விடுபடவே முடியாத கால சுழற்சியின்

திடுக்கிடும் கணமொன்றில்

உலராது உறைந்திருக்கும்

உந்தன் முகம்..

ஒரு இசைக்குறிப்பு போல

என் இதயத்தில் ஆழ்ந்து கால நேர பேதம் அறியாமல்

ஒலித்து கொண்டே இருக்கிறது.

நிறைவேறாத கனவின்

தணியா தாகத்தை

பொன் மகரந்தங்களாக சுமந்து திரிகிறது

என் ஆன்மாவினுள் ஒரு வண்ணத்துப்பூச்சி.

❤️

மணி செந்தில்

35Raju Janu, மு.முகம்மது சர்வத்கான் and 33 others1 comment1 shareLikeCommentShare

1