கடந்த 15 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் எங்கள் உயிர் அண்ணன் செந்தமிழன் சீமான் மீது ஊடகங்களும், திராவிட ஆதரவு அமைப்பு உதிரிப் பேமென்ட் அடியாட்களும், நடத்துகிற அவதூறு/ஆபாச வசைமொழிகள் இதுவரை தமிழ்நாட்டு அரசியல் சூழலில் நடைபெறாதது. அது ஒருவகை மூர்க்கமான வன்முறை. எதிர்க்கருத்து வைக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக காசு வாங்கிக்கொண்டு கருத்தியல் அடியாட்களால் திட்டமிட்டு நிகழ்த்தப்படுகின்ற கலவரம்.

குறிப்பாக அரசியலுக்கு முற்றிலும் சம்பந்தமில்லாத அண்ணன் சீமான் அவர்களது குடும்ப பெண்கள் மீது திட்டமிட்டு நடத்தப்படும் அவதூற்று ஆபாச வசை மொழிகள் இதுவரை எந்த அரசியல் தலைவர்கள் மீதும் ‌ நிகழ்த்தப்படாத உச்சபட்ச வன்முறை. எதனால் இந்த வன்முறை என்று யோசித்தால் அது அண்ணன் சீமான் கொண்டு இருக்கிற திராவிட எதிர்ப்பு மனநிலை. ஆனால் அதற்கு முற்றிலும் சம்பந்தமில்லாத குடும்பப் பெண்களை நோக்கி அவதூறு பரப்புவது எந்த விதத்தில் நியாயம் என ஒரு பெண் கூட இந்த சமூகத்தில் கேட்கவில்லை என்பது ஈவேரா கட்டமைத்த ஆபாச திராவிட அரசியல் சூழலில் நாம் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதற்கு ஒரு உதாரணம்.

எங்கள் குடும்பத்தில் வாழ்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக எங்கள் வீட்டு பெண்கள் மீது அறிவாலயத்தின் ஒட்டுத் திண்ணைகள், ரூ200 பேமெண்ட் யூடியூப் கருத்தியல் அடியாட்கள் வேலை பார்க்கிற மைனர் அதர்மம் மனோஜ் , கரிகாலன் போன்ற சில்லறைகளில் தொடங்கி கோவை ராமகிருஷ்ணன் போன்ற மூன்றாம் தர கேடு கெட்டவர்கள்‌ நிகழ்த்துகிற வன்முறை குறித்து எந்த பெண்ணிய அமைப்பும் பேசாமல் மௌனம் காக்கிற கொடும் நிலை நிகழ்த்தப்படுகிற வன்முறையை தாண்டிலும் கொடுமையானது.

எளிதாக அரசியலுக்கு முற்றிலும் தொடர்பில்லாத குடும்பப் பெண்களை அவதூற்று ஆபாச வசை மொழிகள் மூலமாக உருகுலைத்து, அதன் மூலமாக சமூக அரசியல் தளத்தில் பங்கேற்கிற அவர்களது குடும்பத்து ஆண்களை பலவீனப்படுத்த முடியும் என நினைக்கிற இந்த திராவிட” திருட்டுத்தன அயோக்கியத்தனத்தை” தமிழ்நாட்டில் அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது உண்மையில் வெட்கக்கேடானது.

youtube thumbail -ல் தொடங்கி காணொளிகள் உட்பட பலவற்றிலும் நாங்கள் அரசியலில் பங்கேற்கிறோம் அவர்களுக்கு எதிரான கருத்தை பேசுகிறோம் என்ற ஒரே காரணத்திற்காக அரசியல் பங்கேற்ப்பில் இல்லாத ‌அண்ணன் சீமான் அவர்களது மனைவியான எங்களது அண்ணியாரை/ எங்கள் குடும்பப் பெண்களை மிக இழிவாக பேசுகின்ற, காணொளிகள் பரப்புகிற அயோக்கியத்தனத்தை தமிழக அரசியல் தளம் வேடிக்கை பார்ப்பது என்பது அவமானகரமானது. இப்படி காசு கொடுத்து சில சில்லறைகளை ஏச விடுவதன் மூலமாக தங்கள் நிலையை பலப்படுத்திக் கொள்ளலாம் என திராவிடத் தரப்பு எண்ணுவது அவர்கள் ஏற்கனவே அடைந்து விட்ட தோல்வியையும், பலவீனத்தையும் காட்டுகிறது.

ஒரு அமைப்பில் பங்கேற்று இத்தனை ஆண்டு காலம் பொது வாழ்வில் இருந்த கோவை ராமகிருஷ்ணன் என்கின்ற கேவலங்கெட்ட மூன்றாம் தர நபர் ஒரு மேடையில் அண்ணன் சீமான் அவர்களை குறித்தும், சொந்த கிராமத்தில் இந்த அரசியல் நிலைகளுக்கெல்லாம் தொடர்பில்லாமல் விவசாய பணியில் ஈடுபட்டு வரும் ‌ அவரது தாயாரை குறித்தும், ஒரு கேடுகெட்ட ஆபாசமான மூன்றாம் தர விமர்சனத்தை எவ்வித உறுத்தலும் இல்லாமல் வைக்க முடிகிறது என்றால் இந்த திராவிட திருடர்கள் எப்பேர்ப்பட்ட மன நோயாளிகளாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அருகில் நின்று கொண்டிருக்கின்ற ஒரு அரசியல் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு இது பற்றி எந்த உறுத்தலும் இல்லை.

இதுதான் இந்த சீரழிவின் தொடக்கமான ஈவேரா இந்த அயோக்கியர்களுக்கு கற்றுக் கொடுத்த கருத்துரிமை பெண்ணியம் கண்ணியம் கடமை வெங்காயம் பெருங்காயம் போன்றவை எல்லாம். பார்ப்பனீய எதிர்ப்பு என்ற பெயரில் அரசியல் தொடங்கிய இவர்களது அரசியல் நடவடிக்கையில் பெண் உடல்/ நடத்தை சார்ந்த “தேவடியாள் மகன்” என்ற வசை சொல்தான் ஒட்டுமொத்த திராவிட அரசியலின் மூலச்சொல். ஈவேரா வாயில் அதிகம் புழங்கியதும் இந்தச் சொல் தான்.

அதனால்தான் மிக எளிதாக கேடுகெட்ட மூன்றாம் தர திராவிடப் பொறுக்கிகளால் ஒரு பெண் உடல் சார்ந்த வசைமொழியை பேசிவிட முடிகிறது. இன்று சமூக வலைதளங்களிலும் மேடைகளிலும் இப்படி பேசுபவர்கள், அவர்கள் எந்த அமைப்பை சேர்ந்தவராக இருந்தாலும் சரி. அனைவருமே “திராவிட மனநோய் பாதிப்பு” அல்லது ஆதிக்கம் கொண்டவர்களே.

உங்கள் திராவிடத்தை விமர்சிக்கிறோம் என்றால் நீங்கள் எங்களது கருத்து அல்லது தமிழ்த்தேசியத்தை விமர்சியுங்கள் . கருத்தியல் நிலை கொண்டு தாக்குங்கள். அதை எதிர்கொள்ளும் அறிவினை எம் பெருமை மிக்க தமிழின முன்னோர்கள் எங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். அதை விடுத்து விட்டு கோழைத்தனமாக இதில் முற்றிலும் சம்பந்தமில்லாத குடும்பப் பெண்களை, கிராமத்தில் வசிக்கும் வயதானத் தாயை, பெண் உடல்/ நடத்தை குறித்து அவதூற்று விஷம பொய் ஆபாச வசை மொழிகளை பேசும் இந்த youtube ப்ரூட்டஸ் மைனர், அதர்மம் மனோஜ் , கரிகாலன்,கோவை ராமகிருஷ்ணன் போன்ற மூன்றாம் தர சில்லறைகளை எதிர்த்து ஒரு சிறு கருத்து கூட பேசாத பெண்ணிய அமைப்புகள் அறிவாலயத்தின் கூலிக்காக காட்டுகிற மௌனம் அருவருப்பானது.

தமிழக அரசியல் வரலாற்றில் திராவிட கட்சிகளின் தோற்றம் நிகழ்ந்ததிலிருந்து இப்படி பெண்களை அவர்களது நடத்தைகளை குறிவைத்து பெண் உடல் சார்ந்த ஆபாச வசைமொழிகளை அரசியல் தளத்தில் நிகழ்த்துவது தொடர்கதையாகி வருகிறது. அந்தக் காலத்தில் மேடையில் வெற்றி கொண்டான் தீப்பொறி ஆறுமுகம் நன்னிலம் நடராசன் போன்றோர் செய்த அதே மூன்றாம் தர ஆபாச வசை மொழி அசிங்கமான உத்தியை இன்று சமூக வலைதள காலத்தில் இவர்களைப்போன்ற ஆபாச கருத்தியல் அடியாட்கள் செய்து வருவதும், அதற்கு திராவிட மாடல் அரசே துணை நிற்பதும் கேவலத்திலும் கேவலம்.

கடந்த காலத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஜானகி அம்மையார் ஜெயலலிதா போன்ற பலரையும் ஆபாசமாக ஏசி பேசிய இந்த கும்பல் இப்போது அரசியல் களத்தில் பங்கேற்கின்ற தலைவர்களின் குடும்பத்தினரை குறிப்பாக அரசியல் தளத்தில் பணியாற்றாத பெண்களை குறி வைத்து ஆபாச வசைமொழிகள் வலையொளிகளிலும் மேடைகளிலும் சமூக வலைதளங்களிலும் பேசுவது திராவிடக் கருத்தியலின் பொறுக்கித்தனத்தை ஊரறிய செய்திருக்கிறது.

இப்படி அரசியல் தளத்தில் பங்கேற்காத , அரசியல் தளத்திற்கு முற்றிலும் சம்பந்தமில்லாத குடும்பப் பெண்களை நோக்கி பெண் உடல்/ நடத்தை/ மொழி/ உடை/ போன்றவை குறித்து மிக ஆபாசமாக பேசுகின்ற இந்த இழிவானவர்களுக்கு எதிராக, வாய் திறக்காத ஒவ்வொரு பெண்ணிய கருத்தியல் போராளிகள்/ அமைப்புகள்/ கருத்தாளர்கள் போன்ற ஒவ்வொருவரும் நடந்து கொண்டிருக்கின்ற மிக மோசமான வன்முறைக்கு பொறுப்பாளிகளே.!

குறிப்பாக பெண்கள். இப்படிப் பேசுகிற மூன்றாம் தர ஆபாச கேடுகெட்டவர்களை உங்களது மௌனத்தின் மூலமாக நீங்கள் கடப்பது என்பது/ அல்லது அனுமதிப்பது என்பது இந்தச் சமூகத்தில் நீங்கள் வாழ முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தி விடும் என்பதை உணர்க.!

அநீதிக்கு எதிராக குரல் எழுப்பும் உங்களின் ஒவ்வொரு குரலும் மதிப்புடையது என்ற நம்பிக்கையில் உங்களை நோக்கி இந்த கோரலை முன்வைக்கிறேன்.

மௌனம் கலையுங்கள்.!,