ஏதோ நகர்த்தலில் என்றோ , யார் பெயரிலோ

சேமித்து வைத்திருக்கும்

உன் அலை பேசி எண்ணை

கால நழுவலின் பிசகிய நொடி ஒன்றில்

என்னை அறியாது பார்த்துவிட்டேன்.

அது ஒரு குழந்தையைப் போல

ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தது.

எப்போது வேண்டுமானாலும் விழித்து விடுகிற அபாயத்துடனும்,

அலறி காட்டிக் கொடுத்துவிடும் ஆபத்துடனும்.

ஆனாலும் ஆழ்ந்து தூங்கும்

அந்த குழந்தையின் முகத்தில் தான் எத்தனை அழகு..??

❤️