மணி செந்தில்

பேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.

அன்பு நண்பர் சுரேஷ் காமாட்சிக்கு ஒரு கடிதம்.

கடித இலக்கியம் /

அன்பு நண்பர் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கு. வணக்கம் தல. மாநாடு படத்தை உடனே பார்க்க முடியாததற்கு மன்னிக்கவும்.படம் வெளியாகி சில நாட்கள் கழித்து தான் பார்க்க நேர்ந்த போதிலும், கூட்டம் நிறைந்து அரங்கம் முழுமையாக இருந்ததை பார்த்த போது உண்மையிலேயே உங்கள் முகம்தான் எனக்கு நினைவுக்கு வந்தது. மற்றபடி இந்த கடிதம் மாநாடு பற்றி அல்ல. திரையரங்கில் இருந்து நான் உங்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பிய குரல் பதிவில் சொன்னதுபோலவே உங்கள் பெயர் திரையில் மின்னிய உடன் …

 66 total views

என் வானின் பகலவன்..

கடித இலக்கியம் /

    அன்புள்ள பகல்.. அப்பா எழுதுகிறேன். இந்நொடியில் உன்னை நெஞ்சார்ந்து அணைத்துக்கொள்கிறேன். எப்போதும் மினுமினுக்கும் உன் கண்களில் தான் என்னை தேட வேண்டி இருக்கிறது. எனக்காக நீ எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்வாய். சகித்துக் கொள்வாய். சில சமயங்களில் என்னையும் கூட.. பல சமயங்களில் எங்கோ அலைந்து விட்டு, கூட்டம் முடித்து விட்டு வீடு திரும்புகையில்.. நீ அயர்ந்து தூங்கி இருப்பாய். வெளிச்சம் பட்டு உன் விழிகள் மெலிதாய் திறந்து பார்க்கும். எனை கண்டதும் சட்டென பூத்து …

 689 total views

வேண்டாம் அண்ணா இது..வேண்டும் அண்ணா நீங்கள் ..

கடித இலக்கியம் /

என்னுயிர் அண்ணனுக்கு.. கலங்கும் என் விழிகளுக்கு முன்னால் மங்கலாய் நீங்கள் தமிழக முதல்வருக்கு எழுதிய கடித வரிகள் இந்த கணிணித் திரையில் ஒளிர்ந்துக் கொண்டே இருக்கிறது. மீண்டும் ஒருமுறை எனக்குள் அழுத்தமாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த கடிதத்தை பயஸ் அண்ணா எழுதி இருக்க மாட்டார். ஏனெனில் நான் உங்களோடு வாழ்ந்திருக்கிறேன். உங்கள் வாழ்க்கையில்..உங்களில் ஒருவனாய்…சில சமயங்களாய் நீங்களாக கூட நான் வாழ்ந்திருக்கிறேன். விடுதலைக்கு விலங்கு எழுதப்பட்ட காலங்களில் இரவு-பகல் பேதமறியாது உள்ளூரிலேயே ஒரு விடுதி அறை …

 613 total views

மனுஷ்ய புத்திரனின் பிழைப்புத்தனங்களுக்கு

கடித இலக்கியம் /

  ========================================= மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கு…   கடந்த சில நாட்களாக  திமுக அமைத்திருக்கும்  அண்ணன் சீமான் அவர்கள் மீதான வசைபாடல் பிரிவிற்கு  நீங்கள் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து வரிசையான வசையாடல்களை வாரி வழங்கி வருவதற்கு… அப்பட்டமான 3 ஆம் தர பிழைப்பு வாதம் தவிர வேறு என்ன காரணங்கள் இருக்க முடியும்.. அய்ய்யயோ.. நானா…பிழைப்பு வாதியா என்றெல்லாம் கூப்பாடு போட முடியாத அளவிற்கு உங்களது பிழைப்பு வாத தந்திரங்கள் பதிப்புலகிலும், அரசியல் உலகிலும் , தொலைக்காட்சி ஊடக …

 956 total views

என் அம்மாவிற்கு…

கடித இலக்கியம் /

என் அம்மாவிற்கு.. யாரிடமும் விளக்க முடியா..விவரிக்க முடியா அளவிற்கு உன் மீதான என் ஞாபகங்கள் விரிந்துக் கொண்டே செல்கின்றன..சொல்லப்போனால் நான் உன் பேச்சை அப்படியே கேட்கிறவன் இல்லை. உன் கனவுகளில் நீ என்னை பற்றி வரைந்திருந்த சித்திரங்களுக்கு நேர்மை செய்தவன் இல்லை. உறவுக்காரர்கள் மத்தியில் என் மகனும் அமெரிக்காவில் இருக்கிறான், ஆஸ்திரேலியாவில் படிக்கிறான் என்றெல்லாம் பெருமைப் பொங்க விவரிக்க உனக்கு வாய்ப்பே தந்ததில்லை. என்னைப் போன்ற உடல் நலம் குன்றிய மகனால் ஒரு தாய்க்கு மருத்துவமனையின் மங்கிய …

 851 total views

புரட்சிக்கர வாழ்த்துக்களுடன்..

கடித இலக்கியம், சுயம் /

என் அன்பிற்கினிய கல்யாண்.., இந்த பொழுதில் இமைகளில் துளிர்க்கும் இன்ப கண்ணீரோடு.. உன் உயிர் அண்ணனாகிய நான்..உன்னை இறுக்க தழுவுகிறேன் . என் பாசமுத்தங்கள் உனக்கு.. ஆவேசமும்,கம்பீரமும் மிக்க உனது தமிழ் போலவே உன் வாழ்வும் நேர்த்தியாக அமையட்டும் . நாம் இருவரும் –ஏன் இதை இங்கு படிக்கிற ராஜீவ்காந்தி என்கிற அறிவுச்செல்வன் உட்பட, நாம் தமிழர் என்கிற இலட்சிய நெறியில் கூடியிருக்கிற இந்த இளம் புரட்சியாளர்கள் உட்பட, நாம் அனைவரும் தமிழ்ச்சமூகத்திற்காக நம்மை ஒப்புக் கொடுத்திருக்கிறோம் …

 866 total views

கருணாநிதியின் கடிதம் எழுதும் கடிதம்…

கடித இலக்கியம் /

திமுக தலைவரும் ,தமிழக முதல்வருமான கருணாநிதிக்கு கடிதங்கள் எழுதுவதுதான் அவருடைய உச்சக்கட்ட கடமையாக கருதுகிறார். ஈழத் தமிழர் கொன்று குவிக்கப்பட்ட பொழுதுகளிலும் கடிதம் எழுதினார். காவேரி , முல்லையாறு பிரச்சனைகளிலும் கடிதம் எழுதினார். எதற்கெடுத்தாலும் கடிதம் எழுதுவதையும், பதில் கடிதம் பெறுவதையுமே தீர்வாக நினைக்கும் கருணாநிதி இண்டர்நெட் , செல் போன், வீடியோ கான்பிரஸ்சிங் , என தகவல் தொழிற்நுட்பம் வளர்ந்து விட்ட காலத்திலும் பிடிவாதமாக கடிதம் எழுத குந்த வைத்து உட்காருவது மாபெரும் அதியசமே… கருணாநிதியின் …

 1,341 total views

வணக்கங்கள்.

கடித இலக்கியம் /

அன்புள்ள தமிழ் மணம் உறவுகளுக்கு .. வணக்கங்கள்.. தமிழ் மணம் நட்சத்திர வார எழுத்தாளனாக என்னைப் போன்ற எளியோனை தேர்வு செய்ததற்கு என் நன்றிகள்.. நான் இந்த வாரத்தினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முயல்கிறேன். என் பதிவுகளில் ஏதேனும் குறைகளோ, விமர்சனங்களோ தங்களுக்கு இருப்பின் தாராளமாய் எழுதுங்கள். நான் கற்றுக் கொள்கிறேன். சமூகத்தினை சாரா எழுத்துக்களில் எனக்கு சற்றும் நம்பிக்கை இல்லை . ஈராயிரம் ஆண்டுகளுக்கு மூத்த ஒரு மொழியின் துயராய்… தோல்வியுற்ற ஒரு இனத்தின் வலியாய் …

 1,835 total views

மதிப்பிற்குரிய தமிழ்நதி அவர்களுக்கு..

கடித இலக்கியம் /

(இக்கடிதம் ஆதவன் தீட்சண்யாவின் சமீப வினைகளுக்கு எதிராகவும், தமிழ்நதியின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாகவும் எழுதப்பட்டது.) மதிப்பிற்குரிய தமிழ்நதி அவர்களுக்கு.. ஆதவன் தீட்சண்யாவை நாம் இந்த விஷயத்தில் பொருட்படுத்தவே தேவையில்லை. இழவு வீட்டில் யாரும் இல்லை என்று ஊர்ஜிதம் செய்து கொண்டு நேற்றைய வன்மத்தோடு இன்று எச்சில் துப்பி விட்டு செல்லும் வக்கிரக்காரர்கள் இவர்கள்.சம காலத்து மனித அவலத்தின் ஊடாக இவர்களுக்கு வன்மம் கொள்ள முடிகிறதென்றால்.. இவர்களுக்குள் உள்ள படைப்பு மனம் குறித்த சந்தேகம் எழுகிறது.விடுதலைப் புலிகள் அமைப்பின் மேல் …

 866 total views

தலைக்குனிந்த சமூகத்தின் ஒரு குரலாய்….

கடித இலக்கியம் /

ஈழ உறவுகளுக்கு…தாயகத் தமிழகத்திலிருந்து…மிகுந்த குற்ற உணர்ச்சியின் ஊடே எழுதுகிறேன். அரசியல் பிழைப்பு வாதிகளின் சதிகளில் சிக்கிக் கொண்டு மீண்டு எழவே முடியாத ஆழ் இருட்டிற்குள் நாங்கள் சிக்கித் தவிக்கிறோம். எம் முன்னரே எம் இனம் அழிக்கப்பட்டது. யாரும் கேட்கவில்லை. முத்துக் குமாரர்களாய் செத்தும் பார்த்தோம்..சீண்ட நாதியில்லை..தேர்தல் கூத்தில் சிக்கி சின்னாபின்னமாய் சிதைக்கப்பட்டோம் இறுதியில். காசுக்கும்,பதவிக்கும் காட்டிக் கொடுக்கப்பட்டு காவு வாங்கப்பட்டோம் நாங்கள்..உங்களின் துயரம் எங்களின் மாறாத வடுவாய்..தோல்வியாய் வரலாற்றின் முன்னால் எங்களை தலை குனிந்து நிற்க வைத்திருக்கிறது. …

 1,370 total views