வனமேறி நின்ற
அந்த புலியின்
கண்கள்
ஆதி முருகன்
சாயல் ஒத்தவை
என பார்த்தோர்
பதற சொன்னார்கள்.

சினமேறி நின்ற
அதன் சீற்றம்
அறிந்தோர்
அது வெறும்
வனமேறிய புலி
அல்ல..
அது மூத்த குடி
சுமந்த கனவு
என கண்டார்கள்.

கார்த்திகை இரவில்
காந்தள் மலர் பூட்டி
சன்னதம் வந்து
முழங்கிய முதியவன்
ஒருவன் கம்பீரமாய்
சொன்னான்.

அது கனவும் அல்ல ,
நினைவின் சினமும் அல்ல,
அது
இனம் வணங்கும்
இறை என்று.