இருக்கின்றன.

இப்படிப்பட்ட இனப் பெருமிதம் உருவாவது திராவிடத்திற்கு ஆபத்து. இனப் பெருமை உண்டானால் திராவிடத் துணையோடு ஆரியம் கட்டியெழுப்பி இருக்கிற சாதி வேறுபாடுகளுக்கு ஆபத்து எழும். இனப் பெருமை ஏற்பட்டால் தமிழன் சாதி மதம் கடந்து இன ஒர்மை கொள்வான். இன ஓர்மை நடந்துவிட்டால்.. இங்கே திராவிடம் என்ற பெயரில் ஆண்ட ஆள துடிக்கிற பிறமொழியாளர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும்.

திராவிடத்தை ஆதரிக்கிற தமிழர்களுக்கும் இதே சிக்கல். தன் மகன் செத்தால் கூட பரவாயில்லை. மருமகள் கணவனை இழக்க வேண்டும்..(தாலி ..பிரச்சனை வேற..சே..????????). தாங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கின்ற திராவிடம் இப்படி இடிந்து தரைமட்டமாவது கண்டு சற்றே.. பதற்றம் அடைகிறார்கள்.

எனவேதான் இதுபோன்ற வசவுகள் கிண்டல் கேலி அனைத்தும்..

நாங்கள் மீண்டும் உறுதியாகச் சொல்கிறோம்.

எதற்கெடுத்தாலும் பெரியாரை முன்னிறுத்துவது.. தங்களது பலவீனத்தை காட்டுவதாக திராவிடர்கள் உணர வேண்டும்.

எங்களது சமூக நீதிப் போராட்டம், கல்வி உரிமைக்கான போராட்டம் எதுவும் பெரியாரிடம் இருந்து தொடங்கியது அல்ல..

பெரியாரும் தமிழினத்தின் சமூக நீதிக்காக கல்வி உரிமைக்காக பெண்ணிய விடுதலைக்காக போராடினார். அவரது பங்களிப்பை போற்றுகிறோம். அவ்வளவே.

ஆனால் அனைத்தையும் மறந்துவிட்டு.. பெரியாரை ஏக ரூப பிரம்மாவாக காட்டுவதென்பது… தொன்மைவாய்ந்த ஒரு தேசிய இனத்தின் வரலாற்றினை இழிவு செய்வது. மாற்றி எழுத முயற்சிப்பது.

திராவிடத்திற்கு எப்போதும் சர்வரோக நிவாரணி ஒன்று தேவைப்பட்டு கொண்டே இருக்கிறது. ஒரு காலத்தில் நீதிக்கட்சி தலைவர்கள், பின் பெரியார், பிறகு அண்ணா இன்னொரு காலத்தில் கலைஞர்.. என இவர்கள் தனிநபர்களை முன்னிறுத்தி தத்துவங்களாக மாற்ற நிகழ்த்த முயற்சிப்பார்கள்.

ஆனால் தமிழ்த் தேசியம் அவ்வாறெல்ல. அது ஒரு இனத்தின் தேசிய உணர்வு.இறையாண்மை கொண்ட,தொன்மை வாய்ந்த வாழ்வியல் மூலமாக விளைந்த .. வரலாற்றின் போக்கில் அதன் தொடர்ச்சியில் விளைந்த.. உரிமை முழக்கம்.

தனிநபர்கள் தமிழ்த் தேசியத்தின் மூலவர்கள் அல்ல. ஆதிமனிதன் தொடங்கி, சித்தர் வழிபாட்டில் இருந்து செழுமை பெற்று, அகத்தியம் தொல்காப்பியம் திருக்குறள் என பண்டைய இலக்கிய வளங்களால் நிறைந்து.. சைவ, வைணவ, பௌத்த சமண ஆசிவக என பல்வகைப்பட்ட மெய்யியல் கோட்பாடுகளால் வளர்ந்து.. ஒவ்வொரு காலகட்டத்தின் அரசியல் புறச் சூழ்நிலைகளால்.. உருவாகி கொண்டே போவதுதான் தமிழ்த் தேசியம்.

தமிழராகிய எங்கள் உதிரத்தில் ஊறி கிடக்கிற ஆதிமனிதனின் மரபணு தனது முதுபெரும் வரலாற்று தொடர்ச்சியை நினைத்து
பெருமை கொள்ளத்தான் செய்யும்.

அது இயல்பு.

அதைப் பார்த்து திராவிடர்களால் பொறுக்க முடியவில்லை என்றால்.. அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது.

ஏற்கனவே தத்துவத்தின் போதாமை திராவிடத்தின் தோல்வியாக வெளிப்பட்டு கொண்டிருக்கின்ற சூழலில்.. அரசியல் வலிமை மட்டுமே இன்று திராவிடத்தின் கைகளில் இருக்கிறது.

அதையும் அடைய ஒரு இளம் தமிழர் கூட்டம் முன்னேறி பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது.

அந்த வெறி பாய்ச்சல் சற்றே நாகரிகக் குறைவானது தான். இதுவரை இருந்த இலக்கண விதிகளுக்குள் அடங்காது தான்..

ஓரமாய் நின்று வேடிக்கை பார்க்காமல்.. நடுவில் வந்து நின்று மறித்தால் ஓடி வருகிற கூட்டம் மிதித்து விட்டு தான் ஓடும்.

எனவே திராவிடம் அனைத்தையும் மூடிக்கொண்டு.. கொஞ்சம் தள்ளி நிற்க வேண்டிய காலம். இல்லையேல் மனுஷ்யபுத்திரன் வகையறாக்கள் போல்.. புலம்பத்தான் வேண்டியிருக்கும்.

கவனம்.