
காலையில் தம்பி இடும்பாவனம் கார்த்திக் கவிதாபாரதி எழுதிய பதிவு ஒன்றை எனக்கு அனுப்பி இருந்தார்.
மிகவும் புத்திசாலித்தனமாக கேட்பதாக நினைத்துக் கொண்டு ஏன் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் விவசாயிகள் ஆடு மாடு மேய்ப்பவர்களுக்கு இடம் இல்லை என அபத்தமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
தமிழ்நாட்டு வாழ்வியலை முற்றிலும் புரிந்து கொள்ளத் தவறிய அந்த கேள்வியை புத்திசாலித்தனமான கேள்வியாக நினைத்துக் கொண்டு மடக்கி விட்டோம் என மல்லாந்து படுத்துவிட்ட கவிதாபாரதி தன்னைப் பொதுவுடமைவாதி என்று வேறு சொல்லிக் கொள்வது அந்த இயக்கத்திற்கே அவமானம்.
ஏனெனில் பெரும்பாலும் இடதுசாரிகள் கிராம வாழ்வியலை கொண்ட எளிய வாழ்க்கை முறையை கொண்டவர்கள். படித்த பட்டதாரிகளாக இருந்தாலும் விவசாயிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள். சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் சட்டமன்ற அவை நடக்காத நேரங்களில் விவசாயம் பார்க்கும் வாழ்க்கை முறையை கொண்டவர்கள். உறுதிப்படுத்திக் கொள்ள மன்னார்குடி திருத்துறைப்பூண்டி பகுதிக்கு பயணப்பட்டால் தெரியும்.
அப்படி பார்க்கும்போது.. நாம் தமிழர் கட்சியின் பெரும்பாலான வேட்பாளர்கள் விவசாய குடும்பத்தின் பின்னணியில் தான் வந்திருக்கிறார்கள். அவர்கள் கல்வி கற்ற பட்டதாரிகள் தான். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு சொந்தமாக நிலம் இருக்கிறது. சிலருக்கு சொந்தமாக ஆடு மாடுகள் இருக்கின்றன. பூம்புகார் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இளைய நகுலன் எம்பிஏ படித்தவர் என்றாலும் கடலிலே போய் மீன்பிடிக்கும் தொழிலை செய்பவர்.
விவசாயம் என்பதை தொழில் போன்று நினைத்துக் கொண்டு கவிதா பாரதி உளறி கொட்டியதை.. ஏதோ திருக்குறள் சொல்லிவிட்டார் என்பது போல வழக்கம்போல அணில் குஞ்சுகளும் திடல் தின்னிகளும் பரப்பி வருவது காமெடி.
தமிழ்நாட்டில் இருக்கின்ற பெரும்பாலான குடும்பங்கள் நேர்முகமாகவோ மறைமுகமாகவோ விவசாய வாழ்வியலை சார்ந்தவை தான். எடுத்துக்காட்டாக எங்கள் அண்ணன் சீமான். அவருக்கு ஊரில் விவசாய நிலம் இருக்கிறது. அம்மா அதில் விவசாயம் பார்த்து வருகிறார். ஊரிலிருந்து தான் அவருக்கு அரிசி போன்ற உணவு பொருட்கள் வருகின்றன. ஊருக்கு செல்லும் நேரத்திலும் தன் நிலங்களை பார்த்துவிட்டு வருவதை அண்ணன் சீமான் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அடிப்படையில் அவர் ஒரு விவசாயி தான். திரைப்பட ஆர்வத்தின் காரணமாக சினிமா இயக்குனராக வேண்டுமென சென்னைக்கு வந்தவர் அவர்.
இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விவசாயப் பின்புலம் இருக்கிறது. எங்களது மயிலாடுதுறை வேட்பாளர் காசிராமன். அவர் மிகப்பெரிய கால்நடை பண்ணையே வைத்திருக்கிறார். ஆடு மாடு மேய்த்தல் அவரது அன்றாடப் பணிகளில் ஒன்று. அந்த மேடையில் வேட்பாளர்கள் படித்த கல்வித் தகுதிகள் மட்டுமே காட்டப்பட்டன. வாழ்க்கையைப் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. எனவே ஆடு மாடு மேய்ப்பவர்கள் விவசாயம் பார்ப்பவர்கள் என்றுதான் பெரும்பாலும் தனது வேட்பாளர்களை அண்ணன் சீமான் தேர்ந்தெடுத்து இருக்கிறார்.
சரி கவிதா பாரதி கதைக்கு செல்வோம். அவருக்கு புத்தக கண்காட்சிகளில் பேசுகின்ற வாய்ப்பை கொடுக்கின்ற திமுகவின் தலைமைச் செயலாளர் கே என் நேரு ஊரில் இன்னமும் ஆடு மாடு வளர்த்து விவசாயம் செய்து வருகிறார் அதை அவரே பேட்டி வழங்கி பெருமையாக சொல்லிக் கொள்கிறார்.
இது எல்லாம் கவிதா பாரதிக்கும் புரியும். அப்புறம் ஏன் அந்த பதிவு என்கிறீர்களா.. வேறு வேலை..?? பதிவு போடுவது ஒரு வேலையா என்ற கேள்வி உங்களுக்கு வரும்போது .. விவசாயம் என்பது தொழில் அல்ல/ அது பார்க்கும் வேலையும் அல்ல/ பதிவு போடுவது போல அது ஊதியத்திற்கு பார்க்கும் பிழைப்பும் அல்ல/ அது வாழ்வியல் என உரிய வரும்.
இந்த பொழப்புக்கு..??
மறுமொழி இடவும்